Thursday 10 September 2009

கொன்றை வேந்தன்

அன்னையும் பிதாவும்

முன்னறி தெய்வம்

ஆலயம் தொழுவது

சாலவும் நன்று

இல்லறமல்லது நல்லறமன்று

ஆத்திசூடி

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுதிகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டுண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஒளவியம் பேசேல்
அஃகஞ் சுருக்கேல்

பூனைக்குட்டி

மியா மியா பூனை
வீட்டை சுற்றும் பூனை
பாலை குடிக்கும் பூனை
பாய்ந்து செல்லும் பூனை
இடறு செய்யும் எலிகள்
இதனை கண்டால் நடுங்கும்
அடுத்த வீடும் ஓடும்
அங்கும் திருடித்தின்னும்
மடியில் அமர்ந்து கொண்டு
வாஞ்சையுடனே பார்க்கும்
பாப்பாவோடும் புரளும்
பாசம் காட்டி கொஞ்சும்

நிலா

வட்ட நிலா வா வா
வண்ண நிலா வா வா
பட்டு நிலா வீசி வா
பாடுகிறேன் ஓடி வா
வெள்ளி நிலா வா வா
விண்வெளியில் ஓடி வா
அள்ளி நிலா வீசி வா
ஆடுகிறேன் ஓடி வா

நிலா நிலா ஓடிவா

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடிவா
மலைமேல் ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
வட்ட நிலா வா வா
வண்ண நிலா வா வா
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா
பாடுகிறேன் ஓடி வா

சின்னத்தம்பி

சின்னத்தம்பி சின்னத்தங்கை நித்திரையோ
நித்திரையோ நித்திரையோ
மணி அடிக்கிறது மணி அடிக்கிறது
எழும்புங்கோ எழும்புங்கோ

கைவீசம்மா

கைவீசம்மா கைவீசு
கடைக்கு போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு
கோவிலுக்கு போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு
கண்னே மணியே கைவீசு

பாட்டி வீட்டு பழம்பானை

பாட்டியின் வீட்டு பழம் பானை - அந்தப்
பானையில் ஓர்புறம் ஓட்டையடா
ஓட்டை வழி ஓரு சுண்டெலியும் - அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா
உள்ளே புகுந்து நெல் தின்று தின்று் - வயிறு
ஊதிப்புடைத்து பருத்ததடா
மெல்ல வெளியே வருவதற்கு ஓட்டை
மெத்தச்சிறிதாகி போச்சுதடா
பானையை காலையில் திறந்தவுடன் வெளிப்
பக்கமாய் சுண்டெலி பாய்ந்ததடா
பூனை எலியினை கண்டதடா
ஓடிப்போய் அதை கவ்வியே சென்றதடா

பட்டம்

பட்டம் பறக்குது பட்டம் பறக்குது
பரந்த வெளியிலே
சிட்டுக்குருவி போல
பட்டம் பறக்குது திறந்த வெளியிலே
வாலை அசைக்குது வாலை அசைக்குது
வான வெளியிலே
வாலை அசைத்து மேல் தாவிப் பறக்குது
வான வெளியிலே
நூலை இழுக்குது நூலை இழுக்குது
வீசும் காற்றிலே
நூலை இழுத்து விண் கூவிப்பறக்குது
மூசும் காற்றிலே

லட்டு

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு

லட்டு மொத்தம் எட்டு
எட்டில் பாதி பிட்டு

எடுத்தான் மீ்தம் கிட்டு
மீதமுள்ள லட்டு

முழுவதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு

கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு

மொத்தம் தீர்ந்த லட்டு
மீதம் காலி தட்டு

நாய்க்குட்டி


தோ தோ நாய்க்குட்டி

துள்ளிவா நாய்க்குட்டி

வெள்ளை நிற நாய்க்குட்டி

நான் வளர்க்கும் நாய்க்குட்டி

கள்வன் வந்தால் குரைக்கும்

லொள் லொள்



ஆட்டுக்குட்டி

ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி
அருமையான செல்லக்குட்டி

ஓட்டம் ஓடி வந்திடுவாய்

உனக்கு முத்தம் தந்திடுவேன்

Friday 4 September 2009

வெள்ளைப்பசு

தோட்டத்தில் மேயுது
வெள்ளைப்பசு
அங்கே துள்ளிக்குதிக்குது
கன்றுக்குட்டி
அம்மா என்குது
வெள்ளைப்பசு
உடன் அண்டையில் ஓடுது
கன்றுக்குட்டி

