Wednesday 9 May 2012

ivf மருத்துவம் எவ்வாறு செய்யப்படுகிறது



மாதம் ஒரு தடவை பெண்ணின் கருமுட்டை முதிர்ந்து கருக்குழாய் வழியாக பயணம் செய்யும் அதே வேளையில் ஆண் விந்தணுவும் அந்த இடத்துக்கு சென்றால் சதாரணமாகவே கருத்தரிப்பு ஏற்படும் என்பது நாம் அறிந்ததே.இது இயற்கையான நிகழ்வு.

 இதையே செயற்கை முறையில் இரண்டையும் இணைய வைத்து கருவை ஏற்றுவதே ivf . இதில் பெண்ணுக்கும் ஆணுக்கும் உரிய பரிசோதனை செய்து ivf க்கு தகுதியானவர்களா என்று உறுதிப்படுத்தப்படும்.இல்லையெனில் தகுதியானவர்களாக மாற்ற லாப்ரஸ்கொப்பி.டி அண்ட் சி, ஊசிகள் மாத்திரைகள் போன்ற சில சிகிச்சைகள் அழித்து
 அடுத்த கட்டமாக பெண்ணுக்கு மாதவிடாயை கட்டுக்குள் கொண்டு வர மாத்திரைகள் கொடுக்கப்படும்.சிலருக்கு ஊசியும் மாத்திரையும். மாத்திரைகளின் பின் குறிப்பிட்ட சில நாட்களில் மாதவிடாய் ஆனதும் போலிக்குள் மொனிட்டரிங் அல்ராசவுண்ட் follicle monitoring ultrasound மூலம் கருமுட்டையை அளப்பதும் எண்ணுவதும் கர்ப்பப்பை சுவரின் தடிப்பை அளப்பதுமாக அந்த மாதம் அடிக்கடி கணிப்பு நடத்தப்படும்.

 அதேவேளை பல கருமுட்டைகள் உருவாகவும் சரியான முறையில் வளர்ச்சி அடையவும் மாத்திரை ஊசி என்பன கொடுக்கப்படும்

. அதன் பின் பெண்ணுக்கு கருமுட்டைகள் தேவையான அளவு முதிர்கிறது என்று ஸ்கானில் தெரிந்ததும் சரியான அளவில் முதிர்ந்து வெளியேற hcg ஊசி ஏற்றப்படும்.

 ஊசி ஏற்றப்பட்டு 32 இலிருந்து 36 மணித்தியாலங்களுக்குள் பெண்ணை மயக்கத்துக்குள்ளாக்கி முதிர்ந்த கருமுட்டைகளை அல்ரா சவுண்ட் ல் பார்த்துக்கொண்டு ஊசிக்குழாயை உட்செலுத்தி ஒவ்வொன்றாக சேகரிக்கப்படும்.

 இதேபோல் ஆண் விந்தணுக்களை சேகரித்து ஒப்படைக்க வேண்டும்.

சில குறைபாடுகளை கருத்தில் கொண்டு மருத்துவ முறையில் குழாய்மூலம் உறிஞ்சி எடுப்பதும் உண்டு.பின்னர் விந்து சுத்தப்படுத்தி தரப்படுத்தப்படும்.

 இவ்வாறு சேகரிக்கப்பட்ட கருமுட்டையையும் விந்தணுக்களையும் ஒன்றாக கலந்து வைக்கப்படும்
.இந்த வேளையில் தரமான விந்தணு உடலுக்குள் நிகழ்வதைப்போலவே இங்கும் கருமுட்டையின் கருக்கூட்டை உடைத்துக்கொண்டு உட் சென்றால் ,கருமுட்டையும் விந்தும் சேர்ந்து கருவாகிவிடும்

.முட்டை விந்து என்பவற்றின் தகுதிக்கேற்ப 3 அல்லது 5 அல்லது 10 என்று கருக்கள் உருவாகும்
.சில அவ்வாறு கருவாக சேர்ந்த பின்பு கூட பழுதடைந்து விடும்,3 இலிருந்து 5 நாட்கள் வளர்ச்சியை அவதானித்து அதன்பின் இவற்றில் நல்ல கருக்களை தெரிவு செய்து 2 அல்லது 3 கருக்களை கருப்பைக்குள் செலுத்தப்படும்,மீதி கருக்கள் இருந்தால் பதப்படுத்தி வைத்து மீண்டும் அல்லது அடுத்த குழந்தைக்கு உபயோகிக்கலாம்.

