Friday 4 September 2009

பாட்டி சுட்ட வடை


பாட்டி சுட்ட வடையை தூக்கி

பறந்து சென்ற காக்கையார்

காட்டிலுள்ள மரத்தின் மீது

களைத்து வந்து குந்தினார்

வாட்டுகின்ற பசியில் அங்கு
வந்து நின்ற நரியினார்

பாட்டுப்பாட வல்ல மச்சான்

பாடு பாடு என்றாராம்

சால வித்தை என்னவென்று

தானறிந்த காக்கையார்

காலில் அந்த வடையை வைத்து

கா கா என்று பாடினார்

தன்னை காக்கை வென்றதென்று

தலை குனிந்த நரியினார்

என்ன செய்வோம் என்று வெட்கி

எடுத்தார் ஓட்டம் காட்டிலே.

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...