Thursday 11 May 2017

வெங்காயம்



மிக ஈஸியாக எந்த சப்போர்ட் ம் இல்லாமலே முளைக்க கூடியது இந்த வெங்காயம் .அப்படி முளைவிடுவதில் சிலதை எடுத்து இப்படி நட்டு வைத்தால் உணவை அலங்கரிக்கவும்
வாசனைக்கு சேர்க்கவும் ,முட்டை பொரிக்கவும் என்று பலவற்றிற்கு கை கொடுக்கும்.அத்தோடு வெட்ட வெட்டவும் வளரும்.


இஞ்சி உள்ளி பேஸ்ட்



அவசரத்தில் சமைக்கும் போது இஞ்சி உள்ளி அரைத்துக்கொண்டிருப்பது ஒரு வேலையாக இருக்கும்.தவிர்க்கவும் இயலாது.மணமும் சட்டென்று விட்டுப்போகாது.
சோ இப்படி மாதத்திற்கு ஒரு தடவை இரண்டையும் சேர்த்தோ அல்லது தனித்தனியாகவோ அரைத்து ஐஸ் கியூப் மோல்ட் ல் வைத்து பிரீஸர் ல் வைத்தால் வேலை சுலபம்.
ப்ரீஸ்ரில் வைப்பதால் சுவையிலும் எந்த மாற்றமும் இருக்காது.


மிளகாய் வெட்ட



மிளகாய் சிலர் கட்டிங்க் போர்ட் ல் வைத்து வெட்டுவதை பாத்திருக்கிறேன்.நான் ஒருநாளும் அப்படி வெட்டியதில்லை.
மிளகாய் காம்பில் பிடித்துக்கொண்டு கிச்சன் கத்தரிக்கோலால் வெட்டிவிடுவேன்.முக்கியமாக குழந்தைகளுடன் டீல் பண்ணுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.
கத்தியால் வெட்டுவதை விட மிகவும் சுலபம்.


சாக்ஸ்{ socks}



மோர்னிங் பிஸி யில் ரெம்பவே கடுப்பேத்தக்கூடியது இந்த சாக்ஸ். அதிலும் வீட்டில் எல்லோருமே பிஸியானவர்களாகவும் 2 ற்கும் மேற்பட்டவர்களாகவும் இருப்பின் சொல்லவே வேண்டாம்.
வீடு ரணகளமாவதை யாராலும் தடுக்க முடியாது.
நம் வீட்ட்டில் திருமணமான புதிதில் ரெண்டு பேருமே போர் .சாக்ஸ் க்கு ஜோடி சேர்க்க கல்யாண ப்ரோக்கர் வைக்க வேணும்போல எங்கிற ரேஞ் க்கு இருந்தது.
இதனால் டைம் கில் பண்ணுபடுவதை தடுக்க ஆழமா ஜோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தேன்.
ம்ம்ம்ம்ம் சாக்ஸ் ஐ யூஸ் பண்ணி முடிய வாஷிங்க் மெஷின் ல போடுறதுக்கு பதிலா குப்பையில் போட்டேன்.
பதிலுக்கு ஆளுக்கு 30 ஜோடி ஒரே நிறம் .வெள்ளை.சமர் விண்டர் என 15 ஜோடி அரை சாக்ஸ் 15 ஜோடி நீள சாக்ஸ்.
இந்த 30 ஜோடியை தாண்டி ஒரு புது ஜோடி வாங்கினாலும் அதே சாக்ஸ்தான் வாங்க வேண்டும் என்பதும் .ஏற்கனவே பழசான ஒன்றை குப்பையில் போட வேண்டும் என்பதும் என் சட்டம்.
யெஸ்ஸ்ஸ்ஸ் அதிகமான சாக்ஸ் வைத்திருந்தால் கவனமில்லாமல் சிதறிப்போய் தேவைக்கு மாட்டாமல் கடுப்பாகும்.
அடுக்கவும் தேவையில்லை .ஜோடி மாறினாலும் டென்ஷன் இல்லை.திருடினாலும் கண்டு பிடிக்க முடியாது.
அப்பப்பா திருமணத்திற்கு முன்னம் தங்காவுகளிட்ட திருடுறதும் மாட்டுறதும் அது வேற.
கால்ல திருட்டு சாக்ஸ் தெரியுறமாதிரி இருக்கும்போதே நான் எடுக்கவே இல்ல என்பேன்.
இப்போ விஷயத்திற்கு வருவோம்
சிரமங்களை தவிர்க்க
1.மறந்தும் கூட வித்தியாசம் வித்தியாசமாகவோ கலர் கலராகவோ, சின்னன் பெரிசாகவோ,ப்ராண்ட் மாறியோ சாக்ஸ் வாங்க கூடாது .
2.தோய்த்து dryer machine இல் இருந்து எடுத்ததும் இவ்வாறான ஓப்பன் பாக்ஸ் ல் வெளியே தெரியாத அளவு நிரப்பி வைக்க வேண்டும்.
முதல் நாள் சுருட்டி மடித்து வைத்து மறுநாள் அதை கலைத்து மாட்டுவது வீண்வேலை
3.வீட்டில் 2 பேருக்கு ஒரே அளவு சாக்ஸ் ஆக இருந்தால் சேர்த்தே வைக்கலாம்.பிரச்சனை இல்லை தோய்த்தபின் தானே அணிகிறோம்.
அவ்வளவுதான்