கருவை உட்செலுத்தும் போது மயக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.பெண் விரும்பினால் மயக்க நிலையில் கருவேற்றம்   செய்து கொள்ளும்படி கேட்டால் மருத்துவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்,

 கருவேற்றம் செய்து 15 நாட்களின் பின் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

Monday 7 May 2012

IVF-Assisted Reproductive Techniques or Test Tube Baby -Principles & Pro...



தாய்மை

விந்து வடிவம்

இயல்பான ஆரோக்கியமான விந்தின் வடிவம் இதுவே

.வித்தியாசமான தோற்றங்களில் வாலும் பெருத்த தோற்றத்துடன் தலையும் மாறுபட்ட உருவங்களையும் கொண்ட விந்துக்கள் குறைபாடுகள் கொண்டவை .
வடிவத்தை நம் கண்களால் கண்டுகொள்ள முடியாது.மைக்ரோஸ்கோப் மூலமே கண்டு கொள்ளலாம்.

வீட்டை மாற்றினால் குழந்தை கிடைக்குமா?


குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வுகாண முதலில்  முன்னோர்கள் பெரியோர்கள் வழங்கும் ஆலோசனை வீட்டை மாற்று.
இருக்கும் வீட்டை விட்டு இன்னொரு வீட்டில் வாழ்ந்துபார் கண்டிப்பாக குழந்தை கிடைக்கும் என்பார்கள்.
நமது முன்னோர்க எதையும் காரணமின்றி சொல்லி வைத்ததில்லை என்ற நிரூபிக்கப்பட்ட பல ஆதாரங்களின் அடிப்படையில் தற்போதைய விஞ்ஞானமும் மருத்துவமும் இதற்கு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஒரே மாதிரியான வாழ்க்கை ஒரே மாதிரியான சூழல் ஒரே மாதிரியான நடவடிக்கைகள்  என்பன நம்மை அறியாமலே நமக்குள் ஒரு மன இறுக்கத்தையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது என்பது உண்மை.

மன அழுத்தங்களால் தாம்பத்தியம் தடைப்படவும் தாம்பத்தியம் தடைப்படுவதால் மன அழுத்தங்கள் தோன்றவும் கூடும்.
அதாபோல் மூளக்கும் அதாவது சிந்தனைக்கும் ஆண் விறைப்புத்தன்மைக்கும் உள்ள தொடர்பால் சில பிரச்சனைகள் வரலாம்.
மூளையால் குறிப்பாக சிந்தனைகளால் அனுப்பப்படும் ஹார்மோன்களால் பெண்ணின் கருமுட்டை வளர்ச்சி சிதைவடையவும் வாய்ப்புண்டு.
அதனால்தான் ஏற்கனவே வாழும் சூழலை மாற்றி அமைப்பதால் பிரச்சனைகள் சீராகி குழந்தைப்பாக்கியம் ஏற்படும் என்பது விஞ்ஞானமும் மருத்துவமும் கூறும் கருத்து.

ஆனால் வீட்டை மாற்றித்தான் இந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கில்லை.
பிடித்த ரம்மியமான இடங்களுக்கு தம்பதியர்  சென்று சில நாட்கள்  தங்கி வித்தியாசமான அனுபவங்கள் காட்சிகள் என்பவற்றை மனதில் பேச்சுக்களில் நினைவுகளில் பதிவு செய்து கொள்வதன் மூலம் இந்த ஒரே சூழ்நிலையால் ஏற்படும் மன இறுக்கத்தை களையலாம்.

