Monday 23 January 2017

நீ வேண்டும்

நீ வேண்டும்
என் உயிர் வரை வருடிச்சென்ற உன்
ஸ்பரிசம் தொலைத்தவள் நான்
மறுபடி கேட்கிறேன் உன்
மூச்சுக்காற்றில் என் 
கண்கள் மயங்க
நெருங்கி  வா என்று
தூரமெனும் துயரில் சோருகின்ற
மனதில் துடிக்கின்ற உன் நினைவுகள்
போதும் எனை
துடிப்புடன் வாழவைக்க எப்போதும்
இருப்பினும் நீ வேண்டும்

நாலடியார்

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு" (நாலடியார், 131)

சொத்து


உன்னை உருக்கி
ஊனை சுருக்கி
போலி வாழ்வில் பயனேது
சேர்த்ததெல்லாம் கொண்டுபோக
சவப்பெட்டிக்குள் இடமேது

அம்மா


அம்மா 
என்று உன்னை அணைக்காத உயிரில்லை என்
கருவில்அழிந்த உயிருக்கு
அந்த வாய்ப்பில்லை


யாரை நம்பி நான் பிறந்தேன்

தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

உறவுகள் கூடுமிடத்தில்



உறவுகளுக்குள் ஒன்றுகூடல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.திருமண விழா,சடங்கு,பிறந்தநாள்,நன்மை தீமைகள் என்று ஒன்று கூடுவது வழக்கம்.

இவ்வாறான ஒன்றுகூடலில் நன்மை சந்தோசம் என்பன எவ்வளவு அமைகிறதோ அதற்கு சமனான சச்சரவுகள் மனக்குறைகள் என்பனவும் தவிர்க்க முடியாத ஒன்று.


இவற்றை முடிந்தவரை நேர்த்தி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்.


விழாவுக்கு உரியவர்களாக இருக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் ,விழாவில் பங்கு பெறுபவராக இருக்கும் பட்சத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நோக்குவோம்.


*விழா அமைப்பாளர்களாக இருக்கும் பட்சத்தில்


*முதலில் விழா பற்றி திட்டமிடல் வேண்டும்.


*முற்பகையை மறந்து அழைப்புக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.


*பங்கு பெற முடியாத உறவுகளின் காரணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.


*அனுசரிப்பில் வேற்றுமை காட்ட கூடாது.

*தரமான சுவையான உணவுகளால் விருந்தளிக்க வேண்டும்.


*குடும்ப விழாக்களில் முடிந்தளவு பேச்சைக்குறைப்பது நன்று .மேள நாயன இசைகளை திருமண நிகழ்ச்சிகளில் முன்னோர்கள் புகுத்தியதற்கான காரணம் இதுதான்.

உறவுகள் கூடுமிடத்தில் ஒருவர் பேச்சு இன்னொருவர் காதுக்கு எட்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் மணமக்களை ஒரு சேர பார்த்தவுடன் சொந்தங்கள் அவர்கள் குறை நிறைகளை பேச 

அவை அவர்களின் அன்றைய நாளின் மகத்துவத்தை சீர்குலைத்து விடாமல் இருக்கவுமே.

இதற்கமைய பொது நிகழ்ச்சிகளை அதாவது எல்லோரும் சேர்ந்து ரசிக்ககூடிய ஆடல், பாடல் ,வாத்தியங்கள்,போட்டிகள், போன்றவற்றை ஒழுங்கு செய்யலாம்.


*வருகை தந்த யாரையுமே ஒரு தடவையாவது பார்த்து பேசி கைகுலுக்கி நலம் விசாரிக்க 1 நிமிடத்தை செலவிட தயங்கக்கூடாது.


*நம் விழாவிற்கு வருவோர் தங்களது முழுநாளை அல்லது சில மணித்தியாலங்களை நமக்காக செலவிடுகிறார்கள் அவர்கள் நம்முடன் செலவிடும் அந்த நாள் நேரங்களுக்கு

 நாம் பொறுப்பாளியாக இருந்து அவர்களை உபசரித்து அனுப்பி வைக்க வேண்டும்.


*சிலர் செய்யும் சேட்டைகளை பொறுத்து பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.


*விழாவில் உள்ள குறை குற்றங்களுக்கு செவிமடுத்து திருத்திக்கொள்ள முயல வேண்டும்.



அடுத்து நாம் விழாவில் பங்கு பெறுபவராக இருந்தால்


*அழைப்பு, விழா நேரம் போன்றவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும்.


*விழா அமைத்துள்ள குடும்பத்துக்கு சிரமத்தை கொடுக்காத வகையில் நம்முடைய பங்களிப்பு அமைய வேண்டும்.சிலர் விழா நடத்தும் குடும்பத்தினர் வீட்டுக்கு சில நாட்களின் முன்பாகவே சென்று 

ஊரைச்சுற்றி பார்க்க கிளம்பிவிடுவார்கள்.இது அவர்கள் உங்களில் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தாலும் அந்த நேர வேலைப்பழுக்களில் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும்.

ஆகவே முடிந்தளவு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.


*உணவுப்பழக்கவழக்கங்களை விழாவில் மாற்றிக்கொண்டு அவர்கள் உணவிற்கு ஏற்றால்போல் சமாளிக்க வேண்டும்.சிலர் விழாவில் சாப்பாடு சரியில்லை என்று அடம்பிடிப்பார்கள்.

விழாக்குடும்பத்தார்களுக்கே அதை போய் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.எந்த விழா ஏற்பாட்டாளர்களும் வேண்டுமென்றே தரமற்ற சுவையற்ற உணவுகளை அவர்கள் விழாவில் பரிமாற முனைய மாட்டார்கள்.

இருப்பினும் சந்தர்ப்ப வசத்தால் அப்படியும் அமைந்து விடுவதுண்டு. யாரும் விழாவில் சாப்பிட்ட இந்த உணவினால் ஒரே நாளில் உடல் வளர்ச்சி அடையப்போவதோ உடல் வளர்ச்சி குன்றப்போவதோ இல்லை.

அதனால் அந்த விழாவில் சில விடயங்களை பெரிதுபடுத்தாமல் மகிழ்ச்சியாக பங்களித்து விட்டு வரலாம்.


*பேச்சை அளவு படுத்த வேண்டும்.எல்லா உறவுகளும் கூடியுள்ள இடத்தில் நக்கல் விஷமப்பேச்சுகள் போன்றவற்றை தவிர்ப்பதே நல்லது.


