Showing posts with label சோம்பேறி கிச்சன் https://www.facebook.com/somperykitchen/. Show all posts
Showing posts with label சோம்பேறி கிச்சன் https://www.facebook.com/somperykitchen/. Show all posts

Thursday 11 May 2017

யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ்


இது எவ்வளவு விசேஷமானது என்று என் ஈழ மக்களுக்கு சொல்லவே வேணாம்.
இருந்தாலும் நான் செய்ததை என் சொந்த பாஷையிலேயே மாற்றம் செய்யாமல் சொல்லீட்டு போறன்.
ஆயத்தம் செய்யுறதுதான் கஸ்டம் அதனால மெல்ல வீட்டில உள்ள எல்லாரையும் கூட்டு சேர்க்கவேணும்.
கஷ்டமான வேலை முடியவிட்டு ,நான் செய்யுறன் ,வெளிய போங்கோ எண்டு வத்தி விட்டுட வேணும்.


தேவையானவை


5,6 பேருக்கு

ஒடியல்மா 150 கிராம்
நண்டு கால் கிலோ
இறால் கால்கிலோ
கணவாய் அரை கிலோ
பயித்தங்காய் 100 கிராம்
மரவள்ளி கால் கிலோ
முருக்கை இலை கொஞ்சம்
பலாக்கொட்டை 100 கிராம்
குத்தரிசி 2 கைப்பிடி
மீன் தலை கால் கிலோ
உள்ளி 10 பல்லு
மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்
செத்தல் மிளகாய் 20 { உறைப்பு பார்த்து தேவைப்பட்டால் இன்னும் சேர்க்கவும்}
புளி ஒரு டேபிள் ஸ்பூன்
ஆயத்தம்


1.ஒடியல் மாவை தண்ணீரில் ஊற வைத்து கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை மேலே உள்ள தண்ணியை ஊற்றிவிட்டு புது தண்ணி மாற்றவும்
கயர்ப்பு போக 3 தடவையாவது இவ்வாறு செய்யவும்
2. தண்ணீரில் உள்ள ஒடியல் மாவை துணியால் பிழிந்து தண்ணீரை நீக்கி எடுத்து 1 கப் புது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்
3...மீன் ,நண்டு ,இறால் , கணவாய் எல்லாவற்றையும் சுத்தம் செய்து வைக்கவும்.
4..பயிற்றங்காய்,மரவள்ளி ,பலாக்கொட்டை ,முருக்கை இலை இவற்றையும் சுத்தம் செய்து வெட்டி வைக்கவும்
5.. உள்ளி,மிளகாய்,மிளகு மூன்றையும் அரைத்து வைக்கவும்
6.. புளியை கரைத்து வைக்கவும்
செய்முறை


அடுப்பை மிதமான வெப்பத்திலயே வச்சிருங்கோ
தேவைக்கேற்ற மாதிரி அப்பப்போ தண்ணியும் ,உப்பும் சேர்க்க மறக்க கூடாது.
1.வீட்ல உள்ளதில பெரிய பாத்திரமா ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும்.
2. 4 கப் தண்ணி விட்டு பயிற்றங்காய் ,பலாக்கொட்டை,அரிசி மூன்றையும் வேக வைக்கவும்
3. கொஞ்சம் வெந்து கொண்டு இருக்கும் போது கணவாய் ,நண்டு ,மீன் சேர்க்கவும்
4. ஒரு 5 நிமிஷம் வேக விட்டு மரவள்ளி ,இறால் ,முருங்கை இலை மூன்றையும் போடவும்
5. கொதித்து எல்லாம் வெந்து வரும்போது அரைத்து வைத்திருக்கும் உள்ளி ,மிளகு,மிளகாய் கலவையை சேர்க்கவும்
6. இப்போது எல்லாம் வெந்த பிறகுதான் புளி சேர்க்க வேண்டும்.
7. புளி மணம் போக 5 நிமிஷம் மெல்லிய ஹீட் ல கொதிக்க வச்சுட்டு ஒடியல்மா கரைசலை சேர்க்கவும்
ஒடியல் மா சேத்த உடன அடிப்பிடிக்க பாக்கும் கவனமா கிண்டி விட்டு அடுப்பை அணைக்கவும் { நோஓஓஓ அடுப்பை கட்டிப்பிடிக்க குடாது யுடும் ]





Stress Relief Ball


மன அழுத்தங்களும் ,மனப்பதட்டங்களும் அப்பப்போ எல்லோருக்குக்கும் வந்து போவதுதான்.
இயலாமையில் புலம்பவும் செய்வோம் ,ஆனால் புலம்புதல் விடுதலை கிடையாது. எல்லா டென்ஷன்களையும் வாய்விட்டு பொதுவெளியில் 
புலம்பத்தொடங்கினோமானால் அதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தை தொடர வேண்டி மனம் ஒவ்வொரு துரும்பு பிரச்சனைகளையும் தன்னுள் ஆழப்பதிய வைக்கத்தொடங்கிவிடும்.
இது நிச்சயமாக மன உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலே.அதற்காக எந்த துன்பத்தையும் பகிரக்கூடாது என்பது அர்த்தமல்ல .எல்லாத்துன்பங்களையும் பகிர்ந்து கொண்டே இருக்கக்கூடாது என்பதே.
கண்டிப்பாக சில துயரங்களை பகிர்ந்து ஆறுதல் பெறுதல் அவசியம்.
Stress Relief Ball .இது நிச்சயமாக எல்லோரும் வைத்திருப்பீர்கள்.ஆனால் அடிக்கடி எங்கே வைத்தோம் என்று மறந்து விடுவோம்.
ஒரு வித ஜெலியினால் ஆனது .உள்ளங்கைக்குள் அடங்கியும் அடங்காத வழு வழுத்த இந்த பந்தை கையில் வைத்து பிசைவதன் மூலம் 
மனப்பதட்டம் ,மன அழுத்தம் என்பன குறையும்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும் 
.உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கிடைக்கும் .
தசைகள் வலுப்பெறும்.
இரத்தோட்டம் சீர் பெறுவதால் தூக்கம் வரவும்,தலைவலி ,உடல்வலி குறையவும் உதவும்
கோவத்தை கட்டுப்படுத்தும்.


குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம் ஹாண்ட் ரைட்டிங் அழகாகும் என்பார்கள்.
பலருக்கு ஒரே நேரத்தில் அதிக வேலைகள் பார்த்துவிட்டு ஓய்வெடுக்க பிடிக்கும் அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் நேர்த்தியாக சிந்திக்க வேண்டி, வேலைகளுக்கு நடுவே இதை உருட்டலாம்.
வேலைக்கோ ,அப்பொயிண்ட்மண்ட் க்கோ நேரம் கடந்தாலோ மட்டுமட்டாகிப்போனாலோ படபடப்பை குறைக்கவும் இதை யூஸ் பண்ணலாம்
இப்படி பல தேவைக்கு யூஸ் பண்ணலாம்தான் ஆனால்
எங்கே என் ஸ்ரெஸ் பால்? எங்கே என் ஸ்ரெஸ் பால்???? என்று தேடவே இன்னொரு டென்ஷன் கிளம்பும்.
பட் இதை நீங்கள் அப்பப்போ சட்டென்று செய்து கொள்ளலாம்
தேவையானவை
மைதா மா அல்லது பேக்கிங்க் சோடா 
சிறிய பலூன்
ஃபுனல் {funnel}அல்லது பேப்பர் கோண் 
{பேப்பரை படத்தில் காட்டியதுபோல் கோன் ஆக சுருட்டி முனையில் சிறிது வெட்டி விட்டு கோன் கலையாதவாறு ரேப் ஒட்டலாம்}
பலூன் உள்ளே மாவை செலுத்தி தொய்வு இல்லாமல் இழுத்து முனையை கட்டி விடுங்கள்.கட்டிய முனையை வெட்டாமலும் விடலாம் .வெட்டுவதாக இருந்தால் அருகே வெட்ட கூடாது. 
பந்தை உருட்டும்போது கட்டு அவிழ்ந்து விடும் .பலூன் சிறியதாக இருந்தால் வெட்டத்தேவையே இல்லை.
அவ்வளவுதான்.
கடையில் வாங்கிய ஒரு ball பழையதானதும் வெட்டி பாத்தேன் உள்ளே பேக்கிங் சோடாவேதான்.அதனால் நாங்களே செய்து கொள்ளலாமே.

மழலைகளை போட்டோ எடுப்பது எப்படி????

மழலைகளை போட்டோ எடுப்பது எப்படி????
நாமெல்லாம் இப்போது ஒரு நாளுக்கு 50 போட்டோஸ் எடுத்தாலும் நம் மனசு பொக்கிஷமாக நினைப்பது என்னவோ நம் சிறுபிராயத்து போட்டோக்களைத்தான்.
ஒரு குறிப்பிட்ட வயதுவரை நமக்கு அதன் அருமை தெரியாது .அதன் பின் அதில் ஏற்படும் ஈர்ப்பு எப்போதும் தீராது.
அதிலும் நாம் மழலையாக இருக்கும்போது எடுத்த போட்டோவாக இருப்பின் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்வோம்.
இதே போல் நம் குழந்தைகளுக்கு நல்ல நினைவுகளை கொடுக்க நாம் இப்போதே சிந்தித்து அவர்களின் மழலைத்தனங்களை மழலை முகங்களை நிதானமாக அழகாக படம் பிடிக்க வேண்டும்.


இதற்கான என்னால் முடிந்த சில டிப்ஸ்
1.குழந்தைகளை படம் பிடிக்கும்போது Dslr camera தான் மிகப்பொருத்தமானது என்பதை நினைவில கொள்ளுங்கள். 
அவர்களை நெருங்காமல் இடையூறு கொடுக்காமல் எடுத்துக்கொள்ளலாம்.தெளிவாக இருப்பதோடு மாற்றங்கள் செய்யவும் அளவை பெரிதாக்கவும் என நிறைய விஷயங்கள் இந்த dslr camera மூலமே சாத்தியம்.
2.அவர்கள் எப்போது ஜாலியாக இருப்பார்களோ அந்த நேரத்தை ஸூட்டிங்க் ற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள்
தூங்கு முன்,தூக்கத்தில் இருந்து விழித்த ஒரு மணிநேரத்திற்குள் ,பயணங்களின் பின், பசி எடுக்கும் நேரம்,நன்றாக சாப்பிட்டு 1 மணிநேரத்திற்குள் எல்லாம் போட்டோ எடுப்பது குழந்தைகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.
3.குழந்தைகள் கமராவை பார்க்க வேண்டும் என ஒருபோதும் எதிர்பார்க்க கூடாது.அவர்கள் போக்கில் விட்டு நீங்கள்தான் விரைவாக அவர்கள் திரும்பும் பக்கத்திற்கு ஓட வேண்டும்.
4.குறிப்பிட்ட நேரத்திற்குள் சுறுசுறுப்பாக எடுத்து முடிக்க வேண்டும்.


