Monday 30 January 2017


ஈஸி கப் கேக்


தேவையானவை
மைதா மா 2 கப்
சுகர் 1 கப்
பட்டர் 1 கப்
வெஜிடபிள் ஆயில் கால் கப்
பால் கால்  கப்
பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்



மிக்சியில் சுகர் ஐ கொட்டி பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அடிக்கவும்
அதை தொடர்ந்து பட்டர் , முட்டை, எண்ணெய் என்பவற்றை அடிக்கவும்
பின்னர்  மாவையும் பேக்கிங்க் சோடாவையும் சேர்த்து அடித்து கப்கேக் மோல்ட் இல் ஊற்றவும்
அவொனை 350 பாகையில் சூடுபண்ணி 14 நிமிடங்களில் ஒரு குச்சியை உள்ளே செலுத்தி பார்க்கவும்
குச்சியில் கேக் ஒட்டாவிட்டால் மேலதிக நேரம் தேவையில்லை ஒட்டினால் மேலும் 2 நிமிடங்கள் விடவும்.
.பட்டர் சேர்க்கும் எல்லா கேக் வகைகளுக்கும் பட்டரை குறைத்து அதற்கு பதில் எண்ணெய் சேர்த்தால் மிகவும் மென்மையாக பஞ்சு போல் வரும்.

Sunday 29 January 2017

தற்புகழ்ச்சியில் மட்டு வாசம் செய்யும் நாகரீகர்


அடுத்தவர்கள் உங்களை தனிப்பட்ட முறையில் இடையூறு செய்தால் தவிர நீங்களும் அடுத்தவர்களின் பொதுவான நடைமுறைகளுக்கு  வலிய வலிய கல்லெறியாமல் இருப்பது நாகரீகமான மனிதர்களுக்கு அழகு.

தவிர நீங்கள் எறியும் கற்கள் தகர்க்க போவது உங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் மதிப்பு மரியாதைகளையே


அன்றி அதிகம் பேசும் வாயும் இரவில் ஊளையிடும் நாயும் அடிவாங்காமல் போனதாக சரித்திரம் இல்லை என்பதுபோல் அவமானபடுவதை தவிர்க்க இயலாது.

ஈஸி தக்காளி சட்னி



தேவையானவை
தக்காளி1
வெங்காயம் பாதி
காய்ந்த மிளகாய் 6
தேங்காய் சிறுதுண்டு அல்லது தேங்காய்ப்பூ 1 டேபிள் ஸ்பூன்


அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் தாளித்து அதனுடன் சேர்த்து தக்காளி, மிளகாய்,தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி மிக்சியில் நன்கு அரைக்க வேண்டும்.
மறக்காமல் உப்பு போடவும் .புளி தேவையில்லை.தக்காளி சேர்த்திருப்பதால்.

2 மினிட்ஸ் வேர்க்கடலை

தேவையானவை

வேர்க்கடலை  1 கப்
பட்டர் 1 டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலையை மைக்ரோவேவ் ல் சூடு பண்ணக்கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு அத்தோடு பட்டர் ஐ வேர்க்கடலைகள் முழுவதிலும் படுமாறு சேர்த்து ஒன்றன் மேல் ஒன்று குவிந்து இல்லாதவாறு  நன்கு பரவி உணவு சூடு பண்ணு்துபோல் 2 நிமிடங்கள் சூடு பண்ணி எடுத்து ஆறவைத்தால் மொறு மொறு வேர்க்கடலை ரெடி

கத்தரிக்காய் புரியாணி





தேவையானவை
கத்தரிக்காய் 1கிலோ
வெங்காயம் 2
தக்காளி 1
இஞ்சி ஒரு சிறிய துண்டு 
உள்ளி 2
கராம்பு 2 
ஏலக்காய்1
நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
மல்லி {தனியா}1 டேபிள் ஸ்பூன்
பட்டை 1 துண்டு
சோறு 3கப்


