Thursday 2 February 2017

ஆசை ஆசை

ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒவ்வொன்றில் அதிக நாட்டம் இருக்கும்.அதே போலதான் சில பொருட்கள் மீதுள்ள பற்றும்.எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்த இரண்டு பொருட்கள் ஒன்று கொஃப்வி மக் {coffee mug} 
இன்னொன்று மெழுகுதிரிகள்{candles}

சில சமயங்களில் நகைக்கடைக்கு போக வேண்டிய தேவை வரும் .உள்ளே போனதும் அந்த டிசைன் ,இந்த டிசைன்,? அது பாக்குறீங்களா??? நெக்லஸ் புது டிசைன் ல வந்திருக்கு ? இப்படி ஏதேதோ எல்லாம் சொல்வார்கள்.
ஆனால் நானோ எத்ற்கு போனேனோ அதை மட்டும் உடனே வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். தங்கம் எபோதுமே ஆர்வமோ தேவையோ வந்ததில்லை.கிவ்ட் ஆக வந்த ஏராளமான நகைகளையே எங்கேயாச்சும் வைத்து விட்டு
என்னிடம் என்ன இருக்கிறது என்றே தெரியாமல் இருப்பேன்.

ஆனால் இந்த மக் ம் காண்டில்ஸ் ம் அந்தந்த சூழ்நிலைக்கு பொருத்தமா இருக்க வேணும் என்று ஆசைப்படுவேன்.ஸ்னோ டைம் ல snowflax டிசைன் ல இருக்குற மக் தான் வேணும் எனக்கு.

சோ இந்த தடவை க்றிஸ்மஸ் நைட் க்கு 12 .30 க்கு மேலே இருக்கும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லிவிட்டு சப்ரைஸ் கிவ்ட் எல்லாம் அடுக்கி விட்டு எனக்கும் ஹஸ் க்கும் கோப்பி போட போனேன்.அப்போது 


ரிமோட் ல் வேலை செய்யும் ஒரு ஜீப் ல் ஒரு பாசல் என்னிடம் வந்து காலில் இடித்து நின்றது .எடுத்து பார்த்தேன் உள்ளே இந்த மக் இருந்திச்சு.
அவளவு சந்தோசம் . காரணம் எனக்கு starbucks coffee யும் பிடிக்கும் ஸ்னோ சீசனில் ஸ்னோ டிஸைன் மக் ம் பிடிக்கும். சிவப்புடன் வெள்ளை நிறம் சேர்ந்தால் கொள்ளை பிரியம்.



வழக்கமானவற்றை விட கொஞ்சம் கனமாகவே இருக்கிறது இருந்தாலும் விரும்பியவர்களுடன் அருந்தும் காப்பியின் சுவையில் சுமைக்கு என்ன வேலை.


இந்த போட்டோக்களில் உள்ள அழகு கூட coffee உடன் ,கடந்த வாரங்களில் வீட்டிற்குள்ளிருந்து பருகிய தெளிவான காட்சிகளில் சிலவே.









ஸ்ரீலங்கன் மாங்காய் மீன் சொதி




தேவையானவை
மீன் துண்டுகள் அல்லது மீன் தலைப்பகுதி 2
மாங்காய் 1 அல்லது புளி{சிறிதளவு}
மஞ்சல் 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2 
தேங்காய்ப்பால் அரை கப்
தாளிக்க 
கருவேப்பிலை
பெருஞ்சீரகம்
கடுகு


கடுகு, சீரகம் கருவேப்பிலை தாளித்து அதனுள் மீன் ,மிளகாய்,மஞ்சல் ,உப்பு எல்லாவற்றையும் அதனுடன் சேர்த்து 2 கப் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவேண்டும் .


மீன் வேகும்வரை கொதித்ததும் தேங்காய்ப்பாலை விட்டு அடுப்பை அணைக்கவும்.
மிகவும் சுவையான சொதி தயாராகி விடும்.


யாராவது பிஸியில் மறந்து போய் இருந்தால் இந்த வாரம் செய்து சாப்பிடலாமே.