5.குழந்தைகளை அடிக்கடி கையால் தொட்டு தொட்டு ஆடைகளையும் அணிகலன்களையும் தலைமுடியையும் நேர்த்தி செய்யக்கூடாது .முதலே சிந்தித்து ஒரே தடவையில் அலங்காரம் செய்து விட வேண்டும்
6.கையால் அமுக்கி வைத்து எடுப்பதும் எப்போதும் நல்ல போட்டோ கொடுக்காது. அவர்களுக்காக ஒரு இருக்கையோ கம்பளமோ வசதி செய்து கொடுக்க வேண்டும்.
7. நாங்கள்தான் அவர்களுக்கு ஏற்றால்போல் குனிந்து வளைந்து எடுக்க வேண்டும் அவர்களை கன்ரோல் பண்ணக்கூடாது.
8. சிரமம் கொடுக்கும் ட்ரெஸ் ,அளவில்லாத ட்ரெஸ் அதிக ஜுவல்ஸ் எல்லாம் அணிந்து போட்டோ எடுக்க முயற்சிக்க கூடாது.கேர் ஸ்டைல் அவர்களுக்கு சற்றும் இடையூறு கொடுக்காமல் இருக்க வேண்டும்.
எல்லா ஆயத்தங்களும் முன்னரே சிரத்தையாக செய்து சில நிமிடங்களில் ஆயத்தம் செய்துவிட வேண்டும்.
9.சில குழந்தைகள் இயற்கையிலேயே போட்டோ க்கு மறுப்புக்காட்டுவார்கள் .வித விதமான ஆடைகள் அணிய ஒத்துழைக்க மாட்டார்கள்.இவர்களை போட்டோ எடுக்க விரும்பினால் அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிப்போய் எடுக்கலாம்.
அவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை கொடுத்து கமெராவை தூர வைத்து எடுக்கலாம்.
ஆரம்பத்தில் நிறைய குழந்தைகளுடன் சேர்த்து எடுக்கலாம். போட்டோக்கு நன்றாக ஒத்துழைக்கும் குழந்தையை இவர்கள் முன் வைத்து விதம் விதமாக போட்டோ எடுக்கலாம் பின்னர் தானாக பிடித்துபோய் 
அவர்களாகவே காஸ்டியூம் அணிந்து போட்டோ க்கு போஸ் குடுக்க ஆசைப்படுவார்கள். [இந்த டிப்ஸ் 1 வயதிற்கு மேல்}
10 ஹலோவீன் ,கிட்ஸ் பேத்டே பார்ட்டி போன்றவற்றில் அடிக்கடி பங்கெடுக்கும் குழந்தைகள் ஃபோட்டோக்கு மறுப்பது குறைவு என்கிறது ஆய்வு.{1+}
11.குறுகிய.அதிக பொருட்கள் நிரம்பிய இடத்தை தெரிவு செய்யக்கூடாது.


12.வெளிச்சம் தேவையான அளவு இருக்க வேண்டும். கம்ராவுடன் சேர்ந்த ஃப்ளாஷ் இல்லாமல் தனிப்பட்ட லைட் ஆக இருந்தால் லைட் ஐ சட்டென்று இடம் மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.
13.குழந்தை ஒத்துழைக்க மறுத்தால் அத்தோடு நிறுத்தி இன்னொருநாள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
14.ஒரே தடவையில் பல ஷொட் எடுப்பதுபோல் செட்டிங் ல் கொடுக்க வேண்டும்.
15 பெண் குழந்தைகளை மட்டும்தான் அழகழகாக ஃபோட்டோ பிடிக்கலாம் என்று நினைக்க கூடாது .ஆண் குழந்தைகளும் வளர்ந்தபின் மழலை ஃபோட்டோக்களைத்தான் நேசிப்பார்கள்.
அவர்களுக்கும் நிறைய காஸ்டியூம் இருக்கிறது.அழகான ஐடியாக்களை கோர்த்தால் குழந்தைகளுக்கு அழகாக சிரித்தபடியே போஸ் குடுப்பார்கள்.
மகிழ்ச்சித்தருணங்களை அலட்சியம் செய்யாதீர்கள் .நாளை நினைத்துப்பார்க்க மட்டுமல்ல உறவுகளின் நெருக்கம் விலகாமல் இருக்கவும் இதுவே உதவும்.
என் பிள்ளைகளுக்கு நான் ஒருத்தி உருண்டு பிரண்டு வேர்த்து விறுவிறுத்து ஃபோட்டோ எடுக்கிறேன் என்பதே தெரிவதில்லை.தேவையான எல்லாவற்றையும் ஒரு open box இல் எடுத்து வைத்திருந்து நல்ல மூட் பார்த்து விளையாடி விளையாடி
வழக்கமாக ட்ரெஸ் பண்ணுவதற்கும் ஸ்பெஷலா ட்ரெஸ் பண்ணுவதற்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியாதது மாதிரியே சட்டென்று ட்ரெஸ் பண்ணி விடுவேன். எல்லாத்தையும் குறைய நேரத்தில மாட்ற மாதிரி வெட்டி தைச்சு வச்ச்சிருப்பேன்.
ஆயத்தம் பண்ணி அவர்கள் பாட்டுக்கு விட்டு, நான் சிக்கி சின்னாபின்னமாகி கமராவுடன் தவழ்ந்துகூட எடுப்பேன்.
ஆரம்பத்தில் மூத்த மகள் அழுவாள் அவள் பாட்டுக்கு வாண்டாம் போ என்றே விட்டு விடுவேன் .ஒருதடவை மிரட்டியும் பார்த்தேன்.இப்போ நினைத்தாலும் பாவமா இருக்கும்.
ஒருநாள் ஹலோவீன் பார்ட்டிக்கு போகும்போதும் காஸ்டியூம் போட மாட்டேன் என சாதரண ட்ரெஸ் ல் வந்தாள் .ஒரு வெள்ளைக்கார அம்மம்மா சொன்னார் 
வளந்தா பிறகு அட நான் மட்டும் கலோவீன் ட்ரெஸ் ஐ மிஸ் பண்ணீட்டனே அப்டி கவலை வரப்போகுது.பிரின்ஸஸ் ட்ரெஸ் உனக்கு எவளோ அழகா இருக்கும் ??? என்றார்.
அவளுக்கு பிடிக்கவில்லையாம் என்றேன்.
அவர் சொன்ன டிப்ஸ்தான் மேலே உள்ள சில.
இப்போ அக்காவும் தங்கையும் விரும்பி போஸ் குடுக்கிறார்கள்.