பாற்குடம் சிறுவர் பாடல்


பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்

பாவைதனை ஒப்பாள் பாலெடுத்து விற்பாள்

அங்கவட்டோர் நாளில் அடுத்த கதை கேளீர்
சந்தைக்கு போம்போது தான் நினைத்தாள் மாது

பாலை இன்று விற்பேன் காசை பையில் வைப்பேன்

முருகரப்பா வீட்டில் முட்டை விற்பாள் பாட்டி

கோழி முட்டை வாங்கி குஞ்சுக்கு வைப்பேனே
புள்ளிக் கோழிக்குஞ்சு பொரிக்கும் இரண்டஞ்சு

குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து

விரைந்து வளர்ந்திடுமே வெள்ளை முட்டை இடுமே

முட்டை விற்ற காசை முழுவதும் எடுத்தாசை
வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூ தொப்பி

வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு

வெள்ளைப்பட்டுத்தி மினுங்கல் தொப்பி தொடுத்து

கை இரண்டும் வீசி சந்தைக்கு போவேனே
அரிய மலரும் பார்ப்பாள் அம்புஜமும் பார்ப்பாள்

பூமணியும் பார்ப்பாள் பொற்கொடியும் பார்ப்பாள்
சரிகைச்சேலை பாரீர் தாவணியை பாரீர்

பாரும் பாரும் என்று பவளக்கொடி நின்று
சற்றுத்தலை நிமிர்ந்தாள் தையல் என்ன செய்வாள்

பாலும் எல்லாம் போச்சு பாற்குடமும் போச்சு
மிக்கத்துயரோடு வீடு சென்றாள் மாது

கைக்கு வரும் முன்னே நெய்க்கு விலை பேசேல்


கல்லடி வேலுப்பிள்ளை

அச்சும் தாத்தா


காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு

காடு போல தாடியாம்

மாடி மேல நிக்கும் போது

தாடி மண்ணில் புரளுமாம்


ஆந்தை ரெண்டு கோழி மைனா

அண்டங்காக்கா குருவிகள்

பாந்தமாக தாடிக்குள்ளே

பதுங்கிக் கொண்டு நின்றன


உச்சி மேல நின்ற தாத்தா

உடல் குலுங்க தும்மினார்

அச்சும் அச்சும் என்றபோது

அவை அனைத்தும் பறந்தன

பாட்டி சுட்ட வடை


பாட்டி சுட்ட வடையை தூக்கி

பறந்து சென்ற காக்கையார்

காட்டிலுள்ள மரத்தின் மீது

களைத்து வந்து குந்தினார்

வாட்டுகின்ற பசியில் அங்கு
வந்து நின்ற நரியினார்

பாட்டுப்பாட வல்ல மச்சான்

பாடு பாடு என்றாராம்

சால வித்தை என்னவென்று

தானறிந்த காக்கையார்

காலில் அந்த வடையை வைத்து

கா கா என்று பாடினார்

தன்னை காக்கை வென்றதென்று

தலை குனிந்த நரியினார்

என்ன செய்வோம் என்று வெட்கி

எடுத்தார் ஓட்டம் காட்டிலே.

Thursday 3 September 2009

இருளின் பிடியில் அலறும் தேசத்தை நோக்கி......






எழில் கொஞ்சும் இயற்கை வளம்
எனை ஈன்றெடுத்த அன்னை நிலம்
விழி காண முடியவில்லை இன்று
விதியை எண்ணி வருந்துகிறேன் நொந்து
பழி வந்து சேர்ந்ததுவோ எனக்கு
பகட்டாக வாழப்பறந்தவன் என்று
களிப்போடு வாழ்வில்லை நான் இங்கு
கனன்று எரிகிறது என் நெஞ்சு
.


பரந்த வானின் நிலவின் ஒளியில்
படுக்க வேண்டும் பாய்விரித்து மரநிழலில்
விடிந்ததென்று சேவல் கூவும் இன்பம்
வித விதமாய் ஒலியெழுப்பும் அலாரமிது துன்பம்
செறிந்த மரங்களூடே வீசும் காற்றை
செத்து மடியுமுன் ஏற்க வேண்டும் என் சுவாசப்பை
விரிந்து செல்கிறது மண்ணில் கால்பதிக்கும் ஆசை
விம்மி அழுகிறேன் கேட்கவில்லை ஓசை
.

பலநாள் ஆசைகள் சுடராய் எரிந்தது
பலனாய் நெடுங்கனவுதான் வந்தது
இதுநாள்வரையில் உறங்கிய ஆசைகள்
இதமாய் நெஞ்சில் உதயம் ஆனது
தலைநகரில் கால்பதித்தேன் புல்லரித்தது உடல்
தமிழ் முகங்களைத்தேடினேன் உடன்
தொலைவில் ஓரிருவர் சிரிப்பைத்தொலைத்த முகம்
தொக்கி நின்றது அதில் பெரும் பயம்.

