Thursday 11 May 2017

Stress Relief Ball


மன அழுத்தங்களும் ,மனப்பதட்டங்களும் அப்பப்போ எல்லோருக்குக்கும் வந்து போவதுதான்.
இயலாமையில் புலம்பவும் செய்வோம் ,ஆனால் புலம்புதல் விடுதலை கிடையாது. எல்லா டென்ஷன்களையும் வாய்விட்டு பொதுவெளியில் 
புலம்பத்தொடங்கினோமானால் அதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தை தொடர வேண்டி மனம் ஒவ்வொரு துரும்பு பிரச்சனைகளையும் தன்னுள் ஆழப்பதிய வைக்கத்தொடங்கிவிடும்.
இது நிச்சயமாக மன உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலே.அதற்காக எந்த துன்பத்தையும் பகிரக்கூடாது என்பது அர்த்தமல்ல .எல்லாத்துன்பங்களையும் பகிர்ந்து கொண்டே இருக்கக்கூடாது என்பதே.
கண்டிப்பாக சில துயரங்களை பகிர்ந்து ஆறுதல் பெறுதல் அவசியம்.
Stress Relief Ball .இது நிச்சயமாக எல்லோரும் வைத்திருப்பீர்கள்.ஆனால் அடிக்கடி எங்கே வைத்தோம் என்று மறந்து விடுவோம்.
ஒரு வித ஜெலியினால் ஆனது .உள்ளங்கைக்குள் அடங்கியும் அடங்காத வழு வழுத்த இந்த பந்தை கையில் வைத்து பிசைவதன் மூலம் 
மனப்பதட்டம் ,மன அழுத்தம் என்பன குறையும்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும் 
.உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கிடைக்கும் .
தசைகள் வலுப்பெறும்.
இரத்தோட்டம் சீர் பெறுவதால் தூக்கம் வரவும்,தலைவலி ,உடல்வலி குறையவும் உதவும்
கோவத்தை கட்டுப்படுத்தும்.


குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம் ஹாண்ட் ரைட்டிங் அழகாகும் என்பார்கள்.
பலருக்கு ஒரே நேரத்தில் அதிக வேலைகள் பார்த்துவிட்டு ஓய்வெடுக்க பிடிக்கும் அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் நேர்த்தியாக சிந்திக்க வேண்டி, வேலைகளுக்கு நடுவே இதை உருட்டலாம்.
வேலைக்கோ ,அப்பொயிண்ட்மண்ட் க்கோ நேரம் கடந்தாலோ மட்டுமட்டாகிப்போனாலோ படபடப்பை குறைக்கவும் இதை யூஸ் பண்ணலாம்
இப்படி பல தேவைக்கு யூஸ் பண்ணலாம்தான் ஆனால்
எங்கே என் ஸ்ரெஸ் பால்? எங்கே என் ஸ்ரெஸ் பால்???? என்று தேடவே இன்னொரு டென்ஷன் கிளம்பும்.
பட் இதை நீங்கள் அப்பப்போ சட்டென்று செய்து கொள்ளலாம்
தேவையானவை
மைதா மா அல்லது பேக்கிங்க் சோடா 
சிறிய பலூன்
ஃபுனல் {funnel}அல்லது பேப்பர் கோண் 
{பேப்பரை படத்தில் காட்டியதுபோல் கோன் ஆக சுருட்டி முனையில் சிறிது வெட்டி விட்டு கோன் கலையாதவாறு ரேப் ஒட்டலாம்}
பலூன் உள்ளே மாவை செலுத்தி தொய்வு இல்லாமல் இழுத்து முனையை கட்டி விடுங்கள்.கட்டிய முனையை வெட்டாமலும் விடலாம் .வெட்டுவதாக இருந்தால் அருகே வெட்ட கூடாது. 
பந்தை உருட்டும்போது கட்டு அவிழ்ந்து விடும் .பலூன் சிறியதாக இருந்தால் வெட்டத்தேவையே இல்லை.
அவ்வளவுதான்.
கடையில் வாங்கிய ஒரு ball பழையதானதும் வெட்டி பாத்தேன் உள்ளே பேக்கிங் சோடாவேதான்.அதனால் நாங்களே செய்து கொள்ளலாமே.

