Thursday 11 May 2017

இது உருளை சிப்ஸ் இல்ல உருளை டிப்ஸ்சு



இந்த உருளைக்கிழங்கு ஸ்கின் கேர் க்கு எவளவு உதவும் எங்கிறது நிறைய தடவை ஸ்டேட்டஸ் ஆ பதிவு செய்திருந்தாலும் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

முகம் ப்ரஷ்ஷா இருக்க உருளைக்கிழங்கை வட்டமா வெட்டி முகத்தில நல்லா மசாஜ் செய்து 15 நிமிஷத்தில கழுவினால் முகம் ப்ரஷ் ஆ இருக்கும்.
உருளை அவிச்ச தண்ணியை வீணாக்காமல் கொஞ்சம் வெது வெதுப்பு இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் ஊத்தி அதற்குள் காலை 15 நிமிஷம் வைத்திருந்தால் பாதங்களில் உள்ள அழுக்குகள் போய் கால் அழகாக இருக்கும்.

நான் இரவு தூங்காவிட்டால் முகம் டல் ஆக இருப்பதை போக்க ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கி சின்ன சின்னதா வெட்டி 2 டேபிள் ஸ்பூன் பால் ,அல்லது தயிர்,அல்லது ரோஸ் வாட்டர்
இப்பிடி கிடைக்கிற எதையாச்சும் சேர்த்து கிர்ர்ர்ர்ர்ர் நு மிக்ஸீல அரைச்சு முகத்திற்கு பூசி 15 நிமிஷம் விட்டு கழுவுவேன்.

என்னமோ ரெம்ப காலமா அதிகமா விரும்பி ஸ்கின் க்கு யூஸ் பண்ணுற கிச்சன் பொருள் இந்த உருளைக்கிழங்குதான்.

உருளையின் தோலைக்கூட நல்லா முகத்தில வச்சு சுத்தி சுத்தி தேய்ச்சுட்டுத்தான் குப்பைல போடுவேன்.

என்னோட ஸ்கின் க்கு ஹெல்ப் பண்ணுது நீங்களும் செய்து பாருங்கோ .

வசந்தம்


















வசந்த காலத்தின் 
வாயில் திறக்கையில் 
களிப்புடன் நுழைந்து 
கவலைகள் மறந்து 
சிட்டுக்களாய் பறந்து 
ஞாலம் தரும் சால அழகில் 
நெகிழ்ந்து 
கண்டதெல்லாம் தின்று பல
கலோரிகள் வென்று
குண்டும் மண்டுமாகாமல் 
குதித்து விளையாடுங்கள் 
வரையறுக்கப்பட்ட வாழ்வின்
வழிப்போக்கர்கள் நாங்கள்
வழித்தடங்கள் பறிபோனால் என்ன 
நினைவுகளை பற்றிச்செல்வோம்
சுரேஜினி பாலகுமாரான்

மஷ்ரூம் கீரை சூப்




காளான் 250 கிராம் 
கீரை 500 கிராம்
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
க்ரீம் சீஸ் 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
மிளகு
செய்முறை 



2 கப் தண்ணீரில் கீரை,காளான்,வெங்காயம் ,மிளகாய் எல்லாவற்றையும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
வெந்தபின் க்ரீம் சீஸ் சேர்த்து அரைகுறையாக ப்ளெண்டரால் அல்லது மிக்சியில் அரைக்கவும்
மிளகு தூவி சாப்பிடவும்.
இது மிக குறைந்த நேரத்தில் செய்துவிடலாம் .பசியும் அடங்கிவிடும்.
சில சூப் ரெண்டே நிமிசத்தில ரெடியாகிடும் என்பார்கள் .2 நிமிஷத்தில ரெடியாக்கலாம் பட் அது சைனீஷ் க்கு ஒத்துவரும் நமக்கு அல்ல .
முன்பெல்லாம் நாங்கள் ப்ரேக்ஃபாஸ்ட் க்கு சூப் எடுப்போம் இப்போ லஞ் ,டின்னர் எல்லாம் விதம் விதமான சூப் ல யே நகருது.


யெஸ்ஸ்ஸ் அழகுக்காக ஹெல்த ஐ கவனிக்காமல் விட்டாலும் வாழும் வரைக்கும் ஆரோக்கியமா நடமாடுறதுக்கு ஹெல்த் ஐ கவனிச்சுதானே ஆக வேணும்.
சோ சாப்பாட்டை சமைச்சு வச்சுட்டு பசிக்கு காத்திருக்காமல் பசி எடுத்ததுக்கு பிறகு சட்டென செய்யுற ஆரோக்கியமான சூப் தான் இது .இந்த க்ரீம் சீஸ் எனக்கு ரெம்ப பிடிக்கும் .
பட் இது கலோரி அதிகம் அப்டி நீங்கள் நினைத்தால் ஷவக்ரீம் {sour cream},Whipped Cream ,மில்க், ஏதாவது யூஸ் பண்ணலாம் .
விரும்பிய காய்கறிகளை நறுக்கி வெங்காயம் பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து 2 கப் தண்ணீரில் வேக வைத்து 2 டேபிள் ஸ்பூன் க்ரீம் சேர்த்து ப்ளெண்டரால் கிர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்
அவளவுதான் மிளகு தூவி சாப்பிடவும் .



சின்ன மீனும் பெரிய கதையும்


என்னதான் சமையலில் ஆர்வம் இருந்தாலும் விஷேஷ நாட்கள் தவிர்த்து சாதாரண நாட்களில் இருபதில் இருந்து முப்பது நிமிடங்களுக்கு மேல் கிச்சனில் செலவிட பிடிப்பதில்லை.
அவசரமான திட்டமிட்ட ஆயத்தம் ,5 அடுப்புக்கள் பிளஸ் ஒவன் ,க்ளீனிங்க் என்று அமர்க்களப்படும் அந்த அரை மணி நேரமும் என் கிச்சன்.
இது தெரியாத சிலர் என்னை கேலி செய்வார்கள். உன்னைப்போல வெட்டியா இருந்தால் நாங்களும் செய்வோம் என்பார்கள்.
ஆனால் இந்த திட்டமிடல் , ஆர்வம் எல்லாவற்றையும் நான் கற்றுக்கொண்டது , தினமும் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி ஒரு நாளுக்கு 8 மணித்தியாலங்கள் வெளியில் வேலை செய்து விட்டு வேலை முடிய 
2 மணிநேரம் கோர்ஸ் படிக்க க்ளாஸ் சென்று விட்டு , காலை 7 மணிக்கு ஸ்டார்ட் பண்ணிய காரை இரவு 8 மணிக்கு மேல் கொண்டுவந்து பார்க்கிங் ல் அடித்து விட்டு களைத்துப்போய் வீட்டுக்கு வந்து 
 ஹஸ் என்னை விட அதிக நேரம் கடின வேலை செய்கிறாரே என எவளவு திட்டினாலும் வீட்டிலுள்ள எந்த வேலையிலும் பங்கு கொடுக்காமல் நானே செய்தபோது வந்த ஆர்வமும் திட்டமிடல்களும்தான் இவை.
இன்னும் சொல்லப்போனால் பிஸியிலும் இதைவிட நேர்த்தியும் வேகமும் இருந்தது எல்லாவற்றிலும் .
யெஸ்ஸ்ஸ்ஸ் பிஸி லைஃப் ரெம்ப நல்லதாக்கும் .
அப்போதெல்லாம் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்காததால்தான் எனக்கு வீட்டிலேயே குழந்தைகளுடன் செலவிட்ட இந்த 3 வருடங்கள் ஒரு நாளில் 48 மணித்தியாலங்கள் இருப்பது போலவும் 
உடம்பில் சுப்பர்மான் ரேஞ்ச் க்கு சக்தி இருப்பது போலவும்
காணும் எல்லாவற்றையும் முன்னைவிட 10 மடங்கு அதிகமாக ரசிக்க வைத்ததும் எனலாம்.
இதை ஏன் சொல்கிறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ் என்னுடைய வீட்ட்டு ராஜ்ஜியம் இந்த வருட செப்டம்பர் உடன் முடிவிற்கு வர இருக்கிறது.
இருக்கட்டும் இந்த நெத்திலி மீன் பொரியலையும் என் சோம்பேறி விளையாட்டையும் பாருங்களேன்.


மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சல் ,தனிமிளகாய்த்தூள் ,2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் பூசி ஒவன் ல் 400 டிகிரியில் 18 நிமிடம் பேக் அவளவுதான்.


இது என் தங்காவுக்கு ரெம்ப பிடிக்கும் என்பதால் அடிக்கடி செய்து நானே சாப்பிட்ருவேன்.
ஸூஊஊஊப்பரா இருக்கும் வித ப்ளேன் ரைஸ் அண்ட் தக்காளி சாலட்.





டிப்சு




குடும்பத்தில் யார் ஒருவருக்கு வீட்டில் செலவிட அதிக நேரம் கிடைக்கிறதோ அவர் மிகக் கடினமான வேலைகள் தவிர்ந்த மற்றைய வேலைகளை முடித்து வீட்டையும் சுத்தமாக்கி வைத்திருந்தால் 
வரும் லீவு நாட்களும், குடும்பத்தில் எல்லோரும் இணைந்த ஓய்வுப்பொழுதுகளும் மிகவும் ஆசுவாசமாக இருக்கும்.
நான் வேலை நாட்களில் வேலையோடு வேலையாக எல்லாவற்றையும் செய்துவிட்டு ஓய்வு நாளுக்கு ஆயத்தம் செய்வது அதிகம் .மிகவும் ரிலாக்ஸ் ஆக உணர்வேன்.
அடுத்து 
15 வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் how clean is your house எனும் டி வி ப்ரோக்ராம் ஒன்று பார்ப்பேன்.
அதில் சிலர் பிஸியாகவும் அலட்சியமாகவும் இருந்துவிட்டு வீட்டை க்ளீன் பண்ண இந்த 2 லேடீஸ் உடன் உடன்படிக்கை செய்து வீட்டை ஒப்படைப்பார்கள்.
அப்போது வீடு ஒழுங்கற்றுபோக எல்லோரும் சொல்லும் காரணம்
வேலை நேரமில்லை
,குழந்தைகள் அழுக்காக்குகிறார்கள்,
வீட்டுக்கு வரும்போது களைப்பாக இருக்கிறது,
ஓய்வு நாட்களில் சுத்தம் பண்ணுவதற்கு நேரம் செலவிட விருப்பமில்லை,{வெளியில் போகிறோம்,வீட்டில் ஓய்வெடுக்கவே விரும்புகிறோம்}
செய்தால் நான் மட்டுமே செய்கிறேன் வீட்டில் உள்ள யாரும் ஒத்துழைப்பதில்லை அதனால் எனக்கும் அக்கறை இல்லாமல் போய்விட்டது
சிரமபட்டு சுத்தம் செய்தாலும் சட்டென்று கலைந்து விடுகிறது{ அது அதுக்கென்று இடமும் அந்த இடங்களில் மட்டும் பொருளும் வைத்தால் கலைந்தாலும் எளிதில் ஒழுங்குபடுத்தலாம்}
இருக்கட்டும் அப்பப்போ வேலைக்கு பணம் கொடுத்து செய்து கொள்ளலாம் என்று விட்டு விடுவோம்
இப்படி நிறைய ....
அப்போது அந்த 2 பெண்மணிகளும் கடினமான குரலில் சொன்னது
நோ ஒரு போதும் இதெல்லாம் ஒரு காரணமாக இருக்க முடியாது ,இருக்கவும் கூடாது கம் வித் மீ என கூட்டிப்போனார்கள் 
டைமர் ஐ ஆன் செய்து விட்டு டாய்லெட் ஐ கழுவ சொன்னார்கள் 2 நிமிடங்கள் எடுத்தது .மறுபடி கழுவச்சொன்னார்கள் 38 செக்கன் எடுத்தது.
இந்த 38 செக்கன் ஐ செலவழிக்க நீ சொல்லும் காரணம் சரியா என்பது அவர்கள் கேள்வி???
இதே போலவே சாண்ட் க்ளொக் வைத்து விட்டு எல்லா வேலைகளையும் செய்வித்தார்கள் எந்த வேலையும் 5 நிமிடங்களை தாண்டவில்லை.
எந்த வேலையும் இதில் டெய்லி செய்ய வேண்டியதில்லை டெய்லி டிஷ் வாஷர் ஐ யூஸ் பண்ணுங்கள் தண்ணீருக்கான பணத்தை சேமிக்கலாம் ,
வாரம் ஒருமுறை அதுவும் வேலையால் வந்தபின் ஒருநாள் எல்லா அழுக்குத்துணிகளையும் மஷின் ல் போட்டு எடுங்கள் .{ அழுக்காக்கிவிட்டு புதுசு புதுசா வாங்கி போட்டுக்கொண்டிருந்தார்கள்}
இப்படியெல்லாம் அறிவுரை சொல்லி சொல்லி எல்லோரும் சேர்ந்து செய்து வேலை முடிந்துவிட்டது
வீடு சுத்தமாகி விட்டது .
லைட் ஐ ஆஃப் பண்ணி அழகான மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு எல்லோரும் அமர்ந்து கோப்பி ப்ரேக் எடுத்தபோது மொத்தக்குடும்பமும் அழுதுவிட்டார்கள்.
அதற்கு முன் அவர்கள் க்ளீன் ஹோம் ஐ எஞ்ஜோய் பண்ணியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
சுத்தம் சுகம் தரும் என்பது அதுதான் போல

தற்கொலைத்தக்காளி upside down topsy turvy


தலைகீழாக தக்காளி வைப்பது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.




காலநிலையும் பராமரிப்பும் சரியாக இருக்கும்பட்சத்தில் சாதாரணமாக நிலத்தில் நடுவதை விட பன்மடங்கு காய்கள் கொடுக்கும் என்று ஆராய்ந்து இந்த முறையை பயன்படுத்துகிறார்கள்.
நமது இடவசதிக்கேற்ப நாங்களும் இதன் மூலம் பலன்பெறலாம்.குறிப்பாக இட வசதி குறைந்தவர்களுக்கு உகந்தது.
கடைகளில் இந்த upside down topsy turvy ஐ வாங்கியும் உபயோகிக்கலாம் .



சுலபமாக நாங்களே இந்த ஐடியாவை மட்டும் எடுத்துக்கொண்டு படத்தில் காட்டி இருக்கும் பாக் ஐ கொண்டோ பழைய பக்கெட் ஐ கொண்டோ வாளிகளை கொண்டோ,சாதாரண பூச்சாடிகளைக்கொண்டோ
இதை செய்து கொள்ளலாம்.
மிகவும் சுலபமாக செய்யலாம் .


சிலர் தண்ணி போத்தலில் செய்வதையும் பாத்திருக்கிறேன்.
1.நீங்கள் பாவிக்கப்போகும் உபகரணத்தின் அடிப்பாகத்தில் மிகச்சிறிய துளை ஒன்றை இட்டுக்கொள்ளுங்கள் 
2.ஒரு காட்டன் ,அல்லது வெல்வெட் பழைய துணி அல்லது நீரை வெளிவிடக்கூடிய ஃபோம் எடுத்து ஒரு வட்டமாக வெட்டி அதிலும் சிறிய துளை விடுங்கள்.
{நான் படத்தில் காட்டியதுபோல் நெட் இருந்தாலும் துணியை சின்னதாக வைத்து நெட் ஐயும் சேர்த்து வைக்கலாம் .பட் கட்டாயமில்லை}
3.இப்போது துணியை வாளிக்குள் வைத்து தக்காளியின் வேர் நம்மைப்பார்க்கக்கூடியதாகவும் தளிர் பூமியை பார்க்ககூடியதாகவும் உள் நுளைத்துவிடுங்கள்.
மிக முக்கியமான விடயம் செடி 3 வாரத்திற்கு உட்பட்ட அதாவது அதிகம் வேர்விடாததாக இருக்க வேண்டும்
4.ஓரளவு மண் நிரப்பியதும் உயரத்தில் ஏற்ற இடத்தில் மாட்டி விடுங்கள் 
மீதி மண்ணை மாட்டிய பின் நிரப்பலாம்.


அவ்வளவுதான்
எனக்கு போன வருடம் அவ்வளவாக காய்க்கவில்லை.காலநிலை சரியில்லை யூன் மாதம் ஸ்னோ கொட்டி மண்ணை மறைத்துக்கொண்டு ஸ்னோ படிந்திருந்தது.ஆனாலும் 2 அழகான குட்டிப் பழங்கள் தரவே செய்தது.
2015 நிறைய காய் தண்ணீர் கூட ஊற்றவில்லை டைப்பர் ல் தண்ணீர் நனைத்து மண்ணுக்குள் மூடி விட்டு டூர் போய்விட்டோம் .ஆனாலும் நிறைய காய்கள்.
கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் காய்கள் தராவிட்டால்கூட பார்க்கும் நேரமெல்லாம். பிஸியும் மன இறுக்கங்களும் களைந்து மனதை மகிழ்விக்கும் 
இதானால் ஏதும் நட்டம் ஏற்படப்போவதில்லை.











யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ்


இது எவ்வளவு விசேஷமானது என்று என் ஈழ மக்களுக்கு சொல்லவே வேணாம்.
இருந்தாலும் நான் செய்ததை என் சொந்த பாஷையிலேயே மாற்றம் செய்யாமல் சொல்லீட்டு போறன்.
ஆயத்தம் செய்யுறதுதான் கஸ்டம் அதனால மெல்ல வீட்டில உள்ள எல்லாரையும் கூட்டு சேர்க்கவேணும்.
கஷ்டமான வேலை முடியவிட்டு ,நான் செய்யுறன் ,வெளிய போங்கோ எண்டு வத்தி விட்டுட வேணும்.


தேவையானவை


5,6 பேருக்கு

ஒடியல்மா 150 கிராம்
நண்டு கால் கிலோ
இறால் கால்கிலோ
கணவாய் அரை கிலோ
பயித்தங்காய் 100 கிராம்
மரவள்ளி கால் கிலோ
முருக்கை இலை கொஞ்சம்
பலாக்கொட்டை 100 கிராம்
குத்தரிசி 2 கைப்பிடி
மீன் தலை கால் கிலோ
உள்ளி 10 பல்லு
மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்
செத்தல் மிளகாய் 20 { உறைப்பு பார்த்து தேவைப்பட்டால் இன்னும் சேர்க்கவும்}
புளி ஒரு டேபிள் ஸ்பூன்
ஆயத்தம்


1.ஒடியல் மாவை தண்ணீரில் ஊற வைத்து கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை மேலே உள்ள தண்ணியை ஊற்றிவிட்டு புது தண்ணி மாற்றவும்
கயர்ப்பு போக 3 தடவையாவது இவ்வாறு செய்யவும்
2. தண்ணீரில் உள்ள ஒடியல் மாவை துணியால் பிழிந்து தண்ணீரை நீக்கி எடுத்து 1 கப் புது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்
3...மீன் ,நண்டு ,இறால் , கணவாய் எல்லாவற்றையும் சுத்தம் செய்து வைக்கவும்.
4..பயிற்றங்காய்,மரவள்ளி ,பலாக்கொட்டை ,முருக்கை இலை இவற்றையும் சுத்தம் செய்து வெட்டி வைக்கவும்
5.. உள்ளி,மிளகாய்,மிளகு மூன்றையும் அரைத்து வைக்கவும்
6.. புளியை கரைத்து வைக்கவும்
செய்முறை


அடுப்பை மிதமான வெப்பத்திலயே வச்சிருங்கோ
தேவைக்கேற்ற மாதிரி அப்பப்போ தண்ணியும் ,உப்பும் சேர்க்க மறக்க கூடாது.
1.வீட்ல உள்ளதில பெரிய பாத்திரமா ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும்.
2. 4 கப் தண்ணி விட்டு பயிற்றங்காய் ,பலாக்கொட்டை,அரிசி மூன்றையும் வேக வைக்கவும்
3. கொஞ்சம் வெந்து கொண்டு இருக்கும் போது கணவாய் ,நண்டு ,மீன் சேர்க்கவும்
4. ஒரு 5 நிமிஷம் வேக விட்டு மரவள்ளி ,இறால் ,முருங்கை இலை மூன்றையும் போடவும்
5. கொதித்து எல்லாம் வெந்து வரும்போது அரைத்து வைத்திருக்கும் உள்ளி ,மிளகு,மிளகாய் கலவையை சேர்க்கவும்
6. இப்போது எல்லாம் வெந்த பிறகுதான் புளி சேர்க்க வேண்டும்.
7. புளி மணம் போக 5 நிமிஷம் மெல்லிய ஹீட் ல கொதிக்க வச்சுட்டு ஒடியல்மா கரைசலை சேர்க்கவும்
ஒடியல் மா சேத்த உடன அடிப்பிடிக்க பாக்கும் கவனமா கிண்டி விட்டு அடுப்பை அணைக்கவும் { நோஓஓஓ அடுப்பை கட்டிப்பிடிக்க குடாது யுடும் ]





youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...