Saturday 4 March 2017

சங்கோஜம்




அழுக்கும் பகையும் 
பிறன் மீது ஆக்ரோஷமும்
நிரம்பி இருக்கையில்
நின் வெளிப்பாடுகள் மொத்தமும் 
 அதை வாந்தி எடுக்கையில்...........
நிற்க.........
இறந்தபின் உடல் நாற்றம் 
உயிராய் இருப்பவரும் ஏற்றுக்கொளாத போது
நின்னுள் அழுகிப்போயிருக்கும் 
கறைகளின் வாந்தியை
கையேந்தி ஏற்போம் என்று
கனவு காண்கின்றாயோ?????
நழுவுதலே முறையென்று உனை 
புறந்தள்ளி புறக்கணித்துன் நினைவை
புதைத்த இடத்தில் பூமரங்கள்
பூக்கவைத்து தானும் மலர்ந்து நிதம்
வாழ்வாங்கு வாழ்வான்
வாழ்வியலின் அழகை அளந்தவன்.
சுரேஜினி பாலகுமாரன்.

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...