மிக மிக ஈஸியானது.


ஈரோப் வாழ் ஈழத்தமிழர்களுக்கு கனடா என்றதும் என்ன ஞாபகம் வருதோ இல்லியோ இங்கு 3 டொலர்களுக்கு 25 இடியப்பம் சொதியும் சம்பலும் கிடைக்கும் என்பது ஞாபகம் வந்து தொலைத்து விடும் .
நாம் வேறு நாடுகளுக்கு செல்லும்போது அதை சொல்லிக்காண்பிக்க மறக்க மாட்டார்கள் {.எல்லாம் கடும் பொறாமைதான் காரணம் கிக்க்கீ}
.இடியாப்பம் பிழிவது கஷ்டமாகையால் அதை வீட்டில் அடிக்கடி செய்ய மாட்டார்கள்.கொஞ்சம் விசேஷ சாப்பாடாகவே அதை பாவித்து வந்தோம் .ஆனால் இங்கு கைபடாமல் மஷினில் பிழிந்து சுவையாக மென்மையாக
மலிவாக கிடைப்பதால் இந்த விஷயம் உலகப்புகழ் பெற்று விட்டது.
நாங்களும் சலிப்பு ஏற்படாதவாறு தேவைக்கேற்ப மாசத்தில் 2 தடவையாவது வாங்கினாலும் ஏனோ அந்த இடியாப்பத்துடன் காம்போவாக வரும் சொதி சம்பல் பிடிப்பதில்லை.
அதற்குபதில் நானே மீன் குழம்பு அல்லது கோழிரசம அல்லது பருப்பு சொதி என செய்து கொள்வேன்.
இன்று இடியாப்பம் வாங்க வேண்டி வந்ததால் இந்த நம்மூர் பாரம்பரிய சொதியை சில நிமிடங்களில் செய்தேன்.

அரைத்த மீன் குழம்பு

நேற்றைய தினத்தில் என் வீட்டில் ஒரு சம்பவம் நடந்தது. ஆம் இதோ இந்த படத்தில் குந்தி இருக்கும் மனச்சாட்சி இல்லாத குக்கர்

சின்னதுதானே இது என்ன செய்யும் என்று வீரமாக மூடியை திறந்த என் நம்பிக்கையை உடைத்து. உள்ளே இருந்த சிவப்பரிசி உழுத்தங்கஞ்சியை
கொதிக்க கொதிக்க என்மேல் கொட்டி தீர்த்தது.

காயங்களும் எரிவுகளும் ஒருபக்கம் இருக்க ஹஸ் வேலையின் நடுவே ஆர்டர் செய்து வீடுவந்த பிஸ்ஸாவை ஓரம் கட்டிவிட்டு இதோ இந்த யாழ்ப்பாணத்து அரைத்த மீன் குழம்பு செய்தேன்.
யெஸ்ஸ்ஸ் சமையல் எனக்கு ரெம்ப பிடிக்கும் .காரணம் நான் அதை ஒரு வேலையாக நினைப்பதில்லை.சமைக்கும் வேளையில்தான் கிச்சன் ல் லாப்டப் வைத்திருந்து பேஸ்புக் வருவேன்.கிச்சனில் வைத்து ஏதாவது பெயிண்டிங் தையல் 
எல்லாம் செய்வேன்.எல்லாம் செய்து கொண்டே ரிலாக்ஸ் ஆக ஒரு கோப்பி குடிப்பேன்
.
சோ அடுப்புக்கு கிட்டே போக முடியாமல் இருந்தது இருந்தாலும் முகத்தை திருப்பி கொண்டு நீள கரண்டியை வைத்து சமைத்துவிட்டேன்.வெறும் 26 நிமிடங்களில்.
இதோ அந்த அரைத்த மீன் குழம்பு
தேவையானவை
அரைக்க
மல்லி {தனியா}2டேபிள் ஸ்யூன்
நச்சீரகம் {ஜீரகம்} 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சல் அரை டேபிள் ஸ்பூன்
மிளகு கால் டேபிள் ஸ்பூன்
செத்தல் மிளகாய் {வரமிளகாய்} 2
தேங்காய் ஒரு சிறு துண்டு அல்லது தேங்காய்ப்பூ
உள்ளி 2 பல்லு
இஞ்சி சிறிய துண்டு
மீன் 4 துண்டுகள்
தேங்காய்ப்பால் 1 கப்
உப்பு
தாளிக்க
வெங்காயம் 1
கருவேப்பிலை
கடுகு
மற்றும் புளி நெல்லிக்காயளவு


