Thursday 16 March 2017

ஷேரா ஒரு அழகான பெண் .கடந்த  க்றிஸ்மஸ் க்கு எங்கள் வீட்டுக்கு வந்தபோது நாங்கள் பின் விளைவுகளை பற்றி அறிந்திருக்கவில்லை.
இப்போதெல்லாம் அவளால் நமக்குள் அடிக்கடி சச்சரவுகள்.
 இந்த ஷேரா வை விட்டுட்டு நாம எங்கேயுமே போக முடிவதில்லை .அது கூட பரவாயில்லை  ஒரு டபிள் பெட் ல 4 பேர் . இப்போ ஷேரா வும் நடுவில் .நான் சண்டை போட்டுக்கொண்டு  அடிக்கடி தொட்டிலுக்குள்
போய் முடங்கி தூங்கி விடுகிறேன்.

ஷேரா  வுக்கு நேரத்திற்கு நேரம் முட்டை,யூஸ் ,குக்கி எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கிறது.
அடிக்கடி அழகான ட்ரெஸ் எல்லாம் தேவைப்படுகிறது.முடியே இல்லாட்டாலும் முழுக்கும் கேர் ட்ரையரும் கேக்குது .
நேற்று என் கேர்ள்ஸ் க்கு காய்ச்சல் க்கு டாக்டரிடம் கூட்டி போனோம் .ஆனால் இந்த ஷேரா வழக்கம் போல டைப்பரும் கட்டிக்கொண்டு அங்கேயும் வந்துவிட்டாள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இப்போ காருக்குள் ஷேராவுக்கும் பேபி ஸீட் வேணுமாம் டெய்லி ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் .ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பபாடா எத்தின பிரச்சனைகளுக்கு முகம் குடுத்தாலும் இந்த கொசுறு பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருக்கே

Tuesday 14 March 2017

சம்பவம் சம்பவம்






டொரண்டோ பெரும்பாகங்கள் எச்சரிக்கையுடன் கூடிய கடும் குளிரை கட்டி அணைத்துக்கொண்டு தன்இறுதி சுற்றுக்கு நகர்கிறது.
அறிவுறுத்தப்பட்டபடி நேற்றுத்தொடங்கி இரவிரவாக பூமியை நனைத்து பகல் பொழுதும் குளிரை அள்ளி வீசிக்கொண்டிருக்கும் வெண்பனியை , வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழி நோக்கமுடியாமல்
கண்ணாடியை பற்றிப்பிடித்து கண்ணை அடைத்தபடி காட்சி அளிக்கிறது பனிக்கோலம் .
வழக்கமான குளிர் கால இரவுச்சுற்றுலாவில் தேனீர் உடன் அழகையும் பருகிவிட்டு 8.30 க்கு இரவுத்தூக்கத்திற்கு வீட்டில் நுழைந்தோம்.
{ஆம் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு லார்ஜ் சைஸ் கோப்பியும் வாங்கிக்கொண்டு இரவின் அழகில் 1 மணிநேரமாவது வலம் வருவோம். திருமணமானதில் இருந்து தொடங்கிய 
இந்தப்பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.]
கதகதகப்பாக அமைதியாக அரவணைப்பாக இருந்தது குளிர்கால இரவுப்பொழுதை உட்கொண்ட வீடு.
தூக்கத்திற்கான ஆயத்தங்கள் முடித்து மெழுகுதிரி வெளிச்சத்தில் அரைமணிநேர உரையாடல் .
அதுவும் முடித்து ,,,,,,
தூக்கம் அன்பாக அழைத்தது.மெல்லிய வெளிச்சத்தில் ஆளுக்காள் இரவு வணக்கங்களின் பரிமாற்றம்.
அழகான தூக்கம்......அதை கலைத்தபடி அருகி வருகிறது அதைவிட அழகான விடியல் ,,,,,, ஆனால் நானோ அவசரமாக ஏதோ கனவு,,,,, கனவில் அருமையான இடம்.
இளவேனில் காலத்தின் இதழ் கொண்டு அசைந்தாடும் இலைகொண்ட மரங்கள்.
இசபாடி இசைபாடி அதன்பாட்டில் இறகுகள் அசைக்கும் பறவைகள்.
மண்ணின்கீழ் கட்டிய வீட்டில் இருந்து வெளியே விளையாடும் சாம்பல் குட்டியை எட்டிப்பார்க்கிறது அம்மா முயல்.
வாலை ஆட்டி விரட்டியபடி வரிசையாக இரண்டு அணில்கள்.
ம்ம்ம்ம் நான் எங்கே நிற்கிறேன். திடீரென்று என்மேல் சாரல் அடிக்கிறது. சல் சல் என்கிறது தண்ணீரின் தவில் இசை.
ஓ நான் அருவிப்பக்கம் குளியல் எடுத்துக்கொண்டிருக்கிறேன் போல் இருக்கிறது.தண்ணீர் இன்னும் கொஞ்சம் அதிகமாக முகத்தில் அடிக்கிறது.
அப்போது ஒரு சத்தம் .ஆம் என் கண்ணான கணவரின் கடும் குரல்தான்.
அம்மா எழும்புங்கோ எழும்புங்கோ அடோரா தண்ணி ஊத்துறாள்.
கொக்கா மக்கா ,பயபுள்ள 4 மணிக்கு எழும்பி பக்கத்தில நைட் டேபிள் ல ஹஸ் வச்சிருந்த ஒன்றை லீட்டர் தண்ணி போத்தலை எடுத்து( போத்தலை விட கொஞ்சம் வளந்துட்டோம் எங்கிற திமிர்தான்]
திறந்து எழும்பி நிண்ட படியே அம்புட்டு தண்ணியையும் நமக்கு ஊத்தி தெப்பலா நனைய வச்சுட்டு கொஞ்சம் கூட நனையாமல் நம்மை பாத்து சிரிச்சாளே என்னத்தை சொல்ல.......அவ்வ்வ்வ்வ்
சரி போனா போகுது நாளைக்கு இதைவிட நல்ல கனவு வராமலா போகுது.







