Thursday 11 May 2017

படமும் கதையும்

நீர் நிலைகள் எப்போதும் அழகுதான் .அதிலும் என்னை கடலை விடவும் அதிகம் கவர்வது இவ்வகையான pond தான்.
அங்கு நிச்சயமாக அன்னங்கள் வாழும் .சின்ன மீன்கள் கூட்டமாக இருப்பதால் எல்லாவகைப்பறவைகளும் இங்கு உணவு தேடி வரும்.
சில வாத்துக்கள் அழகான குஞ்சுகளுடன் வரிசையாய உலக அழகிப்போட்டியில் டிங்கு டிங்கு என 
நடப்பதுபோல் சுத்தி சுத்தி வரும் .
கடும் குளிரிலும்,கடும் பிஸியிலும் இந்த இடங்களை பார்க்க போக தவறுவதில்லை நாம்.தரையில் கால்வைக்க முடியாவிட்டாலும் அதைப்பார்த்தவாறு காருக்கு உள்ளிருந்து ரசித்தபடி கோப்பி குடித்துவிட்டு வருவோம்.
குளிர் நேரத்தில் அதிக பறவைகள் இருக்காது.இந்தியா போன்ற நாடுகளுக்கு போய்விடுமாம்.ஆனாலும் திரும்பி அதே இடங்களில் வந்து லாண்ட் பண்ணுவார்களாம் என்று படித்திருக்கிறேன்.(வேடந்தாங்கல்}
போன வாரம் போயிருந்த போது ஏனோ குஞ்சுகள் இல்லை.இப்போதுதான் குளிர் குறையத்தொடங்கி இருக்கிறது அடுத்த மாசம் கண்டிப்பாக மழலைகளை பார்க்கலாம்.
இவ்வாறான இடங்கள் இங்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
ஆனாலும் கேரளாவில் குடில்களுடன் சேர்ந்தால் போல் அமைந்த pond மட்டும் மனசை விட்டு இன்னும் நகர்வதே இல்லை.


































No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...