*உறவினர்களிடத்தில் எல்லோர்முன்னும் வைத்து சில தனிப்பட்ட குடும்ப விடயங்களை நலம் விசாரிக்கிறோம் என்ற பெயரில் கேள்வி தொடுப்பது நல்லதல்ல.


*விழாவில் முடிந்தளவு நல்ல விடயங்கள் பொதுவிடயங்கள் போன்றவற்றை பேசுவதும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் புன்னகையுடன் சந்தோசமாக கூடிக்குலவி சிரித்து மகிழ்ந்து அந்த இடத்தை நிரப்புவதுமே நமக்கு சிறப்பைதரும்.


*தேவைக்கதிகமாக உரிமை எடுத்து எதையாவது செய்து நம் மதிப்பை கெடுத்துக்கொள்ளக்கூடாது.நமது வரையறை தெரிந்து செயல்பட வேண்டும்.


*குற்றம் குறைகளையே பேசுவதும் குறைகளை சுட்டிக்காட்டுவதும் நம்மீது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி நம்மைபார்த்தாலே அருவருப்பு ஏற்படுவதை தவிர்க்க நம்மால் முடிந்தளவு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.


*நம்முடைய பங்களிப்பால் விழாவாளர்கள் எந்த தீமையும் இடையூறுகளையும் எதிர் கொள்ளாமல் இருக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.


*உபசரிப்பில் ஏற்படும் தவறுகளை பெரிது படுத்தாமல் அவர்கள் பரபரப்புக்கும் வேலைப்பழுவுக்கும் மதிப்பளித்து மன்னிக்க வேண்டும்.






பூமணி மகள்



    அநாவசிய பேச்சுக்களை தவிர்க்க


    1.தேவையற்ற வார்த்தைகளை கட்டுப்படுத்த முதலில் செய்ய வேண்டியது நம்மை நாம் பிஸி யாக வைத்துக்கொள்ள வேண்டும்.காரணம் ஆரோக்கியமற்ற சிந்தனைகளின் வெளிப்பாடே ஆரோக்கியமற்ற வார்த்தைகள்.

    2. இந்த பரந்த உலகில் எவ்வளவோ பொழுதுபோக்குகள் கொட்டிக்கிடக்கிறது.அவற்றில் நமக்கு ஏற்றதுபோல் ஆரோக்கியமான ஒரு பொழுதுபோக்கை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொழுதுபோக்குகளை தேர்ந்தெடுத்துக்கொள்வது.

    3.அடுத்தவர்களது நியாயமற்ற தனிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பேச்சை திசைதிருப்புவது. 

    4.அடுத்தவர்களைப்பற்றிய பேச்சை தவிர்ப்பது அநாவசியப்பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதற்படி.எப்படி அடுத்தவர் சொந்த விடயங்களில் குறுக்கிட நமக்கு உரிமை இல்லையோ அதாவது 18வயதுக்கு மேற்பட்டால் 

    5.நம்மிடத்திடத்தில் பேசும்போது யார் யாருக்கு எவ்வளவு பேச்சு எல்லை என்று மனதளவில் வரையறை செய்து அடுத்தவர்கள் அநாவசியப்பேச்சு எல்லை மீறி போகுமுன் தெளிவாக ஆரோக்கியமான முறையில் அந்த சந்தர்ப்பத்தை விலக்குவது.

    6.நண்பர்களை கட்டுப்படுத்துவது.நண்பர்களை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.காதலில் எப்படி உண்மை பொய் இருக்கிறதோ அதே போல் நட்பு என்பதும் ஒரு நிலையற்ற உறவு.சூழ்நிலைக்கு ஏற்றால்போல் சுழலும் இந்த நட்பு வட்டத்தை நாம் 


    அநாவசிய பேச்சுக்களை களையெடுக்க




    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
    இல்லையேல் அவர் சொன்ன சொற்களே அவர் துன்பங்களுக்கு காரணமாகி விடும்.
    நல்ல வார்த்தைகள் நல்ல உரையாடல்கள் மனிதனின் உள்ளுணர்வுக்குள் ஊடுருவுவதால் நல்ல சிந்தனை சொற்கள் செயல்கள் என்பன நம்மை நாமே அமைதியுள்ளவர்களாக தெளிவுள்ளவர்களாக மனத்திடம் உள்ளவர்களாக 
    மேலோங்க வைக்கிறது.
    இவ்வாறு ஏகப்பட்ட தடங்கல்களை தொடர்ந்து செல்லும் அணுகுமுறைகளில் ஏற்படுத்த வல்லது இந்த வார்த்தைகள்.
    வார்த்தைகள் மிகவும் பலம் வாய்ந்தவை.உறவுகளுக்கு பாலமாக விளங்குபவை.
    ஆகவே உடைத்தெறியும் இந்த வார்த்தைகளில் நாம் எவ்வளவுக்கெவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு நம் வாழ்வை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
    இந்த விடயம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இந்த வார்த்தைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதே நமக்கு தெரியாத விடயமாகிப்போகிறது.