.

சிறைவாழ் தமிழ்ர்கள் பலபேர் - இங்கு
சிறுகுற்றம் புரியவில்லை விடுதலைதான் என்று?
மறைந்து வாழ்ந்தனர் நம்மக்கள்- இம்
மண்ணில் தமிழ்ராய் பிறந்ததுதான் அவர் குற்றம்
கொலை மலிந்து உயிர்கள் தொலைந்தது
கொடுமையது தலை விரித்து தாண்டவம் ஆடியது
தடை உத்தரவு திடீரெனப் பிறந்தது
தடல்புடல் தேடலோடு கைதுகள் தொடர்ந்தது.
.

சோதனைகள் பலகடந்து நான் சென்றேன் யாழிற்கு
சோலையாக இருந்தமண் கிடந்ததே பாழாக
உறவுகள் கண்டேன் இதுவென்ன உருவோ
உடல்மெலிவு சகிக்கவில்லை ஊனிழந்த நிலையோ
சித்திமகள் சித்திரவதையில் வாழ்விழந்ததேனோ
சிறகொடிந்த பறவைகளாய் வாழுவோர் எத்தனையோ?
நித்தம் இங்கு நடக்கும் நிந்தனையால்
நிம்மதியை இழ்ந்த வண்ணம் எம்மக்கள்.

.

காணவில்லை காணவில்லை என்மகனை என்று
கதறியழும் தாயவளின் கண்ணீரைக்கண்டு
தாளவில்லை பதைபதைத்தேன் கொடுமைகளை எண்ணி
தாய்க்குலத்தை பிழியும் துயர் மறைவதெப்போ மண்ணில்
பாடசாலை சென்றபிள்ளை பிணமாகப் பற்றைக்குள்
பாவிகளின் கொடுமைகளால் பலவுயிர்கள் மூடு கிண்ற்றுக்குள்
வீதிகளில் தடைவிதித்து இடைமறிக்க நடை பயில வேண்டும்
வீணர்களால் பிஞ்சுகளும் வயோதிபமும்கூட மிஞ்சியது இல்லை.
.


செம்மணியில் புகைகிறது என்போன்ற உயிர்கள்
செவிமடுக்க யாருமில்லை வெறிபிடித்த அரச நரிகள்
பிள்ளையின் வளர்ச்சி கண்டு தாயழுதாள் ஏனோ?
பிடித்துதின்னும் அரக்கர்களின் பயம்தானோ
அரசபீடம் ஏறுதற்கு அம்மை போட்ட போடு
அடுத்த நிமிடம் அதை மறந்து பிறதிட்டங்களோடு
செம்மையான அடி உதைகள் கற்பழிப்பு சூடு
செய்திகளை மறைத்து நல்லாட்சி எனும் பகட்டு.
.

இரவுவேளை தலைகாட்ட முடியாது வெளியில்
இளையவர்கள் வாழும் வீட்டில் எழுப்பிவிட்டு நிரலில்
பரவி நின்று பேசுவார்கள் தம்மொழியில்
பகலாகுமுன்பே கைது தெரியாது வெளியில்
துரவுகள் கிணறுகள் மண்ணைத்தூர்க்கும்
துருவி ஆராய யார் வருவார் இங்கு
தீர்வுப்பொதியில் இன்னுமென்ன திட்டங்களோ
தீராத எம் சுமையை எடுத்து வைப்பது எப்பொதியில்?

.

பலத்த அழிவுகள் இரத்த சிதறல்கள் பொறுக்க முடியாமல்
பதைத்து எழுந்த வேங்கைகள் பலபேர் - தம்
இனத்தை அழிக்கும் கொடுமைகள் மறைய
இளமை வாழ்வை களைந்து எறிந்து
உதைக்கும் எதிரியை சிதைப்பேன் என்று
உரமோடு நிமிர்ந்த தலைவன் செல்வங்கள்
விடியலை நோக்கி போரிடும் படையை
விட்டுவிலகி நானும் சுநலமாய் வாழலாமோ?
.

விழித்துப்பார்த்தேன் உணர்ச்சிவசத்தில்
விலகிப்போனது இரவின் கனவு
வேலைக்குப்போகவேண்டும் சொன்னது என் மனது
வேறாகிப்போனதுவோ என் மண்ணின் கனவு
இல்லை.. இல்லை ...வேராகிப்போனது நினைவு
இயந்திர வாழ்க்கைக்கு நடைபயின்றேன்
திசைமாறிப்போகுமோ எந்தன் மோகம்
தினம் மோதுதே தேசத்தின் ராகம்.

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...