ரிப்போர்ட் பண்ணுங்கள்


ஏற்கனவே பேஸ்புக் ல் உங்களுடைய அக்கவுண்ட் அல்லது உங்களுடைய படங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் படங்கள் 
தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் அது உங்கள் கண்ணில் பட்டால் அதே போஸ்ட் இல் உள்ள ரிப்போட் போஸ்ட் எனும் ஆப்ஷனை
அழுத்தி உடனே ரிப்போட் ஃபைல் பண்ணும் ஆப்ஷன் ல் சென்று ரிப்போட் பண்ணுங்கள்.
ஒரு நபரின் படம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் உடனே குறித்த நபருக்குத்தான் சொல்ல வேண்டும் என்றில்லை.நீங்களே ரிப்போட் பண்ணலாம் .ஒவ்வொரு ஆப்ஷன் ஆக கொடுத்துக்கொண்டு போகும் போது நீங்கள் விபரம் எழுதி அனுப்பக்கூடியாதாக 
ஒரு கட்டம் அமைத்திருப்பார்கள்.
அதில் எழுதி அனுப்பினால் உங்கள் முறைப்பாட்டை ஆராய்ந்து கொள்கிறோம் என்று பதில் வரும்.பின்னர் 24 மணிநேரத்திற்குள் ஆராய்ந்து பதிவை நீக்கியோ சம்மந்தப்பட்ட தவறான நபரை நீக்கியோ உங்களுக்கு பதில் வரும்
.
உண்மை கண்டறியப்பட்டு அகற்றும் போது தலைமைப்பதிவைதான் நீக்குவார்கள் .அதனால் எத்தனை இடத்தில் அந்த பதிவு ,படம் பகிரப்பட்டிருந்தாலும் பயமில்லை அதன் பின் அந்த சுட்டி ஓப்பன் ஆகாது.
இது முதல் கட்ட அவசர நடவடிக்கையே .இதன் பின் சம்மந்தப்பட்டவர்கள் புகார் கொடுத்து சட்டப்படி தண்டனை பெற்றுக்கொடுக்கலாம்.
யாரும் தவறானவர்களுக்கு வழிவிட்டு உங்களை தண்டித்துக்கொள்ள வேண்டாம்.
இனிமேல் பேஸ் புக் ல் தலைமைப்பதிவிட்டவரையும் தலைமைப்பதிவையும் மட்டுமன்றி அதை பகிர்ந்தவர்களையும் ப்ளாக் பண்ணும் நடவடிக்கைகள் அமுலாக்கப்போவதாக நியூஸ் ல் பார்த்தேன்.
அறிமுகமிலா நபர்களும் ஆண்களும்தான் ஆபத்தானவர்கள் என்ற எண்ணங்களை கைவிட்டு நெருக்கத்தில் இருக்கும் துரோகிகளிடத்தில் விழிப்பாக இருங்கள்.
அடிக்கடி கூகிள் ல் உங்கள் பெயரை நீங்களே தேடிக்கொள்ளுங்கள் .கூகிள் இமேஜ் ல் உங்களை தேடுங்கள். இது உங்கள் பற்றிய தவறான சித்தரிப்புகள் இருப்பின் காட்டிக்கொடுக்கும்.
யாராவது மேலும் சட்டங்கள் நடைமுறை பற்றி தெரிந்தவர்கள் மேலும் தெளிவு கொடுக்கும் பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சுரேஜினி பாலகுமாரன்
#நிகழ்வுகளின்அதிர்வுகள்

நாசி கோரிங் Nasi Goreng {Indonesian fried rice}

தேவையானவை






எலும்பு நீக்கிய சிக்கன் 100 கிராம்
இரால் 100 கிராம்
முட்டை 2
சாதம் 2 கப்
சோயா சோஸ் 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயத்தாள் 100 கிராம் {spring onion}
வெங்காயம் 1
பூடு 2 பல்லு 
இஞ்சி சிறிய துண்டு
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
காரம் தேவைப்படின் 1 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் சேர்க்கவும்
ஆயத்தம்


1.எலும்பு நீக்கிய சிக்கனை சிறிதாக அரிந்து கொள்ளவும் 
2.முட்டையை உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.
3.இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும்
4.வெங்காயத்தை அரிந்து வைக்கவும்.
5.இரால் ஐ தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.
6.சாதம் தயார் செய்து வைக்கவும்
செய்முறை
1.சட்டி சூடாகியதும் எண்ணெய் விட்டு வெட்டிய வெங்காயம் ,இஞ்சி உள்ளி பேஸ்ட் என்பவற்றை உப்பு சேர்த்து வதக்கவும்.
2.சிக்கன் துண்டுகளையும் இறால் ஐயும் சேர்த்து கிளறவும்.
3. சிக்கன் ,இறால் இரண்டும் வெந்ததும் முட்டையை சேர்த்து கிளறி அதனுடன் வெங்காயத்தாளையும் சோயா சோஸ் ஐயும் சேர்க்கவும்
4.இவற்றுடன் சாதத்தையும் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.


