Saturday 4 February 2017

under construction



கிட்ஸ் யூ ட்யூப் தவிர நான் இன்னும் ப்ளாக் ல் ப்ளாக் கு என புதிதாக எதையும் எழுதவில்லை.கொப்பி பேஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் .( ஒவொரு மனநிலையில் எழுதிய வரிகள் வாசிக்கும் போது அதே மொமெண்ட் க்கு மறுபடி செல்கிறேன்

அதனால் எதையும் அழிக்க தொலைக்க விருப்பமில்லை
.
முதலில் சிதறிக்கிடக்கும் என் பழைய பதிவுகளை இங்கு இணைத்துவிட நினைக்கிறேன்.100 பதிவுகளுக்கு மேல் வருகிறது அதனால் உங்கள் லிஸ்ட் ஐ நிரப்பி நிச்சயம் உங்களுக்கு இடையூறு பண்ணும் என்றே நினைக்கிறேன்.

அதனால் என் பக்கத்தில் இருக்கும் எண்பதாயிரம் {8}நல்லுள்ளங்களையும்  என்னை தற்காலிகமாக 1 நாள்  சண்டே}அன்பலோ பண்ணிவிட்டு மீண்டும் பலோ பண்ண முடியுமா என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Friday 3 February 2017

ஞாபக சின்னங்கள்.


நாம் எல்லோருமே சின்ன வயசில் விளையாடிய பொருட்களை தொலைத்தாலும் அந்த ஞாபகங்களை தொலைப்பதில்லை.
காரணம் சிறு வயது ஞாபகங்களுக்கு இணையில்லை என்பதை நம் சுமை மிகுந்த வாழ்வு சுட்டி நிற்பதே.

...
எத்தனை வயதானாலும் நம் அன்புக்குரியவர்களின் அதை சொல்லி சொல்லி பூரித்து போகும் செயல் இந்த உலகில் யாரையும் விட்டு வைப்பதில்லை.
அப்படியிருக்க ஏதாவது வித்தியாசமான குறும்பு படங்களோ,ஞாபக சின்னங்களோ கையில் கிடைத்து விட்டால் போதும் .அதை வைத்து அந்த வயசுக்கே போய் விடுவது மனித இயல்பு.
நம்மை சார்ந்தவர்களுக்கு அதை காண்பித்து கதை பேசியே மாய்வோம். பாவம்தான் அவர்கள் அதற்காக விட முடியாது.நம் சந்தோசத்தை திணித்தே திணறடிப்போம்.


அந்த வகையில் நம் குழந்தைகளுக்கு அவர்கள் சார்ந்த நல்ல ஞாபக சின்னங்களை கொடுப்பது மிகவும் நல்லதும் மகிழ்விக்கக்கூடியதும்.நம்மை பெருமைப்படுத்தக்கூடிய ஒன்றும் ஆகும்.
அதில் ஒன்றுதான் குழந்தைகளில் கால் பதிவு,கை பதிவு போன்றவற்றை எடுத்து பத்திரப்படுத்தி அவர்கள் வளந்ததும் கொடுப்பது.
இதற்கென கிராவ்ட் கடைகளில் ஒரு விதமான கிளே விக்கும் அதை வாங்கி கூட செய்யலாம்.

முடியாவிட்டால் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் கிராவ்ட் பெயிண்ட் ல் அடையாளம் எடுத்து பதிவு செய்து திகதி ஆண்டு குறிப்பிட்டு பத்திரப்படுத்தி வைக்கலாம்.



கூடவே நம்முடையை கை ,பாத அடையாளங்களுக்கு பக்கத்தில் அவர்களுடைய பிஞ்சு கை,பாத அடையாளங்களை வைக்கும்போது மிகவும் அழகாக இருக்கும்.


மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றில்லை.இது என் முயற்சிகள் . நீங்களும் குழந்தைகளின் ஒத்துழைப்புடன் செய்து பாருங்கள்.




2. அடுத்து அவர்கள் முதல் முதல் பாவித்த பொருட்களை இங்கு படத்தில் காட்டியிருப்பதுபோல் செய்து வைக்கலாம்
நான் கடிதமும் கவிதையும் எழுதி இதற்குள் ஒளித்தும் வைத்திருக்கிறேன்.
என் காலத்தின் பின் அவர்களுக்கு விட்டுச்செல்ல நினைக்கிறேன்.
என் அன்பு, சந்தோஷம் ,புத்திமதி, கண்ணீர், வீரம் எல்லாவற்றையும் கலந்தே இதைசெய்து வைத்திருக்கிறேன்
அவர்களுக்காக பொருளும் பணமும் சேர்த்துக்கொடுத்தாலும் அது எப்போதும் பொதுவானதும் அடையக்கூடியதும் அவர்களும் தேடிக்கொள்வார்கள்.
ஆனால் இவ்வாறான சில சிறுவயது ஞாபகங்கள் அவர்களுக்காக பெற்றோர் நம்மால் மட்டுமே பதிவு செய்து கொடுக்க முடியும்.