மழலைகளை போட்டோ எடுப்பது எப்படி????

மழலைகளை போட்டோ எடுப்பது எப்படி????
நாமெல்லாம் இப்போது ஒரு நாளுக்கு 50 போட்டோஸ் எடுத்தாலும் நம் மனசு பொக்கிஷமாக நினைப்பது என்னவோ நம் சிறுபிராயத்து போட்டோக்களைத்தான்.
ஒரு குறிப்பிட்ட வயதுவரை நமக்கு அதன் அருமை தெரியாது .அதன் பின் அதில் ஏற்படும் ஈர்ப்பு எப்போதும் தீராது.
அதிலும் நாம் மழலையாக இருக்கும்போது எடுத்த போட்டோவாக இருப்பின் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்வோம்.
இதே போல் நம் குழந்தைகளுக்கு நல்ல நினைவுகளை கொடுக்க நாம் இப்போதே சிந்தித்து அவர்களின் மழலைத்தனங்களை மழலை முகங்களை நிதானமாக அழகாக படம் பிடிக்க வேண்டும்.


இதற்கான என்னால் முடிந்த சில டிப்ஸ்
1.குழந்தைகளை படம் பிடிக்கும்போது Dslr camera தான் மிகப்பொருத்தமானது என்பதை நினைவில கொள்ளுங்கள். 
அவர்களை நெருங்காமல் இடையூறு கொடுக்காமல் எடுத்துக்கொள்ளலாம்.தெளிவாக இருப்பதோடு மாற்றங்கள் செய்யவும் அளவை பெரிதாக்கவும் என நிறைய விஷயங்கள் இந்த dslr camera மூலமே சாத்தியம்.
2.அவர்கள் எப்போது ஜாலியாக இருப்பார்களோ அந்த நேரத்தை ஸூட்டிங்க் ற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள்
தூங்கு முன்,தூக்கத்தில் இருந்து விழித்த ஒரு மணிநேரத்திற்குள் ,பயணங்களின் பின், பசி எடுக்கும் நேரம்,நன்றாக சாப்பிட்டு 1 மணிநேரத்திற்குள் எல்லாம் போட்டோ எடுப்பது குழந்தைகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.
3.குழந்தைகள் கமராவை பார்க்க வேண்டும் என ஒருபோதும் எதிர்பார்க்க கூடாது.அவர்கள் போக்கில் விட்டு நீங்கள்தான் விரைவாக அவர்கள் திரும்பும் பக்கத்திற்கு ஓட வேண்டும்.
4.குறிப்பிட்ட நேரத்திற்குள் சுறுசுறுப்பாக எடுத்து முடிக்க வேண்டும்.