    ஒருவரோடு என்ன வேண்டுமாயினும் பேசலாம் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் என்ற வரயறையற்ற மனித உறவு இல்லை அவ்வாறு இருப்பது மாயை மேலும் அது நல்லதும் இல்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
    அம்மா மகள் ,கணவன் மனைவி போன்ற எல்லா உறவுகளுக்குமே தவிர்க்கவேண்டிய வார்த்தைகள் உரையாடல்கள் என்ற வரயறை இருக்கிறது.இதுதான் மனித வாழக்கை.
    அது தனிப்பட்ட பொழுதுபோக்கோ அல்லது குடும்பத்துடன் சேர்ந்து மேற்கொள்ளக்கூடிய பொழுதுபோக்குகளாகவோ இருக்கலாம்.
    இதன்மூலம் சிந்தனை இந்தப்பக்கமாக திரும்பும்போது அதுபற்றி புதிய புதிய நல்ல சிந்தனைகள் உருவாகும் போது தீய சிந்தனைகள் வேர்விட இடமின்றி மடிகிறது.
    ஒவ்வொருவருக்கும் ரகசியங்கள் இருக்கிறது.அதை எல்லோருடனும் பகிர வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
    தேவையில்லாமல் சிலர் தங்களுடைய ரகசியங்களை பகிர்ந்து கொண்டிருந்தால் கூட பதிலுக்கு உங்கள் ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
    இலவச போன் இணைப்புக்கள் அதிகரித்த இந்த வேளையில் சிலர் அதையே பொழுதுபோக்காக கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.
    எவ்வளவுதான் இலவசமாக இருந்துவிட்டுப்போகட்டும் இலவசம் என்பதற்காக வார்த்தைகளை கோர்த்து கோர்த்து வளர்த்துக்கொண்டே போகவேண்டும்
    என்பதற்கில்லை .நல்ல விடயங்கள் பொது விடயங்கள் வாழ்க்கைக்கும் அறிவுக்கும் பலன் தரக்கூடிய உரையாடல்கள் அதிக நேரம் எடுப்பதில்லை.
    ஆனால் இந்த தேவையற்ற வெடிப்பேச்சு என்பதற்கு முடிவே இருப்பதில்லை என்பதுதான் உண்மை.காரணம் முடிக்க வேண்டிய அவசியமில்லை
    ஏனென்றால் முடித்துவிட்டு இந்த உரையாடல் மூலம் செயல்படுத்த இங்கு எதுவுமில்லை.
    பெற்ற பிள்ளைகளின் சுய சிந்தனைகள் சுய முடிவுகளில் உரிமையெடுப்பதில் எப்படி இரண்டாம் பட்சத்தவர் ஆகிறோமோ அதேபோல் இன்னுமொருவருக்கு நாம் மூன்றாம்பட்சத்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.இதேபோலவே சுயமாக 
    சிந்திக்கும் செயல்படும் ஒருவரைப்பற்றி நாம் அநாவசியமான எண்ணங்களை வெளிப்படுத்துவது அவருக்கு மட்டுமன்றி நமக்கும் நாம் ஆசைப்படும் அமைதியான அழகான வாழ்வுக்கும் கேடு விளைவிக்கும்.
    நாம் பேசிப்பழகும் எல்லோரைப்பற்றியும் ஒரு கணிப்பு வைத்திருப்போம் .அவர்கள் பேச்சின் எல்லை மீறல்கள் அநாவசியங்கள்.என்பனவெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் அதற்கேற்றால் போல் நமது பேச்சை நல்ல முறையில் தயார் செய்து
    சுமூகமான ஒரு உரையாடல்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.சிலருக்கு நிறைய இடைவெளி கொடுத்து அளவாக பேசினால் மட்டுமே அந்த உறவை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது அவர்கள் பேச்சுக்கள்மூலம் நீங்கள் ஏற்கனவே கண்டுணர்ந்திருப்பீர்கள்.
    சிலர் தங்கள் பேச்சால் நமது நிம்மதியையும் நேரத்தையும் சாகடிக்க முயல்வார்கள் அதற்கு இடம்கொடுக்காமல் தப்பிக்கொள்வதே நமக்கு நல்லது.காரணம் பிறர் கெட்டபழக்கங்களையெல்லாம் திருத்திக்கொண்டிக்க முடியாது.
    வரையறுத்துக்கொள்ள வேண்டும் .எல்லோருக்கும் நண்பர்கள் அவசியம் என்ற கட்டாயம் கிடையாது.குடும்பத்தில் உள்ளவர்களையோ தாய் தந்தையர்களையோ உறவினர்களில் நம் வயதை ஒத்தவர்களையோ கூட நமக்கேற்றவர்கள் நம் சிந்தனைகளுக்கு ஒத்துழைப்பவர்களைக்கூட
    நண்பர்களாக்கிக்கொள்ளலாம்.ஏன் நண்பர்களே இல்லை என்று கூட பெருமைப்பட்டுக்கொள்ளலாம் காரணம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் பல விஸ்வரூபம் எடுப்பதற்கு பல வீதத்தில் நண்பர்களே காரணமாகிறார்கள்.விதிவிலக்கானவர்களை பற்றி
    நான் இங்கு பேசவில்லை.ஆகவே இந்த நண்பர்களை வட்டத்தை அளவோடு கட்டுப்படுத்துவதால் நாம் சுயமாக கருத்துக்களை உருவாக்கவும் பேச்சுக்களை நம் மனம் போல் தெளிவாக உருவெடுக்க வைக்கவும் முடியும்

    ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். 

    சொல்லடக்கம் என்பதை பற்றி ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான கருத்துக்கள் முன்மொழிகளை யாமறிவோம்.இருப்பினும் வார்த்தைகளை அடக்குவது என்பது ஒரு மிகப்பெரிய கலை.தேவை.அவசியம்.

    முற்பேசிய வார்த்தைகள் பின்னால் ஏன் இப்படி பேசினோம் என்று எம்மையே நோகடிக்கலாம் அல்லது அடுத்தவரை நோகடித்த அதே வார்த்தை பிறிதொரு சந்தர்ப்பத்தில் நமக்கே பொருத்தமாகிப்போய் நம்மை கலங்க வைக்கலாம்.


    உதவுதலும் உதவியை நாடுதலும்



    உதவுதலும் உதவியை நாடுவதும்மனித வாழ்வு என்பது ஒரு சங்கிலி

    .ஒருவரோடு ஒருவர் பின்னப்பட்டு ஒருவர் வாழ்வில் ஒருவர் தேவைகள் பிணைக்கப்பட்டுக்கிடக்கிறது.ஒருவருக்கு ஒருவர் சார்ந்து வாழ்வது என்பதுதொழில் ரீதியாக சமூக செயல்பாடுகளின் கீழாக என்று பல்வேறு வகைப்படும்

    .ஆனால் நாம் பேசப்போவது குடும்பங்கள் உறவினர் நண்பர்கள் சுற்றம் போன்ற நடைமுறைகளை மட்டுமே.

    அன்பர்களே

     தனக்கு மிஞ்சித்தான் தானம், ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு,தர்மம் தலை காக்கும் என்பவன போன்றவற்றை அறிந்திருப்பீர்கள்.உதவி செய்தாக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது .அது அவரவர் மனநிலையையும் தகுதியையும் பொறுத்தது.அதைவிட ஒருவர் தன் கடின உழைப்பால் கடின முயற்சியால் தன் பிரச்சனைகளை எவ்வளவு தீர்க்க முடியுமோ அவ்வளவு தீர்த்தாக வேண்டும் .அதையும் மீறி உதவி தேவைப்படும் தருணத்தில் சுமூகமான முறையில் அடுத்தவர்கள் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு உதவி கேட்டுக்கொள்ளலாம். அது அவர்கள் செய்யாத பட்சத்தில் அதை தப்பாக எடுத்துக்கொள்வது முட்டாள்தனம்.