முகப்பருவும் நானும்



முகப்பருக்கள் பல வகை. அதற்கு நெட் ல் தேடினால் ஏகப்பட்ட அட்வைஸ், home remedies,எல்லாம் கிடைக்கும். ஆனால் ஒவ்வொருத்தர் ஸ்கின் தன்மையை பொறுத்தே ஒவொன்றின் பலன் இருக்கும்
நான் சொல்லப்போவது அக்னே பற்றி

இது வருவதற்கான முக்கிய காரணம் ஹார்மோன் மாற்றங்கள்.ஹார்மோன் ஏற்றத்தாழ்வு 
இது கறுப்பு ,வெள்ளை ,சிவப்பு என மூன்றில் ஏதாவது ஒரு நிறத்தில் வரக்கூடும் . இந்த பருக்கள் கடினமானதாக இருக்கும்.
பிறந்த குழந்தைக்கு கூட வரலாம் இதை பேபி அக்னே என்பார்கள் .தன்னாலேயே சில மாதங்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.சில டாக்டர்கள் க்ரீம் எழுதுவார்கள்.பல டாக்டர்ஸ் 
பவுடர் போட வேண்டாம் மற்றும்படி எதுவும் தேவையில்லை என்பார்கள்.

அடுத்து டீனேஜ் க்கு வரும் இது காலப்போக்கில் இல்லாமல் போனாலும் எல்லோருக்கும் தடயங்கள் முழுதாக இல்லாமல் போகும் என்று சொல்ல முடியாது.

மூன்றாவது மேற்சொன்ன இரண்டு நிலைகளையும் கடந்த பெண்களுக்கு ஹார்மோன் இம்பலன்ஸ் காரணமாக வரும்.இதன் அடையாளம் அவ்வளவு சுலபமாக விட்டுப்போகாது.

எனக்கு ஒரு ஹார்மோன் மாத்திரை காரணமாக ஒரு கட்டத்தில் முகம் கழுத்து ,முக்கியமாக நெற்றி என்று வெறித்தனமாக அள்ளிப்போட்டதுமில்லாமல் அடையாளம் ம் போகாமாட்டேன் என்று ஒட்டிக்கொண்டு விட்டது.

எங்கே போனாலும் என்னை முன்னபின்ன தெரிந்த ஐசுவர்யா ராய்கள் இதைப்பற்றி விசாரித்து பரிதாபபடுவார்கள் பாவம் .

எனக்கே ஒரு கட்டத்தில் எப்பிடி இருந்த நான் இப்டி ஆகீட்டேன் ரேஞ் க்கு பீல் ஆக தொடங்கி விட்டது.

சரி இந்த dermatologist எல்லாம் எதுக்கு இருக்கிறார்கள் ?????
இங்கே நேரடியாக dermatologist இடம் போக முடியாது பமிலி டாக்டர் சிபாரிசு செய்ய வேண்டும்.

சரி போவோம் போவோம் என சொல்லிக்கொண்டே நாட்கள் கடந்து கொண்டிருந்தது .
ஹஸ் ஒருநாள் பிடிவாதமாக பமிலி டாக்டரிடம் கூட்டிச்சென்றார் .அவரும் ஒரு dermatologist இடம் அனுப்பினார்.

இந்த அக்னே மருத்துவம் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் செய்ய முடியாது.ப்ரக்னண்ட் வுமன் ஆகவோ,பீடிங் மதர் ஆகவோ ,அலேர்ஜிக் உள்ளவர்களாகவோ ,பெரிய நோய்களிற்கு மருந்துகள்
எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்கோ நம்மால் எதுவும் பரிந்துரைக்க முடியாது என்று ,கடையில் ப்ரஸ்கிரிப்ஷன் இல்லாமலே எல்லோரும் வாங்க கூடிய cetaphil cream ஐ வாங்கி போட சொல்லி அனுப்பி விட்டார்.

ஆனால் மருத்துவ கிறீம் அல்லாத எதுவும் அக்னே க்கு பலன் அளிக்காது ப்ரெக்னன்சி எல்லாம் முடித்து வரும்படி அனுப்பினார்.

இப்படியே இந்த டொட் டொட் மூஞ்சியுடனேயே நானும் வாழ்ந்து வந்தேன்.

காரணம் dermatologist அப்பொயிண்ட்மண்ட் 3 மாசம் வெயிட் பண்ண வைத்துத்தான் தருவார்கள் .1 வருடம் அவர்களிடம் போகவில்லை என்றால் மீண்டும் பமிலி டாக்டர் சிபாரிசு செய்ய வேண்டும்.
அப்பொயிண்ட்மண்ட் கான்சல் பண்ணினால் மேலும் ஒரு மாசம் வெயிட்பண்ண வேண்டும்.

