Monday 23 January 2017

சந்திரிகா அம்மைக்கு

1998

எண்ணி எண்ணி எத்தனையோ நாட்களாக
எனக்குள்ளே புதைந்தபடி செல்லாத ஆசையொன்று
எழுதிட வேண்டும் உனக்கொரு கடிதமதில்
என்னின மக்களின் மனக்குமுறல்களை

நலமென்று நாம் கூற முடியுமா - எம்
நிலையின்று நீ உணர்ந்திடக்கூடுமா?
நினைத்துப்பார் மனித உணர்வுகளுடன் ஒருகணம்
நித்தமும் நிகழ்த்தும் பலிகளையும் அதன் வலிகளையும்

அன்றொருநாள் என் கண்முன்னே கொன்றார்கள்
அன்னையொடு தந்தையையும் எனக்கண்ணீருடன் கூறிடும்
ஆதரவின்றிய குழந்தைகள் எண்ணிக்கை தொடர்கதையிங்கு - உன்
அடக்குமுறைகளுக்கு பிஞ்சுக்குழந்தைகளுமா அழுது துடிக்க வேண்டும்?

துடிப்புடனே பள்ளி சென்று கனவுடனே படித்துவரும்
துள்ளும் இளவயது பிள்ளைகளின் வாழ்வினிலே
துன்பங்கள் பல இழைத்து சோர்ந்திடச்செய்து-எதற்கு
எதற்கு துருப்பிடிக்க வைக்கிறாய் இவர்கள் எதிர்காலத்தை?

அலைபாயும் கடலில் தமிழன் அடிபதிக்க தடையெதற்கு
அனுமதியில்லையா எம் நிலமதில் குடியிருக்கவும் பயிர்விதைக்கவும்
அநியாய முறையில் எங்கள் உரிமைகள் பறிப்பு
அரசாள்பவர்களே என்று தணியும் எம்மீது உங்கள் கொதிப்பு

எங்கள் பத்திரிகையின் பக்கங்களும் செய்திகளும் இயம்புவது
எங்கெல்லாம் குண்டுவீழ்ந்து எத்தனைபேர் இன்றுபலி
எங்கெங்கு பெண்கள் கிருஷாந்தி ஆனார்கள் என்பவைதான்
என்றிதற்கு முற்றுப்புள்ளி தெரியவில்லை இது எமக்கு

நாட்டை வளம்படுத்த என்று நீ நாடகமிட்டு
நாடு நாடாய் பணம் வேண்டி போடுகிறாய் எம்மில் குண்டு
நம் நாட்டிலேயே அகதியாகி நிலமிழந்து நிலைகுலைந்து
நாளாந்தம் பயத்தோடு பதைப்புடனே வாழுமெமக்கு வழி ஏது?

உலக நாடுகளும் ஊமையாகி போனதால்
உன் பிழைகள் இன்று நியாயம் ஆனதா?
உயிர் பிழைக்க மருந்தில்லை உறங்குகிறது உண்மை
உந்தன் ஆட்சியில் படும்துயர் முடியுமா எழுதி

ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டினால்
ஒவ்வொரு சோகம் குடிகொண்டு இருக்க
ஒன்றும் தெரியாத பாவைபோல் அலரி மாளிகையில் நீ
ஒருமுறையேனும் நிதானித்து இதையிட்டு யோசி

தெரியாத மொழியில் ஆட்சி நடத்தி
திணறடிக்கிறாய் மூச்சு எம்தமிழ் மொழிதனை
தயவுடன் ஒருமுறை தட்டிப்பாருன் மனச்சாட்சியை
தமிழ்த்தலைமுறை ஒருமுறையும் இல்லை உனக்கடிமை

விரைவில் ஒருமுறை வடபகுதிக்கு வருகை தா
வரும்போது மறக்காமல் உன் மகனையும் கூட்டிவா
வியக்காதே எதுக்கென்று செம்மணிக்குள் புதைக்க
விளங்கும் அதன்பின்பு உனக்கந்த வேதனை

எம் இனிய தாசம் ஒருமுறை அமைதியில் சிரிக்க
எம் மனம் எவ்வளவோ ஆசைப்படுகிறது -நீ
ஏவிவிட்டு உன் படைகளை சேதமாக்கியே பார்க்கிறாய் -ஆனால்
எரியும் மனதுடன் உலவுகிறது வேங்கைக்கூட்டம் கவனம்

பயங்கரச்செய்திகள் அபாயக்குரல்கள்
பாலாத்காரம் சாட்சிகள் இல்லாத சாவுகள்
பாதை தெரியாத வாழ்க்கை ஓட்டம் இங்கு
பாவிகளின் வெறியாட்டமோ தாங்கமுடியவில்லை