1.கத்தரிக்காயையும் வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கிக்கவும்
.2.இஞ்சி,பூடு ,மல்லி{தனியா},கரம் மசாலா,தக்காளி ,கராம்பு,ஏலக்காய்,பட்டை, விரும்பினால் 5 காய்ந்த மிளகாய் கொத்தமல்லி ,ந்ச்சீரகம் எல்லாவற்றையும் அரைக்கவும் .
3.அடுப்பில் சட்டியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் கத்தரிக்காய் இரண்டையும் நன்கு வதக்கவும் தேவை பட்டால் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் .
4.அரைத்து வைத்துள்ளதை கத்தரிக்காயுடன் சேர்த்து பட்டையும் சேர்த்து விட்டு ,பசை தன்மை வந்தவுடன் வேக வைத்த சோறுடன் சேர்க்கவும் .எளிமையான சுவையான கத்தரிக்காய் புரியாணி 15 நிமிடத்தில் ரெடி







Tuesday 24 January 2017

நடிகர்கள்

நடிகர்கள்  புகழை அடந்தவர்கள் மட்டுமல்ல .
அதன் பலனை  அடையும் வழிகளையும் அறிந்தவர்கள்.
அரசியல்வாதிகளை புறக்கணிக்க முடியாத
கட்டாயத்தில் வாழ்பவர்கள்
எறால் போட்டு சுறா பிடிக்க மட்டுமல்ல
பாம்பிற்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டி
தப்பித்து கொள்ளும் வித்தையும்  அறிந்தவர்கள்.
ஆதாயம் தேடி வரும்போது நீங்கள்
ஆகாரமாகவே அடிபணிந்தால்
அராஜகங்கள் உருவாகவே  செய்யும்
வெறுமைகளை நிரப்ப 
வெறும் சேதாரமே எஞ்சும்
வாக்கு எனும் ஆயுதத்தை வெறும் பேச்சுக்கு பலி கொடுத்தால் வரும்
ஆளுமை உங்களை பேச விடாமலே கொல்லும்
நின்று நிதானியுங்கள்
வென்று வாழுங்கள்

Monday 23 January 2017

சொத்து



ஊனை சுருக்கி
உன்னை உருக்கி
வாழும் வாழ்வில் பயனேது?
சேர்த்ததெல்லாம் கொண்டுபோக 
கல்லறைக்குள் இடமேது?

எண்ணமே வாழ்வு




அடுத்தவர் நம்மை இகழ்வது 
போலொரு பிரம்மை 
நம்மேல் பொறாமை 
என்றெண்ணி கடுப்பு 
அப்படியே என்னை நானாகவே 
ஏற்றுக்கொண்டு விடு 
தர்க்கம் வேண்டாம் 
என்றொரு தவிப்பு 
நான் வாழும் வாழ்வே உயர்ந்தது 
எனும் இறுமாப்பு 
என்னை பற்றி உயர்வாக 
எண்ண வைக்கபடும் பெரும்பாடு 
இது என்ன எதிர்பார்ப்பு. ? 
எங்கே போகிறது எம் வாழ்வு?..

நட்பெனும் நாடகம்




பொய்யை மட்டுமே பேசும்
உன்னை
உண்மையான நண்பன் என்பதா?
அற்பத்திலும்
குற்றம் காணும் உன்னை
உற்ற நண்பன் என்றுரைக்கவா?
நான் வீழும்போது
மகிழும் உன்னை
தோழன் என்றழைக்கவா?
பொங்கிடும் பொறாமை
உன்னிடம் கண்டபின்
நட்பென்று உன்னை நாடவா?
உன் தேவைகள் முடிக்க
தேனாகப் பேசும் உன் பெயர்
ஆருயிர் நண்பனா?
நீ பெற்ற நன்மைகள் 
பெற்றுவிடக் கூடாதென்று
கூடவிருந்து குழிபறிக்கும்
நீ நண்பனா
இல்லை நரியா?
போலி உறவுக்கு 
நட்பென்ற வேலியிட்டு
காவல் செய்யும் நான் 
நாயா நண்பனா?

நீயிலாத நான்



சோரும் விழி நோகும் வலி 
தேடுகின்றேன் உன் முக(ம்)வரி 
எத்தனை நாட்களை உன் 
நினைவிற்காய் பலி கொடுத்தும் 
என் மாளும் உயிர் மீட்க 
இன்னுமேன் வரவில்லை 
நீ நின் நினைவுகளை வென்றெடுக்க 
என் இரவுகள் விழித்திருக்க 
வெறுமை எனை தத்தெடுக்க 
சூரியோதயம் பார்க்கையில் கூட 
உன் விரல் கோர்க்க தவிக்கும் 
என் மனசுக்கு உன் பதில் வேண்டும் 
மழை தரும் இரவில் உன் ஸ்பரிஷம் 
தொலைத்த பரிதவிப்பில் 
கரைந்து மடியும் என் வாழ்வுக்கு 
உடனடியாய் நீ வேண்டும் 
நீயற்ற என் வாழ்வு சீரற்று 
தடுமாற வேண்டாம் 
இடைவெளி வந்துவிடு.....