    அதற்குமுன் நாம் அறிந்துகொள்ள வேண்டியது, பண உதவி என்பது மிக முக்கியமாக பரவலாக காணப்படும் ஒரு விடயம்.நம்மைப்போலதான் எல்லோருக்கும் பிரச்சனைகள் தேவைகள் விரிந்து செல்கிறதுஎன்பதை மனத்தில் வைக்க வேண்டும்.எந்த ஒரு உறவையும் நட்பையும் பிரிக்கும் சக்தி இந்த பணத்துக்கு உண்டு.ஆகவே முடிந்தளவு இந்த உதவியை நாடுவதை தவிர்ப்பதே நல்லது.உலகில் அதிக முறைகேடான சம்பவங்களும் கொலைகளுக்கும் அடித்தளமாக பணம் காரணமாக இருப்பதை அறிவீர்கள்.இந்த உதவியை நீங்கள் கூசாமல் கேட்பவர்களாக இருந்தால் உங்களைக்கண்டு மற்றவர்கள் அருவருப்படைவார்கள்.இத்தோடு கேட்பவர்களை பரிதாபபட வைக்க வேண்டும் என்பதற்காக  சிலர் கவலைகள் சிரமங்களை மட்டும் ஒருவரோடு பகிர்ந்து கொள்வார்களானால்அந்த  உரையாடலில் பிறருக்கு சலிப்பு ஏற்பட்டு விடும்அடுத்தவர்கள் தங்களிடம் உதவி கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் முன்கூட்டியே தங்களை தாழ்த்தி யாருக்கும் எந்த உதவியும் செய்யக்கூடிய நிலையில் நான் இல்லை என்பதை தெரியவைக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தம்மைஇயலாதவர்கள் போல் காட்டிக்கொள்ள கற்பனைக்கதைகள் சம்பவங்கள் என்பவற்றை உபயோகித்துக்கொள்வார்கள்.தங்கள் எந்தவொரு சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.பயப்படுவார்கள்.இவ்வாறு நீங்கள் வெளிப்படுத்திக்கொண்டிருப்பது உங்களோடு எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்திக்கொண்டிருக்கும் உறவுகளை நீங்கள் இடையூறுக்குள்ளாக்குவது போலாகும்.

    தாரளமாக நீங்கள் உங்கள் மகிழ்ச்சிப்பக்கங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.அதை வைத்து அவர்கள் உங்களிடம் உதவிக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் தேவையில்லை.அவ்வாறு உங்கள் மகிழ்ச்சிகளை வைத்து நீங்கள் பகிர்ந்து கொள்வதை வைத்து உங்களிடம் உங்களுக்கு செய்ய விருப்பமில்லாத, செய்யமுடியாத, உங்கள் தகுதிக்கு மீறிய, உங்களை சிரமத்துக்கு உள்ளாக்கக்கூடிய ,உங்களை வருத்தக்கூடிய உதவியை அந்த நபர் நாடுபவராக இருந்தால் அந்த உறவு சுமுகமான நல்ல உறவு கிடையாது நீங்கள் தாரளமாக மறுப்பு தெரிவித்து அளவோடு பழகிக்கொள்ளலாம்.

    அடுத்து நம்மை விட தாழ்ந்தோர் படைப்பின் வசத்தால் உதவி தேவைப்படுபவர்கள் உழைத்துவாழ தகுதியிழந்தவர்கள் போன்றோருக்கு நம்மால் முடிந்த சிறிய உதவிகளை செய்வது என்பது நம் மனதிற்கும் வாழ்வுக்கும் சிறப்பையும் அமைதியையும் தரும்.

    ஆனால் நம் போன்ற சக மனிதர்களின் ஏற்றத்தாழ்வுகளில் பங்கெடுத்து உதவி செய்வாதாக இருந்தால் பலனை எதிர்பார்க்காமல் உதவியை செய்வதே உறவைப்பிரிக்காமல் இருக்கும்.பிரதி பலனை எதிர்பார்த்து செய்வதாக இருந்தால் யாருக்கு செய்யப்போகிறோமோஅவர்களது செயற்பாடுகளைக்கவனித்து நம்பகத்தன்மையை பெற்ற பின் ஆழமறிந்து காலைவிடுவதே சிறப்பு.முக்கியமாக நல்ல மனத்தோடு ,உதவி பெறுவதில் உள்ள மனநிலையையே நாம் உதவி செய்வதிலும் பெற்றுவிட்டால் எந்தப்பிரச்சனையும் கிடையாது.

    -பூமணி மகள்-

    {சுரேஜினி பாலகுமாரன்}


    மாத்தி யோசி

    .நீங்கள் பேசுவதை எல்லாம் உங்களுடடைய உடலிள்ள செல்கள் பதிந்து வைத்திருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.நீங்கள் நல்லதையே பேசும்போது உங்கள் சிந்தனைகள் மாற்றம் பெறும் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.தெளிந்த மனம் உருவாகும்.உண்ணும் உணவை விட பேசும் பேச்சில் அதிக கவனம் வையுங்கள்.உதாரணமாக நீங்கள் பணக்கஷ்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு நெருக்கமான ஒருவர் ஒரு பொருளோ வீடோ வாங்குகிறார் .அது உங்களுக்கு உறுத்தலாக இருக்கும்

    .எதுவரை?????

    நீங்கள் ,

     ””அப்படியா நல்ல விடயம். யாராக இருந்தாலும் நல்ல நிலையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்துவது நல்லதுதானே என்ற வார்த்தைகளை வாய்விட்டு உச்சரிக்கும் வரை.

    ஆம் உங்கள் கஷ்டங்களை போக்க பாடுபட வேண்டியது நீங்கள்தான் அதைவிடுத்து அடுத்தவர் கஷ்டப்பட்டு முன்னேறும்போது அங்கலாய்ப்பது உங்கள் மனத்தூய்மையை நீங்களே கெடுத்துக்கொள்வதாகும். நாம் அடிக்கடி நம்மைப்பற்றி சொல்லும் பொயான வார்த்தைகள் உண்மையாவதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.அதனால் வாழ்வை மாற்ற வார்த்தைகளை மாற்றுங்கள்.