வழமையாக fried rice ற்கு முட்டையை ஆம்லட் ஆக ஊத்தி இரண்டு பக்கமும் திருப்பி வேக விட்டு சிறிய சதுரங்களாக வெட்டி சேர்ப்போம் இதில் கட்டாயமில்லை.விரும்பினால் செய்யலாம்.
மிகவும் சுலபமாக செய்யக்கூடியது .நீண்ட நாட்களாக மறந்து போயிருந்தேன்.மகள் ஜப்பான் போய் வந்து ஞாபகப்படுத்தவும் மறுபடி தொடங்கிவிட்டேன்.எனக்கு புரியாணியை வெறுக்க வைத்தது இந்த 
fried rice தான் அவ்வளவு சுவையாக இருக்கும்




பட்டர் டீ




எல்லோருக்கும் தெரிந்ததுதான் இருந்தாலும் ஒரு சின்ன அறிமுகம்
சுவை மட்டுமல்ல பசியை சுமார் 3 மணித்தியாலங்கள் வரை மறக்கடித்துவிடுவதால் ரெம்பவும் பிடித்துப்போயிருக்கிறது இந்த பேலியோ டயட்டின் பிரதான டீ.
செய்முறை
அரை கப் கொதிநீரில் அதற்கேற்ற தேயிலையை சேர்க்கவும் .
அத்துடன் அரைக்கப் பாலை சேர்த்து 1 டேபிள் ஸ்பூன் {30கிராம்வரை} உப்பு சேர்க்காத பட்டர் ஐ சேர்த்து கப் இல் ஊற்றினால் ம்ம்ம்ம் அருமை.
அல்லது சுடுநீரில் டீ பாக் மற்றும் 30 கிராம் பட்டர் இரண்டையும் 1 நிமிடம் ஊறவைத்து அதனுள் கொதிக்க வைத்த பாலை சேர்க்கவும் .நான் இதனுடன் 1 ஏலக்காய் சேர்ப்பேன்.
10 வருடங்களுக்கு முன் கோப்பி ஷாப் இல் நாங்கள் 15 பேர்வரை கோப்பி ஆர்டர் பண்ணியதில் எனக்கு யாரோ ஆடர் கொடுத்த சுகர் இல்லாத டீ வந்து சேர்ந்துவிட்டது.நல்லாய்த்தானே இருக்கு என்று குடித்துவிட்டேன்.(ஏற்கனவே இனிப்பு
பண்டங்கள் விரும்புவதில்லை}
அதன் பிறகு டீ க்கு சுகர் சேர்த்ததில்லை. வீட்டில் ஹஸ் க்கும் அந்த பழக்கம் தொற்றிக்கொள்ள வீட்டில் இருந்த 2 கிலோ சுகர் வருசக்கணக்காக அப்படியே இருக்க டேட் முடிஞ்சிருக்குமோ என்ற பயம் வந்து தூக்கி குப்பையில் போட்டுவிட்டு
இன்றுவரை வீட்டில் சுகர் க்கு என்று நிரந்தரமாக ஒரு போத்தலும் கிடையாது .பிள்ளைகளுக்கும் அதே பழக்கம்.ஹெஸ்ட் வந்தால் மட்டும் sugar pot இல் இருக்கும் cube sugar அவ்வளவுதான்.
இந்த வெள்ளை சுகரால் உடலுக்கு அதிக கேடு என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் .தவிர்க்க விரும்பினால் சிறிது நாட்கள் டீயில் காப்பியில் தவிர்த்துப்பாருங்கள் பழகிவிடும்.

தமிழ் டைப்பிங்


நம்முடைய லாப்டப் ,பி.சி என்பவற்றில் இருந்து தமிழ் டைப் பண்ண,கமண்ட் பண்ண பல வழிகள் இருந்தாலும் மிகச்சுலபமான வழி NHM Writer ஐ டவுன்லோட் பண்ணி வைத்துக்கொள்ளுங்கள்.


1.google இல் NHM Writer என்று டைப் பண்ணுங்கள் அல்லது முடிவில் இங்கே நான் இணைத்துள்ள லிங் ஐ க்ளிக் பண்ணுங்கள்
2.NHM Writer 2.9 என்ற லோகோ விற்கு பக்கத்திலிருக்கும் டவுன்லோட் ஐ க்ளிக் பண்ணுங்கள்
3. i accept the agreement ஐ ஏற்றுக்கொள்வதாக க்ளிக் பண்ணி ரன் பட்டன் ஐ அழுத்துங்கள்
இவ்வளவும் பொதுவான உங்களுக்கு தெரிந்த விடயம்
மேலும்




4.படத்தில் காட்டியவாறு மொழி கொடுக்க வேண்டிய பாக்ஸ் இல் தமிழ் ஐ தெரிவு செய்யுங்கள்




5.ப்ரோகிராமில் சேமித்துக்கொள்வதாக நெக்ஸ்ட் ஐஅழுத்துங்கள்


6.creat a desktop icon
create a quick launch icon
எனும் இரண்டையும் டிக் பண்ணுங்கள்

7.இப்போது படத்தில் காட்டியவாறு உங்களுக்கு ஒரு பெல் icon இருக்கும்


8.பெல் அடையாளத்தை க்ளிக் பண்ணி alt+2 என்பதை தெரிவு செய்தால் அல்லது வெறுமனே கீ போர்ட் ல் alt+2அழுத்தினால் உங்களுக்கு தமிழ் வேலை செய்யும்.
9.ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டுமாயின் மறுபடியும் அதே alt+2 ஐ அழுத்தினால் ஆங்கில எழுத்திற்கு மாறும்.