உன்படைகளின்று மோதுகிறது பச்சிளம்குழந்தைகளுடன்
உண்மையில் வீழ்த்தப்படுவது அப்பாவி மக்கள்
உனக்கெதுக்கிந்த ஆணவம் வென்றுகொண்டிருக்கிறாய் என்றா?
உதிர்கின்ற பூக்களாகி மக்களுக்காக உன் எதிரியாகினர் புலிகள்

வருகின்ற காலமதில் நீ பாடம் படிப்பாய்
விரிகின்ற போரில் நீயதை உணரும் நேரம் அருகில்
விளங்கத்தான் போகிறது உனக்கப்போது
விடுதலை என்பதற்கு விலை என்ன என்று

இத்துடன் நான் முடிக்குமுன்னர்
இடிக்கப்பட்ட கோயிலின் கையுடைந்த கடவுளை
இரக்கத்துடன் வேண்டிக்கொள்வது என்னவெனில்
இக்கடிதம் அனுப்புவதற்கு குன்றுகுழி வீதியினில்

தங்கு தடை தாண்டிநான் போகும் போது
திரும்பி உயிருடன் வரவேண்டும் என மிகுந்த சிரமத்துடன்
திருந்தாத உனக்கு அனுப்புகிறேன் கடிதம்
தயவு செய்து புரிந்து கொள்வாயா?

கண்டிப்பாய் நீயதனைக்கண்டு கொள்ள மாட்டாய்
குப்பையிலே போகுமென்று நிச்சயமாய் தெரியும்
கேலியாகிப்போனதல்ல இக்கடிதம்
கடிதமாகி போனதுதான் எம் வாழ்க்கை
சுரேன் செல்லையா [சுரேஜினிபாலகுமாரன்]

நீ வேண்டும்

நீ வேண்டும்
என் உயிர் வரை வருடிச்சென்ற உன்
ஸ்பரிசம் தொலைத்தவள் நான்
மறுபடி கேட்கிறேன் உன்
மூச்சுக்காற்றில் என் 
கண்கள் மயங்க
நெருங்கி  வா என்று
தூரமெனும் துயரில் சோருகின்ற
மனதில் துடிக்கின்ற உன் நினைவுகள்
போதும் எனை
துடிப்புடன் வாழவைக்க எப்போதும்
இருப்பினும் நீ வேண்டும்

நாலடியார்

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு" (நாலடியார், 131)

சொத்து


உன்னை உருக்கி
ஊனை சுருக்கி
போலி வாழ்வில் பயனேது
சேர்த்ததெல்லாம் கொண்டுபோக
சவப்பெட்டிக்குள் இடமேது

அம்மா


அம்மா 
என்று உன்னை அணைக்காத உயிரில்லை என்
கருவில்அழிந்த உயிருக்கு
அந்த வாய்ப்பில்லை


யாரை நம்பி நான் பிறந்தேன்

தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

உறவுகள் கூடுமிடத்தில்



உறவுகளுக்குள் ஒன்றுகூடல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.திருமண விழா,சடங்கு,பிறந்தநாள்,நன்மை தீமைகள் என்று ஒன்று கூடுவது வழக்கம்.

இவ்வாறான ஒன்றுகூடலில் நன்மை சந்தோசம் என்பன எவ்வளவு அமைகிறதோ அதற்கு சமனான சச்சரவுகள் மனக்குறைகள் என்பனவும் தவிர்க்க முடியாத ஒன்று.


இவற்றை முடிந்தவரை நேர்த்தி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்.


விழாவுக்கு உரியவர்களாக இருக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் ,விழாவில் பங்கு பெறுபவராக இருக்கும் பட்சத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நோக்குவோம்.


*விழா அமைப்பாளர்களாக இருக்கும் பட்சத்தில்


*முதலில் விழா பற்றி திட்டமிடல் வேண்டும்.


*முற்பகையை மறந்து அழைப்புக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.


*பங்கு பெற முடியாத உறவுகளின் காரணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.


*அனுசரிப்பில் வேற்றுமை காட்ட கூடாது.

*தரமான சுவையான உணவுகளால் விருந்தளிக்க வேண்டும்.


*குடும்ப விழாக்களில் முடிந்தளவு பேச்சைக்குறைப்பது நன்று .மேள நாயன இசைகளை திருமண நிகழ்ச்சிகளில் முன்னோர்கள் புகுத்தியதற்கான காரணம் இதுதான்.

உறவுகள் கூடுமிடத்தில் ஒருவர் பேச்சு இன்னொருவர் காதுக்கு எட்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் மணமக்களை ஒரு சேர பார்த்தவுடன் சொந்தங்கள் அவர்கள் குறை நிறைகளை பேச 

அவை அவர்களின் அன்றைய நாளின் மகத்துவத்தை சீர்குலைத்து விடாமல் இருக்கவுமே.

இதற்கமைய பொது நிகழ்ச்சிகளை அதாவது எல்லோரும் சேர்ந்து ரசிக்ககூடிய ஆடல், பாடல் ,வாத்தியங்கள்,போட்டிகள், போன்றவற்றை ஒழுங்கு செய்யலாம்.