    மாத்தி யோசி

    என்னை ஒருவர் நோகடிக்கிறார் என்பது தவறான குற்றச்சாட்டு.என் அனுமதி இன்றி என்னை யாரும் நோகடிக்க முடியாது என்பது காந்தி சொன்னது.நம்மை நோகடிக்கும் சந்தர்ப்பத்தை பல வழிககளில் நாமேதான் பிறருக்கு உருவாக்கிக்கொடுக்கிறோம்.அந்த உரிமையை நம்மிடம் இருந்துதான் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது உண்மை.அடுத்தவரை நோகடிக்கும் அற்ப குணம் படைத்தவர்களின் தரத்திற்கு நாமும் பயணிக்கும் போதுதான் அவர்கள் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் செவிமடுத்து மதிப்பளிக்கும் வேளையில்தான் நாம் வார்த்தைகளாலுல் செய்கைகளாலும் நோகடிக்கப்படுவோம்.இதையும் மீறி யார் யாருக்கு என்னென்ன இடம் யாருக்கு இவ்வளவு எல்லை யார் உறவை நெருக்கப்படுத்துவது யாருக்கு எவ்வளவு இடைவெளியை நம்மிலிருந்து ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று பகுத்தறிந்துநல்லனவற்றில் அதிகம் கவனம் செலுத்தி முற்போக்குடன் சிந்தித்து அடுத்தவர் வாழ்வில் அநாவசியமாக உரிமையெடுத்து அவர்கள் தனிப்பட்ட விடயங்களை ஆராய்வதும் அறிந்து கொள்ள முற்படுவதிலும் தேவையற்ற வாக்குவாதங்களிலும் சிக்காமல் நடப்போமானால் நம்மை யாரும் நோகடிக்க முடியாது

    நோகடிப்பவரைப்பற்றியோ புண்படும் அந்த வார்த்தைகளை சேர்த்து வைத்து நம்மில் மீட்பதற்கோ நம் மனங்களில் ஒரு இடத்தையோ நேரத்தையோ ஏற்படுத்திக்கொள்வது நாமேதான்நல்ல சொல் சிந்தனைகள் செயல்கள் நல்ல வார்த்தைகள் புறம் சொல்லாமை போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நம்மில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நாமே நம்மை மகிழ்வாக வைத்திருக்க முடியும்.யார் வார்த்தைகளையும் கண்டு கொள்வதும் அதுபற்றியே நமக்கு மதிப்பளிப்பவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பதுவும் நமது வேலையாக இருக்காது.அடுத்தவர்களைப்பற்றி தவறாக சிந்திப்பதும் பேசுவதும் நம் மனதை நாமே அழுக்கடையச்செய்வதாகும்.ஆகவே இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை விட இனிமேல் நீங்கள் உங்கள் மனதையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசமாக வைத்திருக்க விரும்பினால் அடுத்தவர்களில் உள்ல நல்ல குணங்கள் செயல்களை மட்டுமே பேசுங்கள் .அவர்கள் தீய குணங்களை உங்களில் வரவிடாமல் விரட்டுங்கள்.


    மாத்தி யோசி

    /நாள்தோறும் நாள் தோறும் நான் எல்லாவிதத்திலும் முன்னேறி வருகிறேன் என்ற வாக்கியத்தை திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தால் பதின்மூன்று வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த நோயாளி ஒருவர் பூரண குணமாகி எழுந்து நடந்தார்//

    ஒருவர் தனது ஆழ் மனதுக்கு இடும் கட்டளைகளே குணங்களாகவும் விருப்பங்களாகவும் எதிர்பார்ப்புக்களாகவும் உருவெடுக்கின்றன.

    சாதரண உணவுப்பழக்கவழக்கங்களிலேயே இந்த உணவு எனக்கு ஒத்து வராது என்பது வேறு அது ஒவ்வாமை.ஆனால் இந்த உணவு எனக்கு பிடிக்காது என்பது  வேறு .

    95 வீதம்பிரச்சனைகள்  நாமே உருவாக்கி பின்பற்றும் ஒரு கற்பனை.

    இதே போன்று நமக்கு வரும் பிரச்சனைகளில் பாதிக்கு மேல் நாம் கற்பனை செய்து கொள்பவையே. 


    Friday 20 January 2017

    கிட்ஸ் யூ ட்யூப்


    குழந்தைகளுக்கு போன் ,ஐ பாட்  இவையெல்லாம் கொடுக்கலாமா கொடுக்க கூடாதா என்று எல்லா அம்மாக்களும் மாதிரி எல்லாத்தையும் ஒளித்துத்தான் வைத்திருந்தேன்.

    ஆனால் குழந்தை வளப்பு சம்மந்தமாக ஒரு ப்ரோகிராமில் மீட்டிங்
    போனபோது ,
    சந்தேகம் குழப்பம் என்று பெற்றோர் கேட்ட முதல் கேள்வி அதுவாக இருந்தது.

    குழந்தைகள் போன்,ஐபாட் க்கு மிகவும் ஆசைப்பட்டு அடம்பிடிக்கிறார்களே கொடுக்கலாமா????

    அதற்கு அவர்கள் பதில்

    ஆம் கொடுக்கலாம் .ஒரு நாளுக்கு 1 மணித்தியாலங்கள் வரை தாராளமாக அவர்களை உங்கள் கண்காணிப்பின் கீழ் அனுமதிக்கலாம்.


    இப்போது விஷயத்திற்கு வருகிறேன்
    குழந்தைகளுக்கு யூ ட்யூப் ல் நர்சரி ரைம்ஸ் பிளே பண்ணினால் முதலில் வழக்கம்போல விளம்பரங்களை கடக்க வேண்டியது உங்களை நிச்சயமாக எரிச்சலூட்டும்.அதுவும் சில விளம்பரங்கள் அருவருப்பானவையும் பயமூட்டுவனவாகவும் இருக்கும்.

    என் மகளுக்கு ஒருநாள் விழுந்த காயத்திற்கு மருந்து போட வேண்டி இருந்தது அவளை அழாமல் திசை திருப்ப யூ ட்யூப் ல் ரைம்ஸ் பிளே பண்ணி விட்டு தொடங்குவோம் என யூ ட்யூப் ல் ஜானி ஜானி யெஸ் பாப்பாதான் பிளே பண்ணினேன்.ஆனால் அதற்கு முன்னர் ஒரு விளம்பரம் வந்திச்சே ஹோய் ஹோய் ஹோய் என ஒருவர் சத்தமாக முரட்டு குரலில் கத்திக்கொண்டு பாப்கோனை வாய் நிறைய அதாவது வாய்க்குள் அடங்காமல் வெளியே கொட்ட கொட்ட திணிப்பார்.