மல்லி,இஞ்சி,உள்ளி,தேங்காய்,செத்தல்மிளகாய்,நச்சீரகம்,மஞ்சல் ,மிளகு எல்லாவற்றையும் அரைத்து வைக்கவும் 




கடுகு வெங்காயம் ,கருவேப்பிலை தாளித்து அதனுடன் உப்பு ,புளி சேர்த்து அரைத்து வைத்துள்ளதை அத்ற்குள் கொட்டி தேவையாயின் கொன்சம் தண்ணீரும் விட்டு மீனையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும்.



கொதித்ததும் தேங்காய்ப்பால் விட்டு மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும்.


இது இலங்கை யாழ்ப்பாணத்து பாரம்பரிய உணவுகளில் ஒன்று.குழந்தை பிறந்தவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் கூட குடுப்பார்கள்.ஆனால் வெளிநாடுகளில் டாக்டர்கள் கண்டிப்புடன் சொல்லி விடுவார்கள் இது சாப்பிட வேண்டாம் என்று.
காரணம் மருந்து மாத்திரைகள் இல்லாத காலத்தில் உபயோகிக்க பட்ட இந்த மருத்துவ குணமுள்ள குழம்பை நாம் உண்டு விட்டு மாத்திரைகளையும்,விட்டமின்களையும் எடுக்கும் போது வயிற்றோட்டம் ,வயிற்று வலி,குழந்தைக்கு உபாதைகள் என ஏராளமான பிரச்சனைகள்
ஏற்பட்டு தாய் சேய் இருவர் ஆரோக்கியமும் கெட்டுபோகிறது என்கிறார்கள்.அது உண்மை என்பதும் நான் கண்டுணர்ந்தது.



ஈஸி மாங்காய் பச்சடி


தேவையானவை 
மாங்காய் 1
தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
சுகர் 1 ஸ்பூன்
உப்பு

தாளிக்க ,எண்ணெய் ,வெங்காயம் ,கருவேப்பிலை,கடுகு ,சீரகம்




1.மாங்காயை தோல் சீவி துண்டுகளாகி வெட்டி மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி கொர கொரப்பாக வைக்கவும்



2.சட்டியை அடுப்பில் வைத்து கடுகு ,சீரகம்வெங்காயம் தாளிக்கவும்



3.அதனுள் உப்பு,மிளகாய்த்தூள்,சுகர் சேர்த்து கிளறி அதனுடன் மாங்காயையும் சேர்த்து 2 டேபில் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.



4.தண்ணீர் வற்றி திரண்டு வந்ததும் பாத்திரத்தில் எடுக்கவும்.

நான் இதை வாரக்கணக்கில் வைத்து சாப்பிடுவேன்.அவ்வளவு பிடிக்கும் இந்த சுவை.குறிப்பாக காய்கறி சமைக்கும் நாளில் இதை மிஸ் பண்ணமாட்டேன்.
சிறீலங்கன் புட்டு க்கு ஜூஊஊஊப்பரா இருக்கும்.ம்ம்ம்ம்