10.மிக சுலபம் . amma என ஆங்கிலத்தில் எழுதினால் அம்மா என் நேரடியாகவே தமிழ்படுத்தும்.
என் லாப்டப் இல் பாதியில் ஸ்கிரீன் ஷாட் வேலை செய்ய மறுத்து விட்டது போட்டோ க்ளிக் பண்ணி போட்டு இருக்கிறேன்.க்ளிக் பண்ணுவதற்காக uninstall பண்ணி மறுபடி டவுன்லோட் பண்ணியிருக்கேன் .
சோ தேவைப்பட்டவர்கள் பயன்பெறவும்
உங்கள் எண்ணங்களை தமிழில் வெளிப்படுத்த எழுத்துப்பிழையை நினைத்து பின்வாங்க வேண்டாம். சொல்ல வரும் விடயம் தெளிவாக இருந்தால் போதும் எழுத்துப்பிழைகள் ஒரு பொருட்டல்ல. எவ்வளவு பிழையுடன் எழுதினாலும்
சரியாக வாசிப்பதற்கு எல்லோருக்குமே தெரியும்.
வாழ்க்கை அழகானது யாரும் யாருக்கும் உயர்ந்தவர்களும் அல்ல சளைத்தவர்களும் அல்ல.உங்கள் எண்ணங்களையும் ஆர்வங்களையும் நேசங்களையும் தாய்மொழியைப்போல் வேறு எதிலும் வெளிப்படுத்த முடியாது.
நாங்கள் ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
என்னிடம் சில நேரங்களில் தமிழ் தெளிவு படுத்திக்கொள்ளும் இரண்டு பேரை மனதில் வைத்து எழுதினேன் வேறொன்றுமில்லை.ஆனால் அவர்களுக்கு 4 சர்வதேச மொழிகள் தெரியும் என்பது மேலதிக தகவல்.

salmon with steamed veggies


தேவையானவை
சால்மன் பிஷ் 300 கிராம்
ப்ரோக்லி 150 கிராம்
asparagus 150 கிராம்
பட்டர் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு (ஹிமாலயா பிங் சால்ட்}
மிளகு 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சல் ஒரு டீஸ்பூன்
லெமன் பாதி
மயோனஸ் 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை
1.சிறிது தண்ணீரில் உப்பு சேர்த்து சால்மன் ஐ வேக வைத்து எடுங்கள் .{சால்மன் வெந்த தண்ணீரையும் ஒரு பக்கம் வைத்திருங்கள் }
2.ப்ராக்லி ,asparagus என்பவற்றை சிறிது தண்ணீர் வைத்து ஆவியில் வேக வைத்து வையுங்கள் ( இந்த தண்ணீர் மீதி இருந்தாலும் வைத்துக்கொள்ளுங்கள்}
3.பாத்திரத்தை சூடு பண்ணி அதில் பட்டரைபோட்டு உருகியதும் அதனுள் மிளகு,உப்பு,மஞ்சல் என்பவற்றை சேர்த்து அதனுள் சால்மன் மற்றும் காய்கறிகளை சேர்த்து கலவை எல்லா இடமும் பரவுமாறு திருப்பி
விட்டு எடுத்துக்கொள்ளுங்கள்
4. அதே பாத்திரத்தில் மீன் மற்றும் காய் கறி வெந்த மீதி தண்ணீரை சேர்த்து {நிறைய தண்ணீர் சேர்க்க கூடாது மொத்தம் 1/2 கப் அளவே போதும்} மயோனஸ் ஐ அதனுள் சேர்த்து கரைத்து சாஸ் ஆக எடுத்துக்கொள்ளவும் .
லெமன் சேர்த்து சாப்பிடவும் .


ஈஸி ஈஸி ஈஸி குழந்தைகளுக்கும் பிடிக்கும் .
ஹிமாலயா பிங் சால்ட் பற்றி இன்னொரு நாள் சொல்கிறேன்






இஞ்சி டீ


மழை சீஸன் க்கு எனக்கு ரெம்ப பிடிக்கும் இந்த ஜிஞ்சர் ப்ளாக் டீ.இன்றும் மழையில் நனைந்துவிட்டு வந்து சூடா ஒரு இஞ்சி டீ.


இஞ்சி டீயின் நன்மைகள்
1.தலைவலி ,உடல்வலி,வயிற்று வலி மாத்திரைகள் எல்லாம் எங்கனம் நம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து நம்க்கு ரிலீஃப் கொடுக்கிறதோ அதைவிட எந்த பக்க விளைவும் இல்லாமல் நம் உடலுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து 
நன்மை செய்யும் இந்த இஞ்சி.
2.விட்டமின் A,B,C ,மாக்னீசியம்,கால்சியம் ,சோடியம் எல்லாம் இருப்பதால்தான் டெய்லி உணவில் சேர்க்கிறோம் .ஆனால் அதன் பலனை இரட்டிப்பாக பெற விரும்பினால் நீர் அல்லது சுடுநீரில் சேர்க்கவேண்டும்.
3.உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கவல்லது.
4.வயிற்றுப்பகுதிகளில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும்.இதனால் உடல் எடையும் கட்டுக்குள் வரும்.
5.உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்


இன்னும் நிறைய நிறைய .....
ஈஸியாக இஞ்சி டீ செய்ய வேண்டுமாயின் நீங்கள் வழக்கமாக தயாரிக்கும் டீ க்குள் நல்ல சூடாக இருக்கும் போது இந்த இஞ்சியை ஒரு துண்டு எடுத்து தோல் நீக்கி சாறை பிழிந்து சேர்த்து குடித்தாலே போதுமானது.
அதிலும் வீட்டில் நீங்களே வளர்க்கும் செடியில் கிடைத்ததாக இருந்தால் மணமாகவும் அதிக காரமாகவும் சுவை அபாரமாக இருக்கும்.