    ஓ வென்று கதறி கதறி அழத்தொடங்கிவிட்டாள் மகள் .அடுத்த மகளும் ஓடி வந்து அதை பார்த்து விட்டு சேர்ந்து அழுது என்னை மூச்சு முட்ட வைத்ததும் இல்லாமல் தொடர்ந்து ஒரு 4 நாளா அதே மாதிரியே சாப்பாட்டை வாய்க்குள் திணிப்பாள்.

    இது மட்டுமன்றி வீடியோ எடுத்து கொடுத்துவிட்டு குளிக்க போய் வந்தால் ஒருநாள் ரைம்ஸ் க்குள் யாரோ கூடாத வீடியோ வை அப்லோட் பண்ணி வைத்திருக்கிறார்கள் .அதை இவள் பிளே பண்ணவும் நான் ஐ பாட் ஐ வாங்கவும் சரியாக இருந்தது.
    உடனே ரிப்போட் செய்து விட்டு குழந்தைகள் பார்க்க பாதுகாப்பாக என்ன வழிகள் இருக்கிறது என்று அதையெல்லாம் செய்து கொண்டு இருக்கையில் என் கண்ணில் பட்டது இந்த கிட்ஸ் யூ ட்டியூப்.




    யெஸ்ஸ்ஸ் சாதரண வீடியோக்களுக்கு நாம் செய்யும் பெற்றோர் பாதுகாப்பு எல்லாம் செய்து
    வடிகட்டி
    வயது எல்லைகள் பிரித்து 
    விளம்பரங்கள் இல்லாமல்
    நேரம் கணிப்பிட்டு கொடுக்கக்கூடியதாக
    வீடியோக்களை லிமிட் பண்ண கூடியதாக
    பாஸ்வேர்ட் அமைக்க கூடியதாக
    வீடியோக்கள் சம்மந்தமாக ஈமெயில் பெறக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
    பிள்ளைகள் அடிக்கடி பார்ப்பது எப்போதும் முன்னால் காண்பிக்கும் தேட தேவையில்லை.
    அப்ப் பெயர் YT Kids.
    ஒரு வருடமாக யூஸ் பண்ணுகிறேன் நிறைய கற்றுக்கொள்கிறார்கள் இதன் மூலம்.

    Wednesday 7 September 2016

    டவிட்டு


    கான்சர் க்கு மருந்தை கண்டு பிடித்தார்  எயிட்ஸ் க்கு மருந்தை கண்டு பிடித்தார் என்ற செய்தி அடிக்கடி செய்திகளில்
    கண்டுபிடித்தவர்களின் படங்களுடன் வருகிறதே.
    அந்த மருந்து மாத்திரையை வைத்து குணப்பட்டார் என்று சொல்லி யார் படமும் செய்தியும் வருவதில்லையே ஏன்???
    இந்த எக்ஸாம் ல ஸ்டேட் பர்ஸ்ட் வந்த புள்ளைகள் எல்லாமே, நான்  படிச்சு டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன் அப்டி காலம் காலமா பேட்டி மட்டும் குடுக்கிற மாதிரிதான் இதுவுமா?????

    அறிந்ததில் வலித்ததும் அடிக்கடி ட்ரைவ் பண்ணும்போது மிரட்டுவதுமாய் ஒரு சம்பவம்


    போனவாரம் என் ஹஸ் சொன்ன செய்தி
    அம்மா ஒரு எங்கட நாட்டுக்கார அக்கா அவா ஹஸ்பண்ட் கார் தேவைப்பட்டதால அவரை  வேலைக்கு கொண்டுபோய் விட்டுட்டு  வர வெளிக்கிட்டவாவாம். அப்போ 4 வயசு மகள் தானும் வரப்போறன் எண்டு ரெம்ப அடம்புடிச்சதால  மற்ற பிள்ளைகள் அம்மம்மாவோட வீட்ல நிக்க இந்த 4 வயசு மகளை மட்டும் கூட்டி போனவாவாம் .ஹஸ்பண்ட் ஐ வேலைக்கு விட்டுட்டு வீட்டுக்கு வரும்போது ஆக்சிடண்ட் பட்டு குழந்தை ஒரு ஹாஸ்பிட்டல்  அவாவை ஒரு ஹாஸ்பிட்டல்ல
    அட்மிட் பண்ணினவையாம்

    தகவல் குடுத்து அவா ஹஸ்பண்ட் பாக்க ஓடி வரவும் அந்த அக்கா உயிர் பிரிந்து விட்டதாம்.குழந்தையை பாக்க அந்த ஹாஸ்பிட்டல் க்கு போனபோது குழந்தை உயிரும் பிரிந்து விட்டதாம்.
    எண்ணில் அடங்காத துர் சம்பவங்களை அனுபவித்தும் ,நேரில் கண்டும் ,அறிந்தும்  வலிகளை கடந்து வந்த இனம் என்பதாலோ என்னவோ அடுத்தவர்களின் இழப்புக்களும்  கொஞ்சம் அதிகமாகவே  ஊடுருவுவதை தவிர்க்க முடியவில்லை .

    Wednesday 10 August 2016

    கண்டதும் கணக்கில் கொண்டதும்

    போன வாரம் ஒரு அழகான இடத்திற்கு பிக்னிக் போயிருந்தோம். பரந்து விரிந்த தாமரைக்குளம் ஆங்காங்கே கொக்குகளும்,அன்னங்களும் ,குஞ்சுடன் குடும்பமாக வாத்துக்களும் பவனி
    .
     தடாகத்தில் கால் நனைத்தபடி கரை நெடுகிலும் வரிசையாய் உயரமாக வளர்ந்திருந்த புற்கள்.எதிர்ப்பக்கத்தில் கடல்நீர் ஏரி .நடுவே ஏறிச்சென்று
    கடலை ரசிக்க கூடிய பாலம் .பாலத்தின் வழியே சென்றால் அடர்த்தியற்ற காடு.பறவைகளின் சங்கீதம்.அணில்களின் குறுக்கும் நெடுக்கும் தாவும் குறும்பு.