5.குழந்தைகளை அடிக்கடி கையால் தொட்டு தொட்டு ஆடைகளையும் அணிகலன்களையும் தலைமுடியையும் நேர்த்தி செய்யக்கூடாது .முதலே சிந்தித்து ஒரே தடவையில் அலங்காரம் செய்து விட வேண்டும்
6.கையால் அமுக்கி வைத்து எடுப்பதும் எப்போதும் நல்ல போட்டோ கொடுக்காது. அவர்களுக்காக ஒரு இருக்கையோ கம்பளமோ வசதி செய்து கொடுக்க வேண்டும்.
7. நாங்கள்தான் அவர்களுக்கு ஏற்றால்போல் குனிந்து வளைந்து எடுக்க வேண்டும் அவர்களை கன்ரோல் பண்ணக்கூடாது.
8. சிரமம் கொடுக்கும் ட்ரெஸ் ,அளவில்லாத ட்ரெஸ் அதிக ஜுவல்ஸ் எல்லாம் அணிந்து போட்டோ எடுக்க முயற்சிக்க கூடாது.கேர் ஸ்டைல் அவர்களுக்கு சற்றும் இடையூறு கொடுக்காமல் இருக்க வேண்டும்.
எல்லா ஆயத்தங்களும் முன்னரே சிரத்தையாக செய்து சில நிமிடங்களில் ஆயத்தம் செய்துவிட வேண்டும்.
9.சில குழந்தைகள் இயற்கையிலேயே போட்டோ க்கு மறுப்புக்காட்டுவார்கள் .வித விதமான ஆடைகள் அணிய ஒத்துழைக்க மாட்டார்கள்.இவர்களை போட்டோ எடுக்க விரும்பினால் அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிப்போய் எடுக்கலாம்.
அவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை கொடுத்து கமெராவை தூர வைத்து எடுக்கலாம்.
ஆரம்பத்தில் நிறைய குழந்தைகளுடன் சேர்த்து எடுக்கலாம். போட்டோக்கு நன்றாக ஒத்துழைக்கும் குழந்தையை இவர்கள் முன் வைத்து விதம் விதமாக போட்டோ எடுக்கலாம் பின்னர் தானாக பிடித்துபோய் 
அவர்களாகவே காஸ்டியூம் அணிந்து போட்டோ க்கு போஸ் குடுக்க ஆசைப்படுவார்கள். [இந்த டிப்ஸ் 1 வயதிற்கு மேல்}
10 ஹலோவீன் ,கிட்ஸ் பேத்டே பார்ட்டி போன்றவற்றில் அடிக்கடி பங்கெடுக்கும் குழந்தைகள் ஃபோட்டோக்கு மறுப்பது குறைவு என்கிறது ஆய்வு.{1+}
11.குறுகிய.அதிக பொருட்கள் நிரம்பிய இடத்தை தெரிவு செய்யக்கூடாது.


12.வெளிச்சம் தேவையான அளவு இருக்க வேண்டும். கம்ராவுடன் சேர்ந்த ஃப்ளாஷ் இல்லாமல் தனிப்பட்ட லைட் ஆக இருந்தால் லைட் ஐ சட்டென்று இடம் மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.
13.குழந்தை ஒத்துழைக்க மறுத்தால் அத்தோடு நிறுத்தி இன்னொருநாள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
14.ஒரே தடவையில் பல ஷொட் எடுப்பதுபோல் செட்டிங் ல் கொடுக்க வேண்டும்.
15 பெண் குழந்தைகளை மட்டும்தான் அழகழகாக ஃபோட்டோ பிடிக்கலாம் என்று நினைக்க கூடாது .ஆண் குழந்தைகளும் வளர்ந்தபின் மழலை ஃபோட்டோக்களைத்தான் நேசிப்பார்கள்.
அவர்களுக்கும் நிறைய காஸ்டியூம் இருக்கிறது.அழகான ஐடியாக்களை கோர்த்தால் குழந்தைகளுக்கு அழகாக சிரித்தபடியே போஸ் குடுப்பார்கள்.
மகிழ்ச்சித்தருணங்களை அலட்சியம் செய்யாதீர்கள் .நாளை நினைத்துப்பார்க்க மட்டுமல்ல உறவுகளின் நெருக்கம் விலகாமல் இருக்கவும் இதுவே உதவும்.
என் பிள்ளைகளுக்கு நான் ஒருத்தி உருண்டு பிரண்டு வேர்த்து விறுவிறுத்து ஃபோட்டோ எடுக்கிறேன் என்பதே தெரிவதில்லை.தேவையான எல்லாவற்றையும் ஒரு open box இல் எடுத்து வைத்திருந்து நல்ல மூட் பார்த்து விளையாடி விளையாடி
வழக்கமாக ட்ரெஸ் பண்ணுவதற்கும் ஸ்பெஷலா ட்ரெஸ் பண்ணுவதற்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியாதது மாதிரியே சட்டென்று ட்ரெஸ் பண்ணி விடுவேன். எல்லாத்தையும் குறைய நேரத்தில மாட்ற மாதிரி வெட்டி தைச்சு வச்ச்சிருப்பேன்.
ஆயத்தம் பண்ணி அவர்கள் பாட்டுக்கு விட்டு, நான் சிக்கி சின்னாபின்னமாகி கமராவுடன் தவழ்ந்துகூட எடுப்பேன்.
ஆரம்பத்தில் மூத்த மகள் அழுவாள் அவள் பாட்டுக்கு வாண்டாம் போ என்றே விட்டு விடுவேன் .ஒருதடவை மிரட்டியும் பார்த்தேன்.இப்போ நினைத்தாலும் பாவமா இருக்கும்.
ஒருநாள் ஹலோவீன் பார்ட்டிக்கு போகும்போதும் காஸ்டியூம் போட மாட்டேன் என சாதரண ட்ரெஸ் ல் வந்தாள் .ஒரு வெள்ளைக்கார அம்மம்மா சொன்னார் 
வளந்தா பிறகு அட நான் மட்டும் கலோவீன் ட்ரெஸ் ஐ மிஸ் பண்ணீட்டனே அப்டி கவலை வரப்போகுது.பிரின்ஸஸ் ட்ரெஸ் உனக்கு எவளோ அழகா இருக்கும் ??? என்றார்.
அவளுக்கு பிடிக்கவில்லையாம் என்றேன்.
அவர் சொன்ன டிப்ஸ்தான் மேலே உள்ள சில.
இப்போ அக்காவும் தங்கையும் விரும்பி போஸ் குடுக்கிறார்கள்.