அன்புக்கூடம்


இந்த பொருளுக்கு இதுதான் இடம் என்றும்
இந்த இடத்திற்கு இதுதான் பொருள் என்றும் வீட்டில் பொருட்களை தெரிவு செய்து நேர்த்தி செய்தால் தேட வேண்டிய தேவையும் இருக்காது வீடும் அடிக்கடி கலையாது.

இது எனக்கு என் கணவர் கற்றுத்தந்த பாடம் இன்று வரைக்கும் நான் தேடிய பொருட்கள் குறைவு.கடையில் ஏதாவது பொருட்களை வாங்க முற்படும்போது  தடுத்து
இதை எங்கே வைக்க போகிறாய் ? என ஒவ்வொரு தடவையும் கேட்டு  என்னை சிந்தித்து வாங்க வைப்பார்.

அத்தோடு 4 மக் வாங்கினால் ஏற்கனவே நிறைய காலமாக இருக்கும் மக் 4 ஐ டொனேட் பண்ணவோ குப்பையில் போடவோ  சொல்வார்.

ஷோ கேஸ் வாங்கி அது நிறைய அழகு பொருட்களை அடுக்குவது எல்லோரும் செய்வது .அதை நான் வாங்க முற்பட்ட போது ஷோ கேஸ் ஐ சட்டென்று தூக்கி வீச முடியாது வைத்தால் வைத்ததுதான்
வருசக்கணக்கா அந்த ஸ்டைல்லயே வீட்டை வச்சிருக்க போறியா ? என்ற ஒரு கேள்வியில் சிந்தித்து அதை  வாங்காமல் விட்டேன்
.
அதன் பலன் இன்று சீசன் க்கு ஏற்றால் போல் வீட்டு ஹால் ஐ மாற்றி விடுவேன் .
பிள்ளைகளுக்காக சிலதை அகற்ற வேண்டியும் உயரத்தில் வைக்க வேண்டியும் வந்தபோது மாறி மாறி வைத்து  கிளீனிங் செய்தும் தேடியும் களைத்து ஒரே டென்ஷன்  ல் கழிந்தது கொஞ்சநாள்.
நிறைய நிலையான பொருட்களை வாங்கி சேர்க்காத காரணத்தால் அதையும் சரி செய்யக்கூடியதாக இருந்தது.

அவ்வாறு மாறியதுதான் பிள்ளைகளுக்காக ஆசை ஆசையாக செய்து கொடுத்த  இந்த நர்சரி.

ஒரு ரூம் ஐ அவர்களுக்காக ஒதுக்கி அவர்களை விளையாட அனுமதிப்பதை விட ஹால் ஐ இவ்வாறு செய்து விட்டால் மொத்த பமிலியும் சேர்ந்து விள்ளாடலாம்.

பின்னாளிலும் அவர்களுக்கு இது ஒரு நல்ல நினைவுகளாக அமையும்.

இங்கு அதிகாலைச்சூரியன் அந்திமாலை சந்திரன் எல்லாம் நம்முடன் விளையாடத்தவறியதில்லை. {படம் ஒன்றில் சண் அடோராவை கொஞ்சிங் கொஞ்சிங்}





வளையல் ட்ரீ


க்றிஸ்மஸ் க்கு LED twig tree செய்ய ரோட்டோரம் வெட்டி இருந்த மரத்தில் இருந்து இந்த கிளையை எடுத்து வந்தேன்.


ஆனாலும் இந்த க்றிஸ்மஸ் அவ்வளவு அவகாசம் கொடுக்கவில்லை.

அதன்பின் இந்த கிளையை தூக்கி போடாமல் சும்மா வீட்ல வச்சிருந்ததால வீட்டை குப்பையாக்குவது யார் ????எனும் தலைப்பில் குடும்பத்தில் பிரச்சனை வர தொடங்கிவிட்டுது.

அதனால பாக்ஸ் பாக்ஸ் ஆ இந்தியாவில் வாங்கி கொண்டு வந்த வளையல்களில் சில பங்கை எடுத்து இந்த மரத்தை தளைக்கச்செய்து விட்டேன்.



ஐடியா நம்பர் 1 பிடித்துக்கொள்ளுங்கள்.



ஐடியா நம்ப 2 கிவ்ட் பேப்பர் முடிந்ததும் கிடைக்கும் ரோல் ஐ எடுத்து நம்முடைய ட்ரோவர் க்கு அளவாக வெட்டி இவ்வாறு வரிசையாகவும் அடுக்கி வைக்கலாம்.