நேசிக்கப்பிறந்தவள்



அளவற்ற நேசம் 
அதை வெளிப்படுத்த 
வார்த்தைகளை தேடாத சிறப்பு
உரிமைகளில் தலையிடாத 
வெறுக்க வைக்காத வார்த்தைகள்

ஆபத்தில் நீட்டும் கரங்கள் 
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு 
ஏளனம் செய்யாத தெளிவு. 
தமக்கு நிகராய் கொடுக்கும் மதிப்பு. 
எவரையும் தூற்றாத பணிவு .

தோழமையாய் தாயாய்
தந்தையாய் சிகரங்களாய் 
உடன்பிறப்புகள் இருக்கையில் 
எனக்கில்லை வாழ்வில் சலிப்பு 
யாரும் வம்பிழுக்க நினைத்தால் 
அவர்கள் என் கால் செருப்பு .

எதுக்கு இந்த முறைப்பு . 
எனக்கில்லவே இல்லை செருக்கு. 
கழட்டி போட்டு 
எடுப்பேன் ஓட்டம் அடுத்த தெருக்கு.

வரம் அம்மா



அம்மா 
கவலைகள் என்னை முள்
கிளைகளாய் துளைக்கும் போது
உனை கட்டி அழ ஆசைப்படுகிறேன்
நீயில்லை
உயரத்தில் பறந்து நான்
தூரத்தில் வந்தாலும்
துயரத்தில் உன் குரல்
இதயத்துள் இன்னும்
இதமாய் ஒலிக்கிறது
அம்மா
நான் முதல் முதலாக 
உச்சரித்த அதே வார்த்தை
சின்ன வலிக்கும்
வாய்விட்டு
கதறி அழைக்கிறேன்
அருகில் நீ 
இல்லையென்று தெரிந்தும் கூட.......
என்னை பிரிந்தததில்
உனக்கு ஆனந்த வேதனை
உன்னை பிரிந்ததில் எனக்கு
ஆனந்தம் விடை பெற்றுவிட்டதம்மா
போலி முகங்கள் பல
நான் கண்டுணர்ந்த போது
கபடமில்லா உன் முகம் - என்னை 
தோழில் சாய அழைக்கிறது
நிர்ப்பந்தங்கள் சிலவற்றால் 
நம் பந்தத்தை நாமே
சிறைக்குள் 
அடைத்துவிட்டோம் அம்மா
நான் கண்ணீர் வடிக்கையில் 
துடைத்த உன்கரம்
இறைவனிடம் எனக்காக தினம்
கூப்புகின்ற உன் கரம்
எனை அள்ளி அணைத்த உன் கரம்
என் அருகில்  இருந்தாலே அது வரம்
இந்த கவி வரையும் நேரத்தில் நான்
அழுது துடைக்கொண்டேன்
அறிவாயா நீ இந்த உண்மை.