ஊசி வாடை



அவ்வப்போது வந்து போகும் சலிப்பு
யார்மீதோ கொண்ட வெறுப்பு
பொறாமையில் சிதறும் போட்டிகள்
உறவுகளை உடைக்கும் அலட்சியங்கள் 
அள்ளி வீசும் அவசர வார்த்தைகள் 
எள்ளி நகையாடும் ஏளனங்கள்
சொல்லி மாளாத புலம்பல்கள் 
எல்லாம் துடைத்து வீசும் 
நெடிகள் அவை
ஆன்மீகம் கற்றுத்தராத பாடம்
ஆலயம் அளித்திடாத ஞானம்
நிலை உணர்த்தும் காட்சிகள்
மாயை தள்ளாட 
 மயக்கம் தெளிய வைத்து
வாழ்வை மீளளிப்பு செய்யும் இந்த 
வைத்தியசாலை அவஸ்தை நேரங்கள்
ஆம் 
குத்திக்குத்தி
குணப்படுத்தும் ஊசி 

ரிப்போர்ட் பண்ணுங்கள்


ஏற்கனவே பேஸ்புக் ல் உங்களுடைய அக்கவுண்ட் அல்லது உங்களுடைய படங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் படங்கள் 
தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் அது உங்கள் கண்ணில் பட்டால் அதே போஸ்ட் இல் உள்ள ரிப்போட் போஸ்ட் எனும் ஆப்ஷனை
அழுத்தி உடனே ரிப்போட் ஃபைல் பண்ணும் ஆப்ஷன் ல் சென்று ரிப்போட் பண்ணுங்கள்.
ஒரு நபரின் படம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் உடனே குறித்த நபருக்குத்தான் சொல்ல வேண்டும் என்றில்லை.நீங்களே ரிப்போட் பண்ணலாம் .ஒவ்வொரு ஆப்ஷன் ஆக கொடுத்துக்கொண்டு போகும் போது நீங்கள் விபரம் எழுதி அனுப்பக்கூடியாதாக 
ஒரு கட்டம் அமைத்திருப்பார்கள்.
அதில் எழுதி அனுப்பினால் உங்கள் முறைப்பாட்டை ஆராய்ந்து கொள்கிறோம் என்று பதில் வரும்.பின்னர் 24 மணிநேரத்திற்குள் ஆராய்ந்து பதிவை நீக்கியோ சம்மந்தப்பட்ட தவறான நபரை நீக்கியோ உங்களுக்கு பதில் வரும்
.
உண்மை கண்டறியப்பட்டு அகற்றும் போது தலைமைப்பதிவைதான் நீக்குவார்கள் .அதனால் எத்தனை இடத்தில் அந்த பதிவு ,படம் பகிரப்பட்டிருந்தாலும் பயமில்லை அதன் பின் அந்த சுட்டி ஓப்பன் ஆகாது.
இது முதல் கட்ட அவசர நடவடிக்கையே .இதன் பின் சம்மந்தப்பட்டவர்கள் புகார் கொடுத்து சட்டப்படி தண்டனை பெற்றுக்கொடுக்கலாம்.
யாரும் தவறானவர்களுக்கு வழிவிட்டு உங்களை தண்டித்துக்கொள்ள வேண்டாம்.
இனிமேல் பேஸ் புக் ல் தலைமைப்பதிவிட்டவரையும் தலைமைப்பதிவையும் மட்டுமன்றி அதை பகிர்ந்தவர்களையும் ப்ளாக் பண்ணும் நடவடிக்கைகள் அமுலாக்கப்போவதாக நியூஸ் ல் பார்த்தேன்.
அறிமுகமிலா நபர்களும் ஆண்களும்தான் ஆபத்தானவர்கள் என்ற எண்ணங்களை கைவிட்டு நெருக்கத்தில் இருக்கும் துரோகிகளிடத்தில் விழிப்பாக இருங்கள்.
அடிக்கடி கூகிள் ல் உங்கள் பெயரை நீங்களே தேடிக்கொள்ளுங்கள் .கூகிள் இமேஜ் ல் உங்களை தேடுங்கள். இது உங்கள் பற்றிய தவறான சித்தரிப்புகள் இருப்பின் காட்டிக்கொடுக்கும்.
யாராவது மேலும் சட்டங்கள் நடைமுறை பற்றி தெரிந்தவர்கள் மேலும் தெளிவு கொடுக்கும் பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சுரேஜினி பாலகுமாரன்
#நிகழ்வுகளின்அதிர்வுகள்