பேக்ட் கட்லட் பஜ்ஜி


தேவையானவை
மிளகாய்கள் 6
மீன்  வேக வைத்து முள்ளு நீக்கியது கால் கிலோ
வெங்காயம் 1
முட்டை 2
பச்சை மிளாகாய் அல்லது காய்ந்த மிளகாய் 2
கொத்தமல்லி
உப்பு
எண்ணெய் அல்லது பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
டுத் பிக் 12





1.மிளகாயின் தலைப்பகுதியை வட்டமாக வெட்டி எடுக்கவும்



2. சிறிய கத்தியை உள்ளே விட்டு வட்டமாக சுழற்றி மிளகாயின் விதைகளை வெளியே எடுக்கவும்


3. மீன் தசைக்குள் வெங்காயம் ,உப்பு,மிளகாய் ,சிறிதாக அரிந்த கொத்தமல்லி  என்பவற்றோடு முட்டையையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்

4.மிளகாய்க்குள் மீன் கலவையை வைத்து வெட்டி வட்டமாக வெட்டி எடுத்த மிளகாய் பகுதியை மறுபடியும் வைத்து டுத் பிக் சொருகி இணைக்கவும்.



5.ட்ரேயில் வைத்து எண்னெய் அல்லது பட்டர் தடவி 400 பாகை பரனைட் ல் 15 நிமிடங்கள்  பேக் பண்ணவும்



ம்ம்ம் ஜம்மி

Thursday 2 February 2017

இறால் கார சாலட்


தேவையானவை
romaine salade 1
தக்காளி 1
காரட் பாதி அளவு
கியூக்கும்பர் பாதி அளவு
இறால் 1 கிலோ
வெங்காயம் அரை கிலோ
கொத்தமல்லி 1 கட்டு
மஞ்சல் ஒரு டேபிள் ஸ்பூன்
தனிமிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளாகாய் 2 விரும்பினால் 
உப்பு




செய்முறை
இறால் பிரட்டல்
1.இறால் ஐ சுத்தம் செய்து உப்பு மஞ்சல் மிளகாய்த்தூள் சேர்த்து வைக்கவும்
2.சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கொத்தமல்லியை உப்பு சேர்த்து தாளிக்கவும்
3.அதற்குள் தயாராக வைத்திருக்கும் இறாலை சேர்த்து மூடி வைக்கவும்.
தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் விடவும்
4. நீர் வற்றி இறால் வேகியதும் இறக்கி ஆற வைக்கவும்


சாலட்
1.காரட் ஐயும் கியூகும்பர் ஐயும் துருவி ,தக்காளியையும் சாலட் ஐயும் அரிந்து கொள்ளவும்

இப்போது ஆறிய இரால் ஐயும் சாலட் ஐயும் சேர்க்கவும்.
மிகவும் சுவையான காரமான இறால் சாலட் ரெடி.





பேக்ட் கத்தரிக்காய்


படங்களை பார்க்க உங்களுக்கு புரிந்து விடும் அளவுகள் தேவையில்லை ஆனாலும் சட்டத்தை மீறக்கூடாது என்பதற்காக அளவுகள் கொடுக்கிறேன்.
தேவையானவை 
பெரிய கத்தரிக்காய் 1
ஏதாவது ஒரு வகை சீஸ் 50 கிராம்
சுக்கினி 1
தக்காளி 1
கீரை கொஞ்சம்
வெங்காயம் 2
உள்ளி 4


1. கத்தரி,வெங்காயம் ,உள்ளி,தக்காளி,சுக்கினி,கீரை,எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொள்ளவும் .
2.சுக்கினி ,தக்காளி ,வெங்காயம் என்பவற்றை வட்டமாக வெட்டவும்


3.foil paperற்கு எண்ணெய் தடவி அதில் கத்தரிக்காயை வைக்கவும் 
4..இப்போது எல்லா காய்கறிகளையும் சீஸ் ஐயும் கத்தரிக்காயின் வெட்டிய இடைவெளிக்குள் அடுக்கவும்.


5.உப்பு சேர்த்து கொஞ்சம் எண்ணெய் பூசவும்.{ நான் கோக்கனட் ஒயில் யூஸ் பண்ணுவேன் அதுதான் பிரிஜ் ல் இருந்து எடுத்த கத்தரியில் பட்டதும் உறைந்து விட்டது.}


6..மீண்டும் foil paper ஆல் மூடி 400 பாகை வெப்பநிலையில் 30 நிமிடம் பேக் செய்யவும்.



விரும்பினால் பிரஷர் குக்கருக்குள் வைத்து மூடி கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து,மிதமான தீயில் வேக வைக்கலாம் {தண்ணீர் அதிகம் அதிகம் சேர்க்க தேவை இல்லை .காய்கறிகளில் இருந்தும் தண்ணீர் வரும்.}
10 நிமிஷம் போதும். ரெம்ப வாசனையாகவும் டேஸ்ட் ஆகவும் இருக்கும் .
எனக்கும் ப்ரஷர் குக்கருக்கும் பழைய பகை அதனால் அவன் {oven} ல் செய்தேன்.


youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...