எனக்கோ முன்னைவிட இப்போது அழகில் அக்கறை வந்துவிட்டது.காரணம் முதல் முதலாக நீனாவை ஸ்கூல் ல் சேர்க்கப்போகிறேன்.நீனாவின் அம்மாவாக கொஞ்சம் அழகாக தெரிய வேண்டும் என ஆசை வந்துவிட்டது.

அதனால் 

எல்லா தடைகளையும் உடைத்து அடோரா வையும் நீனாவையும் அப்பா பொறுப்பில் விட்டு விட்டு டாக்டரிடம் போனேன். பருக்களை எல்லாம் அழகாக செக் பண்ணி டாக்டர் முதல் 3 மாசத்திற்கு ஒரு கிறீம் தருகிறேன்.அதற்கு
குறையாவிட்டால் அடுத்த 3 மாசத்திற்கு மாத்திரை தருகிறேன் என்று biacna gel என்பதை எழுதி கொடுத்தார்.

ஒழுங்காக போட்டுக்கொண்டு இருந்தேன் ,பிறகு பிரான்ஸ் போன இடத்தில் அக்கா வீட்டில் மறந்து வைத்து வந்துவிட்டேன்.
அதுவரை க்ரீம் ஐ ஒழுங்காக போட்டேனே தவிர முகத்தை ஒப்பிட்டு பார்க்கவோ கவனிப்பதிலோ அலட்சியமாக இருந்து விட்டேன்.
ஒருநாள் ஆசுவாசமாக முகத்தை ஆராய்ந்த பின் எனக்கு அதிசயம் என்னவென்றால் என் முகத்தில் இருந்த நிறைய அடையாளங்களை காணோம்.

மறுபடியும் டாக்டரிடம் ஓடிப்போய் அதே க்ரீம் வாங்கி போட்டுக்கொண்டு இருக்கிறேன்.அடிக்கடி கண்ணாடி பார்ப்பது ஒரு தொழிலாக மாறி இருக்கிறது.

சோ இதுல இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் யார் யாரோ சொல்லும் க்ரீம்களை விட டாக்டரிடம் போய் அவர் உங்கள் ஸ்கின் டைப் ற்கு தரும் பிரத்தியேக க்றீம் ஐ வாங்கி
உபயோகித்து பலன் பெறுங்கள் என்பதைத்தான் இவளவு நேரமாக சுத்தி சுத்தி நீளமாக சொன்னேன்.

இது உருளை சிப்ஸ் இல்ல உருளை டிப்ஸ்சு



இந்த உருளைக்கிழங்கு ஸ்கின் கேர் க்கு எவளவு உதவும் எங்கிறது நிறைய தடவை ஸ்டேட்டஸ் ஆ பதிவு செய்திருந்தாலும் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

முகம் ப்ரஷ்ஷா இருக்க உருளைக்கிழங்கை வட்டமா வெட்டி முகத்தில நல்லா மசாஜ் செய்து 15 நிமிஷத்தில கழுவினால் முகம் ப்ரஷ் ஆ இருக்கும்.
உருளை அவிச்ச தண்ணியை வீணாக்காமல் கொஞ்சம் வெது வெதுப்பு இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் ஊத்தி அதற்குள் காலை 15 நிமிஷம் வைத்திருந்தால் பாதங்களில் உள்ள அழுக்குகள் போய் கால் அழகாக இருக்கும்.

நான் இரவு தூங்காவிட்டால் முகம் டல் ஆக இருப்பதை போக்க ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கி சின்ன சின்னதா வெட்டி 2 டேபிள் ஸ்பூன் பால் ,அல்லது தயிர்,அல்லது ரோஸ் வாட்டர்
இப்பிடி கிடைக்கிற எதையாச்சும் சேர்த்து கிர்ர்ர்ர்ர்ர் நு மிக்ஸீல அரைச்சு முகத்திற்கு பூசி 15 நிமிஷம் விட்டு கழுவுவேன்.

என்னமோ ரெம்ப காலமா அதிகமா விரும்பி ஸ்கின் க்கு யூஸ் பண்ணுற கிச்சன் பொருள் இந்த உருளைக்கிழங்குதான்.

உருளையின் தோலைக்கூட நல்லா முகத்தில வச்சு சுத்தி சுத்தி தேய்ச்சுட்டுத்தான் குப்பைல போடுவேன்.

என்னோட ஸ்கின் க்கு ஹெல்ப் பண்ணுது நீங்களும் செய்து பாருங்கோ .

வசந்தம்


















வசந்த காலத்தின் 
வாயில் திறக்கையில் 
களிப்புடன் நுழைந்து 
கவலைகள் மறந்து 
சிட்டுக்களாய் பறந்து 
ஞாலம் தரும் சால அழகில் 
நெகிழ்ந்து 
கண்டதெல்லாம் தின்று பல
கலோரிகள் வென்று
குண்டும் மண்டுமாகாமல் 
குதித்து விளையாடுங்கள் 
வரையறுக்கப்பட்ட வாழ்வின்
வழிப்போக்கர்கள் நாங்கள்
வழித்தடங்கள் பறிபோனால் என்ன 
நினைவுகளை பற்றிச்செல்வோம்
சுரேஜினி பாலகுமாரான்

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...