Saturday 4 March 2017

ஆயா சுட்ட வடை

ஒரு ஊரில ஒரு ஆயா ஒரு பெரிய ஆலமரத்து நிழல்ல உக்காந்து 33 வருஷமா வடையா சுட்டுகிட்டு இருந்திச்சாம்.
திடீர்னு அடிச்ச மர்ம புயல்ல ஆலமரம் அடியோட சாய்ஞ்சிரிச்சாம்.
அப்போ ஆலமர நிழல் க்கு பதில் அரக்கர்கள் கூட்டம் ஊசிக்காத்தும் நுழையாமல் மொய்ச்சுகிட்டுதாம்.
அப்போ அங்குட்டு இடையிடையே ஒத்த வடைய ருசிபாத்து திரிஞ்ச நரி ஓண்ணு இனிமேல் வடை பிஸினஸ் நாந்தான் பண்ணுவேன், ஆலமரத்து ஆன்மா சொல்லிகிச்சு நு அடம்புடிச்சுதாம்.
ஆயா க்கு வந்த கோவத்தில வடை சட்டிகளை தூக்கிட்டுபோய் ஏசி ரூம் ல வச்சு பூட்டிகிச்சுதாம்
இதுல கடையும் இல்லாமல் வடையும் இல்லாமல் இடிக்கு மேல இடி விழுந்த வாடிக்கையாளர்களில
ஆயா வடைக்கு உமிழ்நீர் சுரந்தபடி குடையை எடுத்துக்கிட்டு சிலர் ஓட
இப்போதைக்கு கடையை காப்பாற்றியாகவேண்டுமே என்று நரியை தேடி பலர் ஓட...............
கச்சிதமாக கவ்விக்கொண்டாய் போ
இதுல படிப்பினை என்னன்னா சுவர் இருந்தாதான் சித்திரம் வரையலாம். கடை முக்கியம்லே மக்கா
சுரேஜினி பாலகுமாரன்

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...