Monday 13 March 2017

pineapple corer




நம் சின்ன சின்ன நாளாந்த வேலைகளை அழகாக்குவதும் சுலபமாக்குவதுமான பொருட்களை தேடித்தேடி வாங்குவதில் எனக்கு ஆர்வம் என்றும் அவை எல்லாமே பயனளிப்பதில்லை என்பதும் அவ்வாறு பயனளிக்கும் பொருட்கள் சில பிடித்துப்போனால்
நான் மற்றவர்களுடன் பகிர்ந்து செல்வதும் என் சார்ந்தவர்களுக்கு தெரிந்ததே.அந்த வகையில் இன்றைய பகிர்வு pineapple corer.
பைனாப்பிள் சாப்பிட விருப்பம் வந்தாலும் யாராச்சும் கிளீனா வெட்டி தந்தால் நல்லாயிருக்கும் என்றிருக்கும்.அத்தோடு நான் வழக்கமாக கத்தியால் வெட்ட தொடங்கினால் எல்லா பக்கமும் வெட்டிக்கழித்து சாப்பிட கொஞ்சூட்டுதான்
வரும்.கை வேற பிசு பிசு ஆகீடும்.
ஆனால் இந்த pineapple corer ஐ உபயோகிக்க பைனாப்பிளின் மேல் பக்கத்தை வெட்டி எடுத்து விட்டு corer ஐ நடுவில் வைத்து கொஞ்சம் அழுத்திக்கொண்டு சுழற்றினால் அழகாக வட்டமாக வெட்டி எடுக்கலாம்.
எடுத்தபின் அன்னாசிக்குள் தண்ணீர் விட்டு சுகர் சிறுது சேர்த்து கரண்டியால் உள்ளே சுற்றி இருக்கும் அன்னாசி தசைகளை கொஞ்சமாக சுரண்டி தண்ணீருடன் கலந்து fresh அன்னாசி யூஸ் எடுத்துக்கொள்ளலாம்.


எல்லாவற்றிற்கும் பின் வெளிப்புற அன்னாசியை உடனே குப்பையில் தூக்கி போடாமல் 2 நாள் கிச்சன் ல் வைத்திருந்தால் கிச்சன் சமையல் மணங்களை விடுத்து கம கம அன்னாசி வாசனையுடன் இருக்கும்.