வாழாத வாழ்வு




முந்தை நாள்
எஞ்சியதை உண்டு
மிஞ்சிய பணத்தை எண்ணி
எனக்குள் சந்தோஷம்
பலர் கூடிக் களிக்கும்
உறவுகள் வருகை 
வெட்டி செலவென்று
எதையோ சொல்லி ஒதுங்கி
வென்று விட்டதாய் புளாங்கிதம்
எங்கோ மலிவென்று 
யாரோ சொன்னதை கேட்டு
மணிக்கணக்காய்  செலவிட்டு
ஒற்றை ரூபாய்
சேமித்த  பூரிப்பு
காலையில் பசித்த பசிக்கு
மாலையில் வீடு வந்து
சிக்கனாமாய் புசித்ததில் 
ஒரு திருப்தி
அடுத்தவர் செலவைக்கேட்டு
அப்பாடா நமக்கு
அற்றுப்போனது இந்த
மேலதிக செலவு என்று
உள்ளூர ஆனந்தம்
பயணங்களை ஒதுக்கி
மகிழ்வுகளை சுருக்கி
பணத்தை பெருக்கிய
பெருமிதம்
ஆசைப்பட்டதெல்லாம் 
அடக்கியே வைத்து விட்டு
சொத்து சேர்த்த பெருமை
தேவைப்பட்டதையெல்லாம்
கொஞ்சநாள் உபயோகம் அவை
வேண்டாம் வேண்டாம் என்று
எல்லோர் தேவைகளையும்
அடகு வைத்து
வாழ்ந்த வாழ்க்கையில் சேர்த்த சொத்து
இன்று பிள்ளைகள் கையில்
தேவைக்கு அதிகமாய் 
கிடைத்த போது
கட்டுக்கடங்கா உல்லாசம்
ஊதாரி செலவுகள் 
ஒவ்வாத பழக்கங்கள்
நம்மை வருத்தி 
கண்ட பலன்
நம்மை வருத்தும்போது 
வலி தாங்க முடியாமல்
தினம் மாளாமல்
மனம் போல் வாழ்ந்து விடுங்கள்.
வாழக்கற்றுக் கொடுப்பதை விடுத்து
உங்கள் வாழ்வை தத்துக்கொடுத்து 
கெடுத்துவிடாதீர்...

வாழ விடு





மாறிக் கொண்டிருக்கும்
காலங்களில்
ஆறிக் கொண்டிருக்கும்
காயங்களில்
கீறிக் கொண்டிருக்கும்
சில கூர் முனைகளைத் தாண்டி
பேசிக் கொண்டிருக்கும்
என் மூச்சு
இன்றும் நின்றுவிடலாம்
ஆகவே 
வாழும்வரை வாழ 
வழிவிடு என்கிறேன் நீயோ 
வலிகளை என் மீது
வாரி எறிகிறாய்
என் சமூகமே.

மெளன விளம்பரம்



வெற்றி மொழி
கற்றுக்கொள்ள 
கடினமாகத்தான் இருக்கிறது
தற்காப்பு ஆயுதம்
தருணத்தில் மறந்து போவதால் - பின்
வருந்தும் வேளைகள் ஆயிரம்
அர்த்தம்
எதை வேண்டினும் சொருகிக்கொள்ள
விட்டுவைக்கும் இடைவெளி
தொகை
எழுதப்படாமல் கையொப்பமிட்ட
காசோலை
மெளனம்
சில நேரம்  வளர்க்கும் பகை
இருப்பினும் நன்மைகள் ஏராளம்
உபயோகி
இது
இலவசம்.

போவதெங்கே என் தேசம்




போர் மேகம் புடை சூழ
யுத்தங்கள் பல கடந்தும்
சிக்கல்கள் குறையவில்லை
இரத்த வெள்ளமொடு
பலத்த அழிவு கண்டும்
நிலத்தில் அமைதியில்லை
சுட்டெரிந்து போகும் போது
எங்கிருந்தோ குரல் கொடுத்தேன்
கெட்டழிந்து போகும்போது 
சுமையோடு சோர்ந்து போனேன்
பட்டபாடு மறந்துபோக 
விட்ட இடம் தொலைத்து நின்றேன்
மரத்துப்போன மனங்களோடு
மறத்தமிழன் வாழ்வுதான் 
பயணிக்கும் திசை மாற்ற
வேண்டும் ஒரு மாற்றம் என்று
மீண்டும் மீண்டும் முயல்வோம்.

எனை நீ பிரிந்தாய்



ஓ....அன்று
அந்த நினைவுகள்தான்
எத்தனை கொடியவை ?
என் மனதைக் கேட்கிறேன் - அது
அழுது துடிக்கிறது
ஐம்புலன்களே நீங்கள்
உறங்கிப் போய்விடுங்கள் என்றேன்
மரண தேவதையே - என்னை
வசூலித்துக்கொள் என்றேன்
இதயச் சுவர்களுக்கு எத்தனை வலிமை
இன்னும் வெடிக்காமல் துடிக்கிறது
துன்பங்களை கைது செய்ய நினைத்து 
பின் சிரிக்கிறேன்
என்னால் கத்தரிக்கவும் முடியவில்லை 
சித்தரிக்கவும் முடியவில்லை
என் பிறந்த நாளை விட - நீ 
எனை பிரிந்த நாள் தான் 
ஆழமாக என்னுள்ளே
வலிப்பதை நீ அறிவாயா????