நான் வளக்கும் ஒட்டக சிவிங்கி

என் ஒட்டகச்சிவிங்கி
என் குழந்தைகளை கட்டாய வயதிற்கு முன்னர் பாலர் பாடசாலைக்கு அனுப்ப விரும்பாத நான் அவர்களுக்கு எங்கள் வீட்டு ஹால் ஐ
நர்சரி யாக செய்திருந்தேன்.அப்போது எனக்கு ஒட்டகச்சிவிங்கி படம் ஒன்றை வாங்கி சுவரில் ஒட்டி வைக்க ஆசை வந்தது.
நெட் ல் இலும் கடைகளிலும்
தேடினேன்.அவ்வளவாக பிடிக்கவில்லை.{பேபியுடன் நிக்கும் அம்மா ஒட்டகச்சிவிங்கியேதான் வேணும் என்று தேடினேன்}

பின்னர் வேண்டாம் மரத்தில் செய்த ஒட்டகம் வாங்குவோம் என்று தேடினேன்.அதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் எங்களுடைய சமர் பிக்னிக் பிளான் படி இங்குள்ள ஆபிரிக்கன் சபாரி க்கு {african safari toronto} போனபோது அங்குள்ள கடைகளில் ஆவலாக தேடினேன்.நான் தேடியதோ பெரிது அவர்களிடம் சின்னதே இருந்தது.பெரிதாக வேணுமாயின் கழுத்தும் தலையும் சேர்ந்தது மட்டுமே உள்ளது என்று காட்டினார்கள்.அதுவோ நம்மூர் உலக்கை க்கு ஒட்டக சிவிங்கி தலையை வைத்ததுபோல் இருந்தது அதுவும் 70 டொலர்களுக்கு மேலாகவே இருந்தது.
பணத்துக்கு ஏற்ற பொருளாக தெரியவில்லையே என்று வந்து விட்டேன்.
மகளுக்கு விளையாட வாங்கி கொடுத்த பொருட்களில் 5 டொலர்களுக்கு குச்சியுடன் சேர்ந்த ஒட்டகசிவிங்கியும் {பிளாஸ்டிக்} வாங்கி கொடுத்திருந்தேன்.
வீட்டுக்கு வந்ததும் குச்சி எல்லாம் உடைத்து விட்டு தலையை மட்டும் வைத்திருந்தாள் அதைப்பார்த்ததும் எனக்கு வீட்டில் புத்தரின் தலையை வைத்து அலங்காரம் பண்ணியிருந்த கருப்பு நிற கட்டில் கால்கள் கண்ணில் பட,
அவ்வளவேதான் இதோ.


பெயிண்ட் பண்ணிவிட்டேன்.
இதுபோலவே ஒன்றை 110 டொலர்கள் சொன்னார்கள் கடையில்.
போட்டோவை விட நேரில் இன்னும் அழகாக இருக்கிறது .தூரமாக நின்று பார்த்தால் உண்மையாகவே ஒட்டகச்சிவிங்கி நிற்பதுபோலவே இருக்கிறது.


நீங்களும் ஒட்டகசிவிங்கி பொம்மை வத்திருந்தால் கூட அதன் தலையை இணைத்து இப்படி அழகாக செய்து வீட்டில் வைக்கலாம்.
இதன் பாதி உயரத்திற்கு இன்னொரு கட்டில்காலும் இருக்கிறது. இதோ படத்தில் காட்டி இருக்கிறேன்.
இதே போலவே செய்து பேபி ஒட்டகச்சிவிங்கியும் செய்துவிடவேண்டும் என்பதே என் ஆசை.


அதுவரை 
ஒட்ட்க சிவிங்கியின் கழுத்து மட்டும் நீண்டு போனதேன்
ஒட்டுக்கேட்கும் கெட்ட பழக்கம் அதிகமானதால் என்ற பாலர் வகுப்பில் படித்த பாடலை நினைவுபடுத்திக்கொண்டு டாட்டா சீ யூ.
படத்தில் இருப்பவை நாங்கள் பார்த்த ஒட்டக சிவிங்கிகளும் எங்களை தேடி ஓடி வந்து பார்த்த பேபி ஒட்டகசிவிங்கியாரும்.








என்னால் நான் ........