நாசி கோரிங் Nasi Goreng {Indonesian fried rice}

தேவையானவை






எலும்பு நீக்கிய சிக்கன் 100 கிராம்
இரால் 100 கிராம்
முட்டை 2
சாதம் 2 கப்
சோயா சோஸ் 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயத்தாள் 100 கிராம் {spring onion}
வெங்காயம் 1
பூடு 2 பல்லு 
இஞ்சி சிறிய துண்டு
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
காரம் தேவைப்படின் 1 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் சேர்க்கவும்
ஆயத்தம்


1.எலும்பு நீக்கிய சிக்கனை சிறிதாக அரிந்து கொள்ளவும் 
2.முட்டையை உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.
3.இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும்
4.வெங்காயத்தை அரிந்து வைக்கவும்.
5.இரால் ஐ தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.
6.சாதம் தயார் செய்து வைக்கவும்
செய்முறை
1.சட்டி சூடாகியதும் எண்ணெய் விட்டு வெட்டிய வெங்காயம் ,இஞ்சி உள்ளி பேஸ்ட் என்பவற்றை உப்பு சேர்த்து வதக்கவும்.
2.சிக்கன் துண்டுகளையும் இறால் ஐயும் சேர்த்து கிளறவும்.
3. சிக்கன் ,இறால் இரண்டும் வெந்ததும் முட்டையை சேர்த்து கிளறி அதனுடன் வெங்காயத்தாளையும் சோயா சோஸ் ஐயும் சேர்க்கவும்
4.இவற்றுடன் சாதத்தையும் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.


வழமையாக fried rice ற்கு முட்டையை ஆம்லட் ஆக ஊத்தி இரண்டு பக்கமும் திருப்பி வேக விட்டு சிறிய சதுரங்களாக வெட்டி சேர்ப்போம் இதில் கட்டாயமில்லை.விரும்பினால் செய்யலாம்.
மிகவும் சுலபமாக செய்யக்கூடியது .நீண்ட நாட்களாக மறந்து போயிருந்தேன்.மகள் ஜப்பான் போய் வந்து ஞாபகப்படுத்தவும் மறுபடி தொடங்கிவிட்டேன்.எனக்கு புரியாணியை வெறுக்க வைத்தது இந்த 
fried rice தான் அவ்வளவு சுவையாக இருக்கும்




கவுத


இரவோடு பகலையும் 
இணைத்தே 
நனைத்தபடி ....நீயும் 
மணிக்கொரு தேநீரை
அணைத்தபடி நானும்.....
ஈர மனதுடன் 
உவகையில் துளிர்க்கின்ற 
தளிர்களை கொஞ்சியபடி
இளவேனிற்காலத்தின்
சத்தமிடுகிறது
சாரல் துளிகள்