அதவிட முக்கியமாக  உடல் ரீதியாக உள்ள பிரச்சனைகளுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதே குழந்தையின்மைக்கு நல்ல தீர்வாக அமையும்

ஆகவே வீட்டை மாற்றத்தேவையில்லை.
மனதிலுள்ள சுமைகளை கோவங்களை தேவையற்ற கெட்ட எண்ணங்களை பேச்சுக்களை களையவும் நல்ல நினைவுகளை மனங்களில் புதுப்பிக்கவும் சுற்றுலா .நல்ல சிந்ததனைகளை உருவாக்குவது,பிறருக்கு தீங்கும் செலவும் விளைவிக்காத வகையில் எண்ண ஓட்டங்களை சீர்செய்வது என்பன மகப்பேறு அடைவதற்கு மட்டுமல்ல நல்ல வாழ்வுக்கு நிம்மதியான வாழ்வுக்கும் இட்டுச்செல்லும் சிறந்த கருவிகள்

Sunday 6 May 2012

வயது அடிப்படையிலான ஐ வி எவ் வெற்றி வீதம்

• 32 வீதம் வயது 35க்குள்
• 27 வீதம் வயது 35 இலிருந்து 37க்குள்
• 19 வீதம் வயது 38 இலிருந்து 39க்குள்
• 13 வீதம் வயது 40 இலிருந்து 42க்குள்
• 5 வீதம் வயது 43 இலிருந்து 44க்குள்
• 2வீதம் வயது 45 க்கு மேல்
இது எல்லோருக்கும் பொதுவானது இல்லை.ஆண் பெண் இருபாலருக்கும் உள்ள பிரச்சனைகள் ஒவ்வொன்றும் வெற்றியளிக்கும் வீதத்தை வீழ்ச்சி அடையச்செய்யும்.

உடல் எடையும் கருத்தரிப்பும்


கருத்தரிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும் இன்னுமொரு காரணி உடற்பருமன்.
உடற்பருமன் கட்டுப்பாட்டை மீறும் போது ஹார்மோன்கள் மாற்றமடைகிறது.சினைப்பையால் சுரக்கப்படும்
ஆண் ஹார்மோன்களும் Androgen (ஆன்ரோஜன்). பெண் ஹார்மோன்களும் Estrogen (ஈஸ்ட்ரோஜன் ஏற்றத்தாழ்வு அடைந்துஆன்ரோஜன் ஈஸ்ரோஜனாக மாற்றமடையும்போது முட்டை வெளியாவதில் கடின நிலை ஏற்பட்டு மாதவிடாயிலும் மாற்றங்கள் உருவாக ஆரம்பிக்கும்.

மாதவிடாயில் பிரச்சனை ஏற்படாவிட்டால்கூட உடல் எடை என்பது கொழுப்பு செல்களால் ஈஸ்ரோஜனை அதிகமாக்கி கருத்தரிப்பில் தாமதத்தை ஏற்படுத்தும் காரணியே.

ஆகவே எடை அதிகமானவர்கள் எடையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொழுப்பு செல்களை குறைப்பதன் மூலம் ஈஸ்ரோஜன் அதிகமாவதை தடுத்து கருவுறும் வீதத்தை அதிகரிக்கலாம்.

அவ்வாறு கருவுற்றாலும் கூட அதிக எடையுள்ளவர்கள் கர்ப்பகாலத்தில் பல அசெளகரியங்களை எதிர்கொள்ளவும் நேரிடும்.

ஆகவே ஆரோக்கியமான கர்ப்பத்துக்கும் தாய் சேய் நலனுக்கும் எடைக்கட்டுப்பாடு அவசியம்

.சில மிகவும் குண்டான பெண்கள் எந்த சிக்கலும் இன்றி கருத்தரிப்பதும் எவ்வித சிக்கலும் இன்றி குழந்தை பெற்றெடுப்பதையும் உதாரணமாக எடுத்து எடையை அலட்சியம்பண்ணுவது ஆரோக்கியமான கருத்தரித்தலுக்கு ஏற்புடையதல்ல.

Pelvic ultrasound

கர்ப்பப்பையின் நிலையை அறியவும் கர்ப்பப்பை சுவரின் தடிப்பை அளவிடவும். நீர்க்குமிழிகளை கண்டறியவும் அழற்சிகள், கட்டிகள் என்பவற்றை கண்டுபிடித்து தீர்வுகாண எடுக்கப்படும் பரிசோதனை.

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...