*வருகை தந்த யாரையுமே ஒரு தடவையாவது பார்த்து பேசி கைகுலுக்கி நலம் விசாரிக்க 1 நிமிடத்தை செலவிட தயங்கக்கூடாது.


*நம் விழாவிற்கு வருவோர் தங்களது முழுநாளை அல்லது சில மணித்தியாலங்களை நமக்காக செலவிடுகிறார்கள் அவர்கள் நம்முடன் செலவிடும் அந்த நாள் நேரங்களுக்கு

 நாம் பொறுப்பாளியாக இருந்து அவர்களை உபசரித்து அனுப்பி வைக்க வேண்டும்.


*சிலர் செய்யும் சேட்டைகளை பொறுத்து பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.


*விழாவில் உள்ள குறை குற்றங்களுக்கு செவிமடுத்து திருத்திக்கொள்ள முயல வேண்டும்.



அடுத்து நாம் விழாவில் பங்கு பெறுபவராக இருந்தால்


*அழைப்பு, விழா நேரம் போன்றவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும்.


*விழா அமைத்துள்ள குடும்பத்துக்கு சிரமத்தை கொடுக்காத வகையில் நம்முடைய பங்களிப்பு அமைய வேண்டும்.சிலர் விழா நடத்தும் குடும்பத்தினர் வீட்டுக்கு சில நாட்களின் முன்பாகவே சென்று 

ஊரைச்சுற்றி பார்க்க கிளம்பிவிடுவார்கள்.இது அவர்கள் உங்களில் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தாலும் அந்த நேர வேலைப்பழுக்களில் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும்.

ஆகவே முடிந்தளவு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.


*உணவுப்பழக்கவழக்கங்களை விழாவில் மாற்றிக்கொண்டு அவர்கள் உணவிற்கு ஏற்றால்போல் சமாளிக்க வேண்டும்.சிலர் விழாவில் சாப்பாடு சரியில்லை என்று அடம்பிடிப்பார்கள்.

விழாக்குடும்பத்தார்களுக்கே அதை போய் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.எந்த விழா ஏற்பாட்டாளர்களும் வேண்டுமென்றே தரமற்ற சுவையற்ற உணவுகளை அவர்கள் விழாவில் பரிமாற முனைய மாட்டார்கள்.

இருப்பினும் சந்தர்ப்ப வசத்தால் அப்படியும் அமைந்து விடுவதுண்டு. யாரும் விழாவில் சாப்பிட்ட இந்த உணவினால் ஒரே நாளில் உடல் வளர்ச்சி அடையப்போவதோ உடல் வளர்ச்சி குன்றப்போவதோ இல்லை.

அதனால் அந்த விழாவில் சில விடயங்களை பெரிதுபடுத்தாமல் மகிழ்ச்சியாக பங்களித்து விட்டு வரலாம்.


*பேச்சை அளவு படுத்த வேண்டும்.எல்லா உறவுகளும் கூடியுள்ள இடத்தில் நக்கல் விஷமப்பேச்சுகள் போன்றவற்றை தவிர்ப்பதே நல்லது.


*உறவினர்களிடத்தில் எல்லோர்முன்னும் வைத்து சில தனிப்பட்ட குடும்ப விடயங்களை நலம் விசாரிக்கிறோம் என்ற பெயரில் கேள்வி தொடுப்பது நல்லதல்ல.


*விழாவில் முடிந்தளவு நல்ல விடயங்கள் பொதுவிடயங்கள் போன்றவற்றை பேசுவதும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் புன்னகையுடன் சந்தோசமாக கூடிக்குலவி சிரித்து மகிழ்ந்து அந்த இடத்தை நிரப்புவதுமே நமக்கு சிறப்பைதரும்.


*தேவைக்கதிகமாக உரிமை எடுத்து எதையாவது செய்து நம் மதிப்பை கெடுத்துக்கொள்ளக்கூடாது.நமது வரையறை தெரிந்து செயல்பட வேண்டும்.


*குற்றம் குறைகளையே பேசுவதும் குறைகளை சுட்டிக்காட்டுவதும் நம்மீது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி நம்மைபார்த்தாலே அருவருப்பு ஏற்படுவதை தவிர்க்க நம்மால் முடிந்தளவு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.


*நம்முடைய பங்களிப்பால் விழாவாளர்கள் எந்த தீமையும் இடையூறுகளையும் எதிர் கொள்ளாமல் இருக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.


*உபசரிப்பில் ஏற்படும் தவறுகளை பெரிது படுத்தாமல் அவர்கள் பரபரப்புக்கும் வேலைப்பழுவுக்கும் மதிப்பளித்து மன்னிக்க வேண்டும்.






பூமணி மகள்



    youtube to usb converter

    எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...