தென்றல்



அந்த தென்றலின் வரவிற்காய்
அன்றொருநாள் - என் 
இதயக் கதவுகளை
அகலத் திறந்து வைத்தேன்
உறக்கத்தை தொலைத்து 
கற்பனைகளை வாங்கினேன்
பாஷையில்லா மெளனத்தில்
ஆசைகளை வளர்த்தேன்
கனவுகள்கூட கலங்கக் கூடாதென்று
நினைவுகளுக்கு இனிமை கொடுத்தேன்.
திசைமாறி புயலாகி எனை நீங்கி
சென்றது தென்றல்
கற்பனைகளை என்ன செய்வேன்
விற்பனையா செய்ய முடியும்
ஆசைகளை வைத்திருந்து 
பூஜையா புரிவேன்
கனவுக்கும் நினைவுக்கும் 
கடும் தண்டனையா இடுவேன்
வேதனை தணலாகி எரிய
ஊமையாய் மனம் முடங்க
காலம் கட்டளையிடுகிறது
கடந்துபோக வைக்கிறேன்
மறந்து விடு என்று
நானோ தோண்டியே பார்க்கிறேன்
என்னை உறங்கவிடு
நிஜங்கள் கனவாகிப்போனது வலிக்க
கனவிலும் வந்து உறுத்தாதே
என்னில் நிலைக்க மறுத்த - உன்
தடங்களை அழிக்கவிடு.

ஏக்கம்






அம்மா என்றழைக்க 
எனக்கில்லை மகவு
என்னை நானே வருத்தி அழிக்கிறேன்
தாயை போற்றும் உலகு
தவிக்கும் நம்மை
தரம்குறைவாய் நோக்குவதுமேனோ
சுற்றங்கள் கூடுகின்ற வேளைகளில்
குற்றம் இழைத்ததுபோல் 
குனிந்து நிற்கின்றேன்
இது பலருக்குத்தெரியாத வலிகள்
என்  வலிகள் கண்ணீர் துளிகளோடு
எனக்கு மட்டுமே சொந்தமாகின்றன.
ஆளுக்கொரு வடிவில் துன்பங்களை
அளந்து கொடுக்கும் இறைவன் நாளை 
ஆளை மாற்றும்போது யாரும் அகப்படலாம்
ஆகவே நம் காயங்களை குத்தி மகிழாதீர்.

மாவீரர்








நாம் உறங்க தாம் விழித்து 
நமைக்காத்து உயிர்நீத்து
தாமுறங்கும் கல்லறையும் 
தகர்த்து எறியப்பட

தமிழர் நம் மனங்களில் குடிவாழும் 
தமிழ்த்தாய் பெற்றெடுத்த 
தன்னிகரில்லா தன்மான சின்னங்கள்

 உற்றவரும் உடன்பிறப்பும்  கண்மூடி தூங்குகையில்
சற்றும் தடையின்றி 
சுற்றிவரும் உங்கள் நினைவலைகள்

பற்றி எரியும் 
பெற்ற மனத்துயர்
மற்றவர்கள் யார் அறிவார்?

குற்றமிங்கு தமிழராக பிறந்ததென்று
குலை நடுங்கி குற்றுயிராய் செத்தொழியும் 
நிலை மாறி  
நீவீர் சிந்திய குருதியும்
விலையற்ற  தியாகமும் ஒருநாள் ஆளும்

எண்ணம்

எண்ணம்

தொலைக்க நினைக்கிறேன்
தூய்மையற்ற நினைவுகளை
மறக்க நினைக்கிறேன்
மனதின் சுமைகளை
என்னுள்
பதிக்க நினைக்கிறேன்
நிறைவேறும் கனவுகளை


நினைவு



இழந்ததை எல்லாம்
இறைவன்
திருப்பி தந்தால்
இன்னுமொரு
புதிய வாழ்வு
பிறரில் சலிக்காமல்
வாழ்ந்து விடுவேன்.




உன்னை எண்ணி



உன்னால் நான்
படுகுழிக்குள்
விழுத்தப்பட்ட பின்னும்
எம்பி எம்பி
உன்னையே எதிர்பார்க்கிறேன்.


youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...