வெஜிடபிள் ஆப்பு



இன்று எனக்கு வெளிவேலைகள் அதிகம் இருந்தது .ஒரு சீஸன் தொட்டதுக்கெல்லாம் வெளிச்சாப்பாடுதான்.காலையில் சிலநேரம் நல்ல கோப்பி வாசனை வரும் .கனவு காண்கிறேனோ என்று நினைச்சு எழும்பினால் .
கோப்பியும் ப்ரேக்ஃபாஸ்ட் ம் ஹஸ் வாங்கி வந்து எழுப்பிய அதிகாலைகள் அதிகம்.
இரண்டு பேரும் சேர்ந்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே ப்ரேஃக்பாஸ்ட் எடுத்துவிட்டு பிரிந்து வேலைக்கு சென்று மதியம் ரெஸ்ராரண்ட் இல் சாப்பிட்டு இரவு சாப்பாடு டேக் அவுட் எடுத்துக்கொண்டு 
வீட்டுக்கு வந்த நாட்களும் அதிகம்.
சமையல் மணமே இல்லாமல் விதவிதமான காண்டில்ஸ் வாசனைகளை மட்டுமே வீட்டில் முகர்ந்த நாட்களும் அதிகம்.
ஆனால் இப்போதெல்லாம் வெளியே டீ தவிர எதையும் சுவைப்பதில்லை.ஒரு டோனட் வாங்குவதென்றால் கூட அருவருப்பாக இருக்கிறது.
மகள் ஒரு செண்ரிம் க்கு பெறுமதி இல்லாத சைனா விளாட்டுப்பொருளுக்காக வாங்குற மக்டோனல்ட் ஹப்பிமீல்ஸ் ஐ வழக்கம்போல என்னிடம் தரும்போது ரெம்ப கடுப்பாகுறேன்.அவளவு அருவருப்பு .
இன்று என் ஹஸ் ;அம்மா சாப்பாடு நீங்க எடுக்குறீங்களா நான் வரும்போது எடுத்து வரவா??? 
என்ன வேணும்????
மீ; நோப் நான் சட்டெண்டு சமைக்கப்போறேன் .
ஹஸ் ; என்னது 5 நிமிஷத்தில எனக்கு ஆப்பு வைக்கிறதுக்குத்தானே ப்ளான் பண்றாய்??? 
மீ; யெஸ்ஸ்ஸ் பாஸ் அதே தான்.....
இதோ இதுதான் இன்று நான் ஹஸ் க்கு வைச்ச வெஜிடபிள் ஆப்பு .இதை சூப் என்றும் சொல்லலாம்.


வெஜிடபிள் சூப்
தேவையானவை
கீரை கால் கிலோ
ப்ரோக்லி கால் கிலோ
தக்காளி கால் கிலோ
வெங்காயம் 1 
பச்சை மிளகாய் 2
நச்சீரகம் 1 டீஸ்பூன்
பூடு 2 பல்லு
மயோனஸ் கால் கப் அல்லது க்ரீம் 
பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு


செய்முறை

1.காய்கறிகள் ,வெங்காயம் ,பச்சை மிளகாய்,பூடு என்பவற்றை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
2..சட்டியை அடுப்பில் வைத்து சூடாகியதும் பட்டரை போட்டு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் ,சீரகம்,பூடு என்பவ்ற்றை உப்பு சேர்த்து தாளிக்கவும்
3..அதனுடன் காய்கறிகள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
4. வெந்ததும் மயோனஸ் ஐ சேர்த்து எலக்ரிக் ப்ளெண்டரால் அடிக்கவும்
மிளகு தூவி சாப்பிடவும் .செம டேஸ்ட் .
அத்தோட இந்த ஒவன் ல வச்சு பொரிச்சு எடுத்த இறால் ம் சேர்த்து சாப்பிட்டால் ம்ம்ம் ஜமி ஜமி.