    இங்கு இப்படி இடங்கள் நிறைய இருக்கிறது. வீட்டில் இருந்து வெறும் 25 நிமிடங்களே.  காலநிலை அறிக்கையில் சூரிய உதயம் 6.55 ற்கு என்று இருந்தது வீட்டில் ஜன்னலூடே மிகவும் ஆவலாக சூரிய உதயம் பார்ப்பார்கள் பிள்ளைகள். அதையே கடலில் நிழல் விழ சூரியனார் ஒளித்திருந்து எழுந்து ஒளிருவதை காண்பிக்க எண்ணி 6.30 மணிக்கு கிளம்புவதாக பிளான் பண்ணி இருந்தோம் .ஆனால் அவர்கள் ஒத்துழைக்கவில்லை8 மணியாகிவிட்டது அந்த இடத்தை அடைய.


    பிள்ளைகளுக்கு வீட்டில் சத்துமா கொடுத்து விட்டு நமக்கு சுண்டல் செய்திருந்தேன்.அதையும் எடுத்துக்கொண்டு வெளியே கோப்பியை வாங்கி கொண்டு போய் காரை உரிய இடத்தில் பார்க் பண்ணும்போது பார்த்தோம்
    பக்கத்து கார்க்காரர்களும் தமிழர் குடும்பம்.ஒரு சிறு பெண்ணை அழகாக அலங்கரித்து சாரி உடுத்தி கூட்டி வந்திருந்தார்கள்.
    அடுத்த காரில் இருந்து பெரிய கமெராவுடன் கமராமென் இறங்கினார்.இப்போது உங்களுக்கு விளங்கி இருக்கும்.
    ஆம் பூப்புனித நீராட்டு விழாவின் தொடர்ச்சியாக நடத்தும் ஸூட்டிங்.

    பிஷ்ஷிங் ஏரியாவில் 10நிமிஷம் பிஷ்ஷிங் செய்ய ரொட் எல்லாம் கொண்டு வந்திருந்தார் என் கணவர்.அவர்களுக்கு இடையூறு கொடுக்க வேண்டாமே என்று கடந்து கடற்கரைக்கே சென்று டெண்ட் அடித்துக்கொண்டோம்.

    அங்கு என் பிள்ளைகள் மண்விளையாடுவதும் குளிப்பதுமாக நிறுத்துவதாக இல்லை.
    மதியம் 12 ற்கு தண்ணியில் இருந்து இழுத்து வந்து சாப்பாடு ஊட்டி விட்டேன்.சாப்பிட்டு விட்டு மறுபடியும் தொடங்கி விட்டார்கள்.
    எங்கே பிக்னிக் போனாலும் வெளியேதான் சாப்பிடுவோம் பொதிகள் சுமப்பதில்லை.ஆனால் கடற்கரைக்கு போனால் எனக்கு வீட்டு சாப்பாடு அதுவும் தமிழ் சாப்பாடு கொண்டுபோய் சாப்பிடவே பிடிக்கும்.எப்படியும் கூலர் பாக்ஸ்,டெண்ட் ,கதிரை  என்று கொண்டு போயாக வேண்டும்.
    அத்தோடு இது ஒரு சுமையாக இருக்காது.எல்லா பொதிகளுக்கும் சில்லுகள் இருக்கும் .அதனால் ஒரு நாளுக்கு தேவையான எல்லாம் கொண்டு போவோம்.


    கணவாய் குழம்பும் ,கத்தரிக்காயும் சோறும் ஹாட் பாக்ஸ் இல் வைத்து எடுத்துப்போயிருந்தேன்.நீண்ட நேரம் தண்ணிக்குள் இருந்ததும் கணவாயையும் சோறையும் நினைக்க நினைக்க கடும் பசி எடுத்தது.
    ஆனாலும் எனக்கு பசி இல்லை பிள்ளைகளை பார்க்கிறேன் நீ முதல்ல சாப்பிடு என்று என் கணவர் சொல்ல ,காலையில் நிறைய சுண்டல் சாப்பிட்டது இன்னும் பசி இல்ல நீங்க சாப்பிடுங்கோ என்று நான் சொல்ல ரெண்டு பேருக்கும்
    தனித்தனியே சாப்பிட மனமில்லாமல் மாலை 3 வரைக்கும் பிள்ளைகளோடு சேர்ந்தே விளையாடிவிட்டு அதற்குமேல் பசி தாங்க முடியாமல் காருக்குள் கூட்டி வந்து சீட் பெல்ட் போட்டு விட்டு காருக்குள் இருந்தே சாப்பிடுவோம் என்று கிளம்பினோம்

    ஓ இப்பதான் கதை ஆரம்பிக்கிறது தண்ணி குடியுங்கோ


    நடந்து வரும்போது பார்த்தால் அதே தமிழ் குடும்பம்.அதே ஸூட்டிங்,அந்த பெண்ணுக்கு 13 வயது இருக்கும் போல ஆம் குழந்தைதான் ,அழுது முகமெல்லாம் வீங்கி கண்கள் சிவந்து இருந்தது.இன்னமும் விம்மல் வந்து கொண்டு இருந்தது.
    அருகில் 10 வயசு இருக்கும் ஒரு குட்டி பெண் ,தங்கை போல் இருக்கிறது .அக்காவின் மேக்கப் செட் ஓ அல்லது ட்ரெஸ் ஓ தெரியவில்லை  வயதுக்கு பொருத்தமற்ற பெரிய டரவலிங் பாக் கை சுமந்து கொண்டு அழும் அக்காவை பரிதாபமாக பாத்துக்கொண்டிருந்தார்.

    அம்மாவோ ஏய் கண்ண துடை. சுழண்டு சுழண்டு ஆடுறது இன்னும் ஆடவே இல்ல அடுத்ததா அதை ஆடு .ம்ம்ம் என்றார் அதட்டலாக.

    எதுவுமே கண்டு கொள்ளாமல் நாங்கள் காருக்குள் வந்து சாப்பிட தொடங்கினோம்.
    அப்போது அந்த தாயார் ,அதுவரைக்கும் போய் திரும்பி ஓடி வா என்பதும்,அந்த ஆட்டம் ஆடு இப்படி ஆடு என்பதும்,நகைகளை மாற்றுவதும்,மேக்கப் போட்டு விடுவதுமாக முடிந்தளவு அந்த குழந்தையை
    டாச்சர் பண்ணிக்கொண்டு இருந்தார்.