Sunday 12 March 2017

cabbage rolls


போனவாரம் டாக்டர் அப்பொயிண்ட்மண்ட் க்கு போய் வெயிட் பண்ணும்போது , அடடே டயட் ல இருக்கோமே வெளிய சாப்பிடாமல் வீட்டுக்கே போய் 15 நிமிஷத்தில என்ன சமைக்கலாம் ????
அப்பிடி நினைச்சுக்கொண்டே வழக்கம்போல மகஸீன்ஸ் ஐ எடுத்து புரட்டத்தொடங்கினால் இந்த ரெஸிப்பி கண்ணுல பட்டதும் சில வருஷங்களுக்கு முன்னால 
ஒரு க்றிஸ்மஸ் க்கு செய்து எல்லாருமே நல்லாயிருக்கிறதா சொன்னதும் ஞாபகம் வர வீட்டுக்கு வந்து ப்ரீஸர் ல இருக்கிற மீற் ஐ எடுத்தால் டைம் காணாது என்றதால வரும்போதே மீற் ஐ வாங்கி வந்து 15 நிமிசத்தில இது ரெடி.


நீங்களும் செய்து சாப்பிட இதோ ரெஸிப்பி

cabbage rolls
தேவையானவை


காபேஜ் 6 இதழ்கள்
விரும்பிய மீற் அரைக்கிலோ {ground beef}
வெங்காயம் 2
தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன் { விரும்பும் காரத்திற்கு ஏற்ப அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்துக்கொள்ளவும்}
சீரகம் 1 டீஸ்பூன்
Rosemary சிறிது 
இஞ்சி பேஸ்ட் அரை டீஸ்பூன்
உள்ளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
cheddar cheese துருவல் 2 டேபிள் ஸ்பூன்
பட்டர் அரை டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
டுத் பிக் சில



செய்முறை



1. வெங்காயம் ,மிளகாய் ,ரோஸ்மெரி என்பற்றை சிறிதாக வெட்டவும்

2. மீற் க்குள் வெங்காயம் ,மிளகாய் ,சீரகம் ,ரோஸ்மெரி,இஞ்சி உள்ளி பேஸ்ட் ,தனிமிளகாய்த்தூள் ,சீஸ் , உப்பு எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் பண்ணவும்

3.அடுப்பில் பாத்திரத்தை சூடுபண்ணி எண்ணெய் தண்ணி எதுவும் சேர்க்காமல் மிதமான தீயில் மீற் கலவையை வேக வைத்து எடுக்கவும்

4.காபேஜ் ஐ இதழ்களாக எடுத்து இலையின் நடு தண்டை நீக்கிவிட்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்

5.ஸ்டீம் செய்த காபேஜ் இலையை எடுத்து ரெடியாக வைத்திருக்கும் மீற் ஐ அதற்குள் வைத்து சுருட்டி டுத் பிக் ஆல் குத்தவும்

6 .மறுபடி அடுப்பில் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் பட்டரை உருக்கி அதில் காபேஜ் ரோல்ஸ் ஐ ஒரு 15 செக்கன் வைத்து எடுக்கவும்


ம்ம்ம்ம் ஜம்மி






Wednesday 8 March 2017

மண்னைத்தாண்டி வருவாயா??????


குளிர் நாடுகளில் வசிக்கும்  குட்டி விவசாயிகளுக்கு......


இதோ விண்டர் சீஸன் முடிவையும் ஸ்பிரிங் ஆரம்பத்தையும் அண்மித்துக்கொண்டு இருக்கிறோம்.
இது உங்களுக்கு பயிர்களை வீட்டுக்குள் முளையிட வைக்கும் தகுந்த காலம் என்பதை நினைவூட்டுகிறேன்.


மறந்தாலும் செடிகளை வாங்கி வைக்கலாம்தான் ஆனாலும் .விதைகளில் இருந்து  கொஞ்ச மண்ணை தன் மண்டைமேல் சுமந்து கொண்டு மண்ணில் இருந்து நம்மை எட்டிப்பார்க்கும் பச்சை நிற
பேபி செடியை ரசிப்பது ஒரு கலை.
குனிந்து ,நிமிர்ந்து ,சரிந்து,வளைந்து ஒரு 2 வாரம் வரைக்கும் அந்த செடிகள் கொடுக்கும் அழகே அழகு.
இவை நான் போன வாரம் விதைத்தவை.