வருடங்கள் உருண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது
வழக்கம் போலவே என்னிடம் ஒரு கேள்வி - நான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறேனா??
ஆம்
சுவாசிப்பதால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதையும் தாண்டி
சுவாரஸ்யமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
ஆம்
வருந்தி உழைத்து வந்த 
வருமானத்தின் பெரும்பகுதியை 
சேமிப்பில் புதைக்க எண்ணி - வரும் 
நாளைய சந்தோசங்களுக்காக
என்னை 
 மேலும் வருத்தி வருத்தி 
இன்றைய வாழ்வை தொலைக்கவில்லை
ஆகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அடுத்தவரின் உடலுழைப்பில் குளிர்காயும் எண்ணம் இல்லை
யாரையும் இடையூறு பண்ணவும் நேரமில்லை
ஒப்பிட்டு பார்த்து போட்டிகள் போட்டதில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இருப்பினும் வாழ்க்கை ஓட்டத்தில் 
நான் வெறுக்கவும் படுகிறேன் சிலரை
வெறுக்கவும் செய்கிறேன்
என் வார்த்தைகள் என்னை மீறுகின்றதையும்
தவறுகள் என்வழி தாண்டவம் கொள்வதையும் 
என்னால் உணர்ந்து திருத்திக்கொள்ள முடிகிறது
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என் அன்புக்கு தகுதியானவர்கள் 
எத்தொலைவில் இருப்பினும் தினமும் என் 
மனக்கண்ணில் நிழலாடி
உறவாடிக்கொண்டே இருக்கிறார்கள்.
என் நேசத்திற்கு உரியவர்களுக்கு நான் பாசாங்கு காட்டியதில்லை
என் பாசத்தையும் நேரத்தையும் 
அர்ப்பணிக்க தயங்கியதில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
பனியில் உணவின்றி ஆங்காங்கே ஒளித்திருக்கும் 
சின்ன குருவிகள் பற்றி என் நாளாந்த சிந்தனையில் இடம் இருந்தாலும்
சில எதிர்மறை எண்ணம்கொண்ட
மனிதர்கள் குணம் கண்டு 
பயத்துடன் ஒதுங்கவே செய்கிறேன்
என் மகிழ்ச்சித் தருணங்களை அவை
மென்று விழுங்கி விட கூடாது என்பதற்காக....
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ்வின் இறுக்கமான சூழல்களையும்
போராட்டங்களையும் வென்று வெளியேறவும் 
சத்தமின்றி என் கவலைகளுக்கு தாழ் போடவும் 
யாருக்கும் அச்சம் இன்றி என் வழி செல்லவும் 
இஷ்டமுடன் பழகிக்கொண்டதால் நான்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
பிறரை தனிப்பட்ட கேள்விகளால் குடைந்து 
விபரம் அறிவதில் ஆர்வமில்லை
வீண்பழி சொல்லவும் விளைந்ததில்லை
அடுத்தவர் பற்றிய வேண்டாத பேச்சுக்கு
என் விலையற்ற நிமிடங்களை 
செலவிட்டு மகிழ்ந்ததில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
என் ஒவ்வொரு சின்னஞ்சிறு அசைவுகளையும்
ஆர்வமுடன் மகிழ்ச்சியாக்கி கடந்து செல்லும்படி 
மாற்றி அமைக்கிறேன்
ஆம் இதே போலவே வாழ்ந்து மறைய விளைகிறேன்
நிகழ்கால மகிழ்ச்சியை அடியோடு அடகு வைக்கும்
எதிர்கால சாதனை எனக்கு வேண்டாம் எனும்
சாதாரணமானவளாகவே வாழ்ந்துவிடுகிறேன்
இல்லை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
என் தாய் என்னை 
டாக்டர் ஆக்கியிருந்தால் மகிழ்வதை விட
என் தந்தை கோடி சொத்துக்களை 
அள்ளி வழங்கியிருந்தால் மகிழ்வதை விட
என்னுள் எதையும் திணிக்காமல் 
போட்டி பொறாமைகளை விதைக்காமல்
மகிழ்வையும் நின்மதியையும் 
உற்பத்தி செய்து 
வாழும் கலை அறியும் அணுகுமுறை 
எனுள் தன்வழியே உறைய வழிவிட்டதனால் 
சாதாரண மனுஷியாய் பெருமையுடன்
வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறேன்.
கரையாத சேமிப்பே வாழ்வென்று 
விடியாத விடியலுக்காய் 
களைத்து திளைத்து ஒரு நாள் விழித்து பார்க்கையில் 
எல்லாம் விலகி போனது உணர்ந்து 
நொடிந்து மீதி காலமும் கடந்து
மடிந்து போவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆகவே
நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன்.
நல்லெண்ணங்களுடனும் 
மிகுந்த புத்துணர்ச்சியுடனும்
எல்லோரும் எல்லாமும் கிடக்கப் பெறவும் 
கிடைத்ததை வைத்து மகிழ்ந்து வாழவும்
வாழ்வின் ஒரு வருடம் குறைந்தாலும் 
கடந்த வருடத்தின் 
பெற்றுக்கொண்ட இன்பங்களை, பாடங்களை 
 மனம் நிறைய எடுத்துக்கொண்டு 
அடுத்த வருடத்தை வாழ்ந்து வளமாக்க அழைக்கிறேன்.
நன்றியுடன் சுரேஜினி பாலகுமாரன்
தங்யூ 2016 அண்ட் வெல்கம் டு 2017 