Tuesday 14 March 2017

சம்பவம் சம்பவம்






டொரண்டோ பெரும்பாகங்கள் எச்சரிக்கையுடன் கூடிய கடும் குளிரை கட்டி அணைத்துக்கொண்டு தன்இறுதி சுற்றுக்கு நகர்கிறது.
அறிவுறுத்தப்பட்டபடி நேற்றுத்தொடங்கி இரவிரவாக பூமியை நனைத்து பகல் பொழுதும் குளிரை அள்ளி வீசிக்கொண்டிருக்கும் வெண்பனியை , வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழி நோக்கமுடியாமல்
கண்ணாடியை பற்றிப்பிடித்து கண்ணை அடைத்தபடி காட்சி அளிக்கிறது பனிக்கோலம் .
வழக்கமான குளிர் கால இரவுச்சுற்றுலாவில் தேனீர் உடன் அழகையும் பருகிவிட்டு 8.30 க்கு இரவுத்தூக்கத்திற்கு வீட்டில் நுழைந்தோம்.
{ஆம் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு லார்ஜ் சைஸ் கோப்பியும் வாங்கிக்கொண்டு இரவின் அழகில் 1 மணிநேரமாவது வலம் வருவோம். திருமணமானதில் இருந்து தொடங்கிய 
இந்தப்பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.]
கதகதகப்பாக அமைதியாக அரவணைப்பாக இருந்தது குளிர்கால இரவுப்பொழுதை உட்கொண்ட வீடு.
தூக்கத்திற்கான ஆயத்தங்கள் முடித்து மெழுகுதிரி வெளிச்சத்தில் அரைமணிநேர உரையாடல் .
அதுவும் முடித்து ,,,,,,
தூக்கம் அன்பாக அழைத்தது.மெல்லிய வெளிச்சத்தில் ஆளுக்காள் இரவு வணக்கங்களின் பரிமாற்றம்.
அழகான தூக்கம்......அதை கலைத்தபடி அருகி வருகிறது அதைவிட அழகான விடியல் ,,,,,, ஆனால் நானோ அவசரமாக ஏதோ கனவு,,,,, கனவில் அருமையான இடம்.
இளவேனில் காலத்தின் இதழ் கொண்டு அசைந்தாடும் இலைகொண்ட மரங்கள்.
இசபாடி இசைபாடி அதன்பாட்டில் இறகுகள் அசைக்கும் பறவைகள்.
மண்ணின்கீழ் கட்டிய வீட்டில் இருந்து வெளியே விளையாடும் சாம்பல் குட்டியை எட்டிப்பார்க்கிறது அம்மா முயல்.
வாலை ஆட்டி விரட்டியபடி வரிசையாக இரண்டு அணில்கள்.
ம்ம்ம்ம் நான் எங்கே நிற்கிறேன். திடீரென்று என்மேல் சாரல் அடிக்கிறது. சல் சல் என்கிறது தண்ணீரின் தவில் இசை.
ஓ நான் அருவிப்பக்கம் குளியல் எடுத்துக்கொண்டிருக்கிறேன் போல் இருக்கிறது.தண்ணீர் இன்னும் கொஞ்சம் அதிகமாக முகத்தில் அடிக்கிறது.
அப்போது ஒரு சத்தம் .ஆம் என் கண்ணான கணவரின் கடும் குரல்தான்.
அம்மா எழும்புங்கோ எழும்புங்கோ அடோரா தண்ணி ஊத்துறாள்.
கொக்கா மக்கா ,பயபுள்ள 4 மணிக்கு எழும்பி பக்கத்தில நைட் டேபிள் ல ஹஸ் வச்சிருந்த ஒன்றை லீட்டர் தண்ணி போத்தலை எடுத்து( போத்தலை விட கொஞ்சம் வளந்துட்டோம் எங்கிற திமிர்தான்]
திறந்து எழும்பி நிண்ட படியே அம்புட்டு தண்ணியையும் நமக்கு ஊத்தி தெப்பலா நனைய வச்சுட்டு கொஞ்சம் கூட நனையாமல் நம்மை பாத்து சிரிச்சாளே என்னத்தை சொல்ல.......அவ்வ்வ்வ்வ்
சரி போனா போகுது நாளைக்கு இதைவிட நல்ல கனவு வராமலா போகுது.







Sunday 12 March 2017

cabbage rolls


போனவாரம் டாக்டர் அப்பொயிண்ட்மண்ட் க்கு போய் வெயிட் பண்ணும்போது , அடடே டயட் ல இருக்கோமே வெளிய சாப்பிடாமல் வீட்டுக்கே போய் 15 நிமிஷத்தில என்ன சமைக்கலாம் ????
அப்பிடி நினைச்சுக்கொண்டே வழக்கம்போல மகஸீன்ஸ் ஐ எடுத்து புரட்டத்தொடங்கினால் இந்த ரெஸிப்பி கண்ணுல பட்டதும் சில வருஷங்களுக்கு முன்னால 
ஒரு க்றிஸ்மஸ் க்கு செய்து எல்லாருமே நல்லாயிருக்கிறதா சொன்னதும் ஞாபகம் வர வீட்டுக்கு வந்து ப்ரீஸர் ல இருக்கிற மீற் ஐ எடுத்தால் டைம் காணாது என்றதால வரும்போதே மீற் ஐ வாங்கி வந்து 15 நிமிசத்தில இது ரெடி.


நீங்களும் செய்து சாப்பிட இதோ ரெஸிப்பி

cabbage rolls
தேவையானவை


காபேஜ் 6 இதழ்கள்
விரும்பிய மீற் அரைக்கிலோ {ground beef}
வெங்காயம் 2
தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன் { விரும்பும் காரத்திற்கு ஏற்ப அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்துக்கொள்ளவும்}
சீரகம் 1 டீஸ்பூன்
Rosemary சிறிது 
இஞ்சி பேஸ்ட் அரை டீஸ்பூன்
உள்ளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
cheddar cheese துருவல் 2 டேபிள் ஸ்பூன்
பட்டர் அரை டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
டுத் பிக் சில



செய்முறை



1. வெங்காயம் ,மிளகாய் ,ரோஸ்மெரி என்பற்றை சிறிதாக வெட்டவும்

2. மீற் க்குள் வெங்காயம் ,மிளகாய் ,சீரகம் ,ரோஸ்மெரி,இஞ்சி உள்ளி பேஸ்ட் ,தனிமிளகாய்த்தூள் ,சீஸ் , உப்பு எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் பண்ணவும்

3.அடுப்பில் பாத்திரத்தை சூடுபண்ணி எண்ணெய் தண்ணி எதுவும் சேர்க்காமல் மிதமான தீயில் மீற் கலவையை வேக வைத்து எடுக்கவும்

4.காபேஜ் ஐ இதழ்களாக எடுத்து இலையின் நடு தண்டை நீக்கிவிட்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்

5.ஸ்டீம் செய்த காபேஜ் இலையை எடுத்து ரெடியாக வைத்திருக்கும் மீற் ஐ அதற்குள் வைத்து சுருட்டி டுத் பிக் ஆல் குத்தவும்

6 .மறுபடி அடுப்பில் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் பட்டரை உருக்கி அதில் காபேஜ் ரோல்ஸ் ஐ ஒரு 15 செக்கன் வைத்து எடுக்கவும்


ம்ம்ம்ம் ஜம்மி






youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...