இந்த தடவை நான் பட்டர் பீன்ஸ்,வைன் தக்காளி,குண்டு மிளகாய் , இவளவும்தான் முளைக்க வைத்திருக்கிறேன். என்னிடம் அதிக இடம் இல்லை.மேலதிகமாக வழக்கம்போல் ஸ்ராபெரி மட்டும் வாங்கி நடுவேன்.


குண்டு மிளகாய் சில வருசத்துக்கு முன் விதைகள் வாங்கினேன்.
அதன்பின் என் செடிகளில் இருந்தே விதைகள் சேமித்து செடி வளர்க்கிறேன்.


இது என் சார்ந்தவர்களுக்கான ஒரு நினைவூட்டல் .லெட்ஸ் ஸ்டார்ட் தி மியூஸிக் மக்களே

Tuesday 7 March 2017

க்ரீமி காரட் டொமாட்டோ சூப்


தேவையானவை

வெங்காயம் 2
கரட் 50g
தக்காளி 150 g
பட்டர் 1 tsp
க்ரீம் சீஸ் {cream cheese} 2 tbsp
பச்சை மிளகாய் {காரம் விரும்பினால்} 1
பால் அல்லது தண்ணீர் 1cup
உப்பு தேவையான அளவு
மிளகு




செய்முறை
1 சட்டியை சூடுபண்ணி பட்டரில் வெங்காயம் காரட்,தக்காளி ,பச்சை மிளகாய் என்பவற்றை உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.
2.காய்கறி வதங்கியதும் 1 கப் தண்ணீர் அல்லது 1 கப் பால் சேர்த்து மேலும் 5 நிமிடம் வேக விடவும்
3.ஸ்டவ் ஐ அணைத்துவிட்டு கிரீம் சீஸ் ஐ சேர்க்கவும்
6. எல்லாவற்றையும் ப்ளெண்டரால் நன்கு அரைக்கவும்
மிளகு தூவி சாப்பிடவும்




Saturday 4 March 2017

ஈஸி ஊறுகாய்


தேவையானவை
லெமன் 2 கிலோ
உப்பு 5 டேபிள் ஸ்பூன்
மஞ்சல் 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 100கிராம்
நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்


ஆயத்தம்
லெமன்ஸ் கழுவி வடிய வைக்கவும்
போத்தல் ஒன்று கழுவி ஈரமில்லாமல் துடைத்து வைக்கவும்


செய்முறை
1.ஒருகிலோ லெமன்ஸ் ஐ எடுத்து 4 துண்டுகளாக வெட்டி போத்தலுக்குள் போடவும்
2.மீதி ஒரு கிலோ லெமன்ஸ் ஐ பிழிந்து சாற்றை எடுத்து வெட்டிய லெமன்ஸ் அதற்குள் மூழ்குமாறு சேர்க்கவும்.


3. இதற்குள் உப்பு மஞ்சல் இரண்டையும் சேர்க்கவும்
4. வெயில் அல்லது லைட் வெளிச்சம் படும் இடத்தில் வைத்து தினமும் குலுக்கி விடவும்.
5. 1 வாரத்தின் பின் கலவை நிறம் மாறி தண்ணீர் வற்றி வந்ததும் காய்ந்த மிளகாய் ,நச்சீரகம் இரண்டையும் மெல்லிய தீயில் வறுத்து
பொடித்து சேர்க்கவும்.
சாப்பிட எடுக்கும்போது ஈரமில்லாத கரண்டியை உபயோகிக்கவும்.



எப்போ இந்த costco க்கு போனாலும் இதோ இந்த அணில் கூடுகள் இருக்கும் வியூ தான் நம்முடைய பார்க்கிங் ஆக இருக்கும்.
சில நேரம் அதுக்காவே சில ரவுண்ட்ஸ் அடிப்போம். எங்களுக்கு கோப்பி அவர்களுக்கு பாப்கோன் எல்லாம் கொண்டுபோய் நேரம் செலவிடுவோம்.
நான் தனியே அவசரமாக போனால் கூட அங்கேயே பார்க் பண்ணி 1 நிமிடமாவது ரசித்துவிட்டுத்தான் கிளம்புவேன்.