    வெள்ளையர்கள் அவரவர் பாட்டுக்கு போனாலும் கொஞ்சம் கூட கவனிக்காமல் போகிறார்கள் என்று சொல்ல முடியவில்லை.
    சற்று நிமிடங்களாவது உற்று நோக்கவே செய்கிறார்கள்.
    கமராமென் முன்னால் ஆடவும்  வேற்று மக்கள் ஒருகணம் உற்று பாக்கவும் அந்த குழந்தை கூனி குறுகி போவது அப்படியே புரிகிறது.
    அம்மாவோ குழந்தையை ஒரு நடிகைபோல் உடனுக்குடன் கூச்சமில்லாமல் நடித்து காட்டும்படி ஏவுகிறார்.

    கமராமென் சொல்கிறார் அக்கா போதும் அக்கா நான் மிக்ஸ் பண்ணி நல்லா செய்து தாறன் ;என
    ஆனால் அந்தம்மாவோ இல்ல தம்பி ஒவொர்நாளுமோ ஒரு நாளுக்குதானே நீங்க எடுங்கோ????????????????
    { காருக்குள் சாப்பாடு மணக்காமல் இருக்க ,கார் மேல் ரூவ்ஃப் ஓப்பன் பண்ணியிருந்தோம்  அதனால் எல்லா சத்தமும் நன்றாக கேட்டது}
    அப்போதுதான் யாரோ பசிக்குது என்று சிணுங்குவது கேட்ட போதுதான் கவனித்தேன் ஒரு குட்டி தம்பியும் நிக்குறார் 6 வயசு இருக்கும்.

    எனக்கு கண்கள் கலங்கி விட்டது.அன்றைய மகிழ்ச்சியில் யாரோ மண்தூவியதுபோல் உணர்ந்தேன்.

    சில பிள்ளைகள் அம்மாக்கள் வேண்டாம் என்றாலும் அலங்கரிப்பதும் சாரி கட்ட சொல்லுவதும் ,விதம்  விதமாக படம் பிடிக்க சொல்லுவதுமாக ஆர்வமாக மகிழ்ச்சியாக விரும்பி ஒத்துழைக்கும் குழந்தைகள்
    இருக்கிறார்கள்.
    என் மூத்த மகளுக்கு ஆசையாக ஒரு கடற்கன்னி ஆடை தைத்தேன்.அணியும் போது அழுதாள் .கழட்டி வைத்து விட்டேன்.ஒரு வயசு முடிய மறுபடியும் போட்டு படம் எடுக்க விரும்பினேன் நோ என்று ஒரே சொல்லு.
    விட்டு விட்டேன்.ஆனால் என் சின்ன மகள் க்கு போட்ட போது பாட்டும் ஆட்டமும் சிரிப்புமாக படம் எடுத்துவிட்டு கழற்றவிடாமல் மறுபடியும் பிடுங்கி தனக்கு வைத்து பார்த்து கண்ணாடி பார்ப்பாள்.

    ஆனாலும் ஒருநாள் ஒரு தெரிந்த குடும்பம் எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்த போது 2  அழகான ஷல்வார் வாங்கி வந்து பிள்ளைகளுக்கு கொடுத்திருந்தார்கள்.சின்னவளுக்கு அணிவித்து அவர்களுக்கு படம் அனுப்பியபோது
    அடடே பெரியவாக்கு அளவில்லியோ? மாத்தி குடுக்கட்டுமோ ? என்று கேட்டதால் அழ அழ போட்டு ஒரு படம் எடுத்தேன்.ஐந்து நிமிடங்கள்தான்.இன்னொருனாள் மடிசார் கட்டினேன் கோவத்தில் குனிந்த படியே இருந்தாள். 4 படம் தட்டி விட்டு
    கழற்றி விட்டேன்.
    ஆனாலும் நான் அழுதேன் மனம் வருந்தினேன் என்று சொன்னேன் அல்லவா அது இதை நினைத்துதான் .
    இதுவும் ஒரு வித சித்திரவதைதான் என்பதை உணர்ந்து கொண்டேன்.
    கதை முடிந்தது எழும்பி போய் தண்ணி குடியுங்கள்.
    இனிமேல் ஒருநாளும் எதையுமே திணிக்க கூடாது என்று சபத்மெடுத்துக்கொண்டேன்.


    Monday 8 August 2016

    இப்போதுதான் ப்ளாக் எழுத ஆசை வந்துள்ளது .இதற்கு முன் எப்போதுமே என் ப்ளாக் ல் அக்கறை  எடுத்தது கிடையாது எப்பவாச்சும் யாருக்காவது உதவும் என்று மருத்துவ பதிவு எதையாவது போஸ்ட் பண்ணி விட்டு சென்று விடுவேன் .சில வருடங்கள் ப்ளாக் ஐ மறந்தே போனேன்.

    ஆனால் வரும் காலங்களில் என் எண்ணெங்கள் சிலவற்றை வெளிப்படுத்தலாம் என்று மறுபடி தொடங்கி இருக்கிறேன் .

    கண்டது காணாதது,கேட்டது,என்னது ,உன்னது என்று தாறுமறாக பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்.


    Wednesday 30 May 2012

    குழந்தை பிறப்பதற்கான நாளை கணக்கெடுத்தல்



    கடைசியாக மாதவிலக்கான நாளுடன் 7 நாட்களை கூட்ட வேண்டும்.
    அதிலிருந்து 3 மாதங்களை கழித்து வருவதே டாக்டர்களால் கணிக்கப்படும் நாள்.
    இது 280 நாட்களை உள்ளடக்கும்.
    இதுவே குழந்தை பிறக்கும் நாளை கணக்கிடும் மிக சுலபமான வழி.

    இதற்கான உதாரணம்

    கடைசி மாதவிலக்கு தேதி செப்டம்பர் 18 என்று வத்துக்கொள்ளுங்கள்
    தேதி +7 அதாவது 18+7=25
    செப்டம்பரில்   இருந்து 3 மாதங்களை கழியுங்கள் அதாவது செப்டம்பர் ,ஆகஸ்ட்,யூலை மாதங்களை கழித்தால் வருவது யூன்.
    உங்கள் பிரசவ தேதி அடுத்த வருடம் யூன் 25

    ஆகவே தேதி+7
    மாதம் - 3
    = பிரசவதேதி

    youtube to usb converter

    எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...