படமும் கதையும் 1


மார்ச் ஏப்ரல் மே வசந்த காலம் Spring
ஜூன் ஜீலை,ஆகஸ்ட் கோடை காலம் Summer
செப்டெம்பர் ஒக்டோபர் நவம்பர் இலையுதிர்காலம்Fall
டிசம்பர் ஜனவரி பெப்ருவரி குளிர்காலம்Winter
காலநிலை பிரிவு நாடுகளை பொறுத்து வேறுபடலாம் ஆனால் எல்லாக்காலநிலைகளும் எல்லோராலும் நேசிக்கப்பட்டாலும்,
எந்த இடையூறும் கொடுக்காமல் எல்லோரையும் நேசிக்கும் ஒரு காலநிலைதான் இந்த வசந்தகாலம், காரணம் மற்றைய எல்லாக்காலங்களிலும் உள்ளதை மிதமிஞ்சாமல் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.
மரங்களில் தளிர்கள் சிறு மொட்டுக்கள் போல் அழகாக இருக்கும் .அதாவது மரம் நிறைய மொட்டுக்கள் போல் இருக்கும்.அதுவும் பனியில் நனைந்தோ மழையில் குளித்துவிட்டோ நிற்கும் மரங்களை binocular கொண்டு பாத்தால்
நம் மனசிலும் அழகு துளிர்க்கும்.
நான் மரங்களின் தளிர்களைத்தான் படம் பிடித்துக்கொண்டிருந்தேன்.அப்போது கமராவை 35* ற்கு மேலே ஸூம் பண்ணும்போதுதான் இந்த குட்டி குருவியார் கூடு கட்டிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
துணை தேவையான பொருட்கள் கொண்டுவர போயிருக்கும் போல அடிக்கடி கூப்பிட்டு கொப்பில் தாவி தாவி தேடிக்கொண்டு இருந்தது.
நமது சுட்டு விரலளவு சிறிய பறவை .நெட் இல் search by image இல் படத்தை கொடுத்து தேடினேன் great tit இதன் பெயர் என்றும் வெறும் 16 கிராம் மட்டுமே எடைகள் கொண்டது என்றும் தெரிகிறது.
நானும் ஸீப்ரா பிஞ்ச் கனரி எல்லாம் வளர்த்தேன் முன்பு. அவை போல அழகான பாடகர்களை எங்கும் கண்டதில்லை.இந்த பேர்ட் குரல் கூட அழகாக இருந்தது.
ஓட்டை ஓட்டையாக குடைந்து இந்த மலைகளில் வசிப்பவர்களும் இதுபோன்ற குட்டிப்பறவைகள் குடும்பங்களே.
போட்டோக்கு முகத்தை காட்டாமல் வாலை மட்டும் காட்டிக்கொண்டு இருந்தது அதுவும் தெளிவில்லை.பார்ப்போம் அடுத்த தடவை மாட்டுவார் .மாட்டுவார்
சோ நீங்கள் எவ்வளவு பரபரப்பாகவும் , மன அழுத்தமாகவும் இருக்கலாம் முடிந்தவரை இவற்றை பிள்ளைகளுக்கு (இயற்கையை ரசிக்க )கற்றுக்கொடுக்க தவறிவிடாதீர்கள்.இவை அவர்கள் பழக்கவழக்கங்களில் அதிக மாற்றங்கள் கொண்டுவரும்.
சாந்தமான பிள்ளைகளாக வளர்வார்கள்.குடும்பத்தை அதிகமாக நேசிப்பார்கள் .தேவையற்ற பொழுதுபோக்குகளை நாட மாட்டார்கள்,தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள் ,மனம் அமைதி கொள்வதால் ஞாபக சக்தி பெருகும் 
நன்றாக படிப்பார்கள் 
என்றெல்லாம் நான் சொல்லவில்லை ஆராய்ச்சிகள் சொல்கிறது.அம்புட்டுத்தேன்.

























youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...