அவ்வளவு பிஸியாகவும் சந்தோஷமாவும் இருப்பார்கள் இந்த அணில் குடும்பங்கள்
குளிர் காலத்திலும் அதிக ஸ்னோ நாட்களிலும் போனால் ஏதோ ஒரு வெறுமை .
கோப்பியை ருசிக்கவும் முடிவதில்லை
அவர்களின் வெறும் கூடுகளை
ரசிக்கவும் முடிவதில்லை

ஆனால் வாழத்தெரிந்தவர்கள்.சேமித்ததை சாப்பிட்டோ இடத்தை மாற்றியோ இந்தக்காலநிலையை கடந்து அடுத்த மாதம் ஓடோடி வந்துவிடுவார்கள் என்ற நின்மதியிலும் எதிர்பார்ப்புடன் நாமும் அவர்களும் 
வாழும் போராட்டத்தில் நாட்களை நகர்த்தியபடி......
















ஆயா சுட்ட வடை

ஒரு ஊரில ஒரு ஆயா ஒரு பெரிய ஆலமரத்து நிழல்ல உக்காந்து 33 வருஷமா வடையா சுட்டுகிட்டு இருந்திச்சாம்.
திடீர்னு அடிச்ச மர்ம புயல்ல ஆலமரம் அடியோட சாய்ஞ்சிரிச்சாம்.
அப்போ ஆலமர நிழல் க்கு பதில் அரக்கர்கள் கூட்டம் ஊசிக்காத்தும் நுழையாமல் மொய்ச்சுகிட்டுதாம்.
அப்போ அங்குட்டு இடையிடையே ஒத்த வடைய ருசிபாத்து திரிஞ்ச நரி ஓண்ணு இனிமேல் வடை பிஸினஸ் நாந்தான் பண்ணுவேன், ஆலமரத்து ஆன்மா சொல்லிகிச்சு நு அடம்புடிச்சுதாம்.
ஆயா க்கு வந்த கோவத்தில வடை சட்டிகளை தூக்கிட்டுபோய் ஏசி ரூம் ல வச்சு பூட்டிகிச்சுதாம்
இதுல கடையும் இல்லாமல் வடையும் இல்லாமல் இடிக்கு மேல இடி விழுந்த வாடிக்கையாளர்களில
ஆயா வடைக்கு உமிழ்நீர் சுரந்தபடி குடையை எடுத்துக்கிட்டு சிலர் ஓட
இப்போதைக்கு கடையை காப்பாற்றியாகவேண்டுமே என்று நரியை தேடி பலர் ஓட...............
கச்சிதமாக கவ்விக்கொண்டாய் போ
இதுல படிப்பினை என்னன்னா சுவர் இருந்தாதான் சித்திரம் வரையலாம். கடை முக்கியம்லே மக்கா
சுரேஜினி பாலகுமாரன்

heart tree


தேவையானவை 
சிறிய மர கிளை 1
சிவப்பு அட்டை 1
பிங்க் அட்டை 1
கம்பிகள்
கத்தரிக்கோல்
பென்சில்








1.தேவையில்லாத ஒரு பழைய அட்டையில் சிறிது ,பெரிதாக இதயம் வரைந்து அதை வெட்டி எடுக்கவும்.
2.இப்போது சிவப்பு ,பிங் அட்டைகளின்மேல் முதலில் வெட்டிய இதயத்தை அளவாக வைத்து வரையவும்
3.படத்தில் காட்டியிருப்பது போல் சிறிய துளையிடவும் {சேஃப்டி பின் போதும்}
4.கம்பியின் இரு முனைகளிலும் முனைக்கு ஒன்றாக இதயத்தை கோர்த்து கம்பியை மடித்து விடவும் .


5.ஆயத்தமாக வைத்திருக்கும் மரக்கிளையில் கம்பியின் நடுப்பகுதியை வைத்து ஒரு சுற்று சுற்றி விடவும்.
குழந்தைகளூடன் சேர்ந்து இவ்வாறான அழகு வேலைகள் செய்யும் போது குழந்தைகள் பொறுமை,மூளை டெவலப்மெண்ட்,
ஆர்வம்,நேர்த்தி,டீம் வேர்க் என்பவற்றை சுலபமாக கற்றுக்கொள்வார்கள்.
இது நான் மகளுடன் சேர்ந்தே செய்தேன்.
மிகவும் சுலபமாக செய்யக்கூடியது.




my valentine's day 2017



இந்த காதலர் தினத்தை எப்போதுமே நாங்கள் ஆண் பெண் காதலுக்கு உரியதாக பார்த்ததில்லை.
திருமணத்திற்கு முன்னரும் தங்கைகளுடன் கிஃப்ட் பரிமாறிக்கொள்வோம்.
பிள்ளைகளுக்கு ஸ்கூல் ல் எல்லா விஷேட தினங்களையும் கொண்டாட பழக்கிக்கொடுக்கிறார்கள்.
மதர்ஸ் டே,ஃபாதர்ஸ் டே மட்டுமன்றி காதலர் தினம் ,ஹலோவீன் ,க்றிஸ்மஸ் என்று எதையும் விட்டு வைப்பதில்லை.
அவர்களின் ஆற்றல்களை விரிவு படுத்தவும் சமூகத்தோடும் குடும்பத்தோடும் பிணைப்பை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்வார்கள்.
இப்படி இருக்கும்போது நாமும் அது அதற்குரிய சிறப்பை கொடுத்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாடும்போது மிகவும் மன மகிழ்ச்சியும்
சமூக வழக்கங்களில் நாட்டமும் ,நம்மோடு அதிக நெருக்கமும் பிள்ளைகளிடத்தில் உருவாகும்.
வழக்கம் போல நாங்களும் கிவ்ட் ,பொக்கேவ்,ஹக் எல்லாம் பரிமாறிக்கொண்டோம் ,அதிலும் இங்கு கோணல் மாணலாக இருக்கும் பீட்ஸ் மாலைகள் அப்பா பிள்ளைகளுக்கும் எனக்கும் தன் கையாலேயே செய்து தந்தவை.
கோணலா இருந்தாலும் நம்மோடதாக்கும் .
சின்ன சின்ன சந்தோஷங்களை தின்று விடும் 
பெரும் பிஸி யை வென்றுவிடுவதில் இருக்கிறது
நினைவுகளை மென்று மீட்கும் அழகான சந்தோஷங்கள்.
அனைவருக்கும் அன்பு கனிந்த காதலர் தின வாழ்த்துக்கள்.

















சங்கோஜம்




அழுக்கும் பகையும் 
பிறன் மீது ஆக்ரோஷமும்
நிரம்பி இருக்கையில்
நின் வெளிப்பாடுகள் மொத்தமும் 
 அதை வாந்தி எடுக்கையில்...........
நிற்க.........
இறந்தபின் உடல் நாற்றம் 
உயிராய் இருப்பவரும் ஏற்றுக்கொளாத போது
நின்னுள் அழுகிப்போயிருக்கும் 
கறைகளின் வாந்தியை
கையேந்தி ஏற்போம் என்று
கனவு காண்கின்றாயோ?????
நழுவுதலே முறையென்று உனை 
புறந்தள்ளி புறக்கணித்துன் நினைவை
புதைத்த இடத்தில் பூமரங்கள்
பூக்கவைத்து தானும் மலர்ந்து நிதம்
வாழ்வாங்கு வாழ்வான்
வாழ்வியலின் அழகை அளந்தவன்.
சுரேஜினி பாலகுமாரன்.

வெள்ளை அழகு


கொள்ளை அழகா இல்லை
கொல்லும் அழகா எனை
மெல்ல வருடி காதல் கொள்ளும்
செல்ல அழகா
சொல்லில் இயலாச் சுடு மூச்சில் 
சொக்கி தகிக்கும் கள்ள அழகா
தொக்கிய சுமை 
தொடர் கலைத்து - உயிர் 
தொட்டுப்பேசும் கலை அழகா
உன் சிலிர்ப்பில் சுகித்து புது 
உணர்வு செழிக்கையில் 
என் இடர்களை இவ்விடமே 
 தொலைத்து இங்கனம்
தொடர்கிறேன் ஒவ்வொரு தடவையும்
சுரேஜினி பாலகுமாரன்









youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...