மனம் ஒரு மங்கி

மனம் ஒரு மங்கி

மீ ; ம்ம்ம் மோர்னிங் என்ன பிரேக்பார்ஸ்ட் வேணும்?
மீ : ஓனியன் பக்கோடா அண்ட் பிளாக் டீ
மீ : ச்சே மோர்னிங்கா??? அதான் பிரட் சிலைஸ் இருக்கே ?
மீ : நோ ஒனியன் பக்கோடாவும் பிளாக் டீயும்
மீ : எதுக்கு காலைலயே இந்த அன்ஹெல்தி எண்ணெய் ஸ்னாக்ஸ்?
மீ :அப்போ இதையே சாயந்தரம் சாப்பிட்டா ஹெல்தியாகிடுமோ? ஒனியன் பக்கோடா வும் பிளாக் டீயும்தான் வேணும்
மீ :சரி எனக்கு ஒருத்திக்கு மட்டும் எதுக்கு இந்த மினக்கேடு பேசாமல் பேகிள் ரோஸ்ட் பண்ணி ஸ்டீம் புரோக்கோலி செய்து முழுங்கிடுவோம்
மீ ; ஓனியன் பக்கோடாவும் பிளாக் டீயும் தான் அடிக்கிற ஸ்னோ க்கு மட்ச் பண்ணும்
மீ: க்கும் அதான் 2 மாசம் வீட்ல இல்லாமல் ஏகப்பட்ட வேலை இருக்கே பிரேக்பாஸ்ட் ஏ வேணாம் வேலைய பாப்போம்
மீ : ஒனியன் பக்கோடா பர்ஸ்ட் .
மீ ; ம்ம்ம்ம் மனசில ஆர்ப்பரிக்கிற எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற எப்பவும் அமையாதெல்லோ



நம்மை நாமே அலட்சியம் செய்யலாமோ?????ஏமாற்றலாமோ? சின்ன மகிழ்ச்சிகள்தானே வாழ்க்கை.


அதனால கட்டர் ல் வெங்காயத்தை வெட்டி ,அரைகுறையாக பொடித்த மிளகாய்ப்பொடி, உப்பு ,பெருஞ்சீரகம் கருவேப்பிலை,கொஞ்ச மைதா மாவு பிசைந்து எண்ணெயில் பொரித்து வெறும் 10 நிமிஷத்தில.....
வெளியே இந்த ஸ்னோ காட்சியை பார்த்துக்கொண்டே
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பபாடா என்னை நான் மகிழ